புதன், 22 ஜூலை, 2020

ஆடி பூரம் கண்ணாடி வளையல் சிறப்பு


ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கிக் கொடுப்பது மிக சிறப்பு


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த அழகான மாதம்.  இந்தமாதத்தில் வருகின்ற ஆடிப்பூரம் அம்மனுக்குரிய மணி மகுடம் சூடுகின்ற செந்தூர மாதம்.

ஆடிப்பூரத்தன்று அம்மன் தின அபிஷேகத்தில் குளிர்ச்சி கொண்டு அவள் ஆனந்தமாய்  கேட்ட வரத்தை கொடுப்பாள்.

ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு.
'ஆடி பூரம் தீர்க்க சுமங்கலி பவ 'எனும் வாழத்து அம்பிகையிடம்  இருந்து  பெறக்கூடிய நமக்கு கிடைக்கக்கூடிய அற்புதமான நாள்.

ஆடிப்பூரம் அன்று கண்ணாடி வளையல் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானது.


'கண்-ணாடி -வளை-யல்' என்பதன் பொருள் ..

அம்மனுக்கு கண்போன்று   
சிறப்பானஆடி மாதத்தில்
ஒலி ஜதி என கலகலவென
‌'ஆனந்தம் அன்பு பாசம் மகிழ்ச்சி' எனும் வளையத்திற்குள் கட்டுப்பட்ட மிக சிறப்பான இனிப்பான வாழ்வுதனை அம்பிகை அருள்வாள் என்பதை கண்ணாடி வளையலின் சிறப்பு.


அன்றைய தினத்திலே நம்மால் முடிந்த கலர்கலராய் வண்ண வளையல்கள் வாங்கி கொடுக்கலாம் .மாலையாக அம்மனுக்கும் சாற்றலாம். சிகப்பு பச்சை கலர் அதில் கண்டிப்பாக இருப்பது உத்தமம் .கோவிலில் அன்றைய தினத்திலே பெறுவதும் அளிப்பதும் மிகவும் சிறந்தபலனை கொடுக்கும்.

வெளியே போக முடியாத சூழ்நிலை இன்று. முன்பே ஐயரிடம்கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுக்கலாம். பூஜை அறையில் வைத்து வேண்டி நம் கைகளில் அணிந்து கொள்ளலாம்.



கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள் ..

சிறப்பு 1 குழந்தைகள் கண்ணாடி வளையல்கள் அணியும்போது அறிவும் ஆற்றலும் கூடும்.

சிறப்பு- 2  திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

சிறப்பு- 3  சுமங்கலி பெண்களுக்கு என்றும் சுமங்கலியாய் வாழ்வதற்கு தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

சிறப்பு -4 குடும்பத்தில் மன வேதனை பிரச்சனை அனைத்தும் இருக்கும் பெண்கள் இந்த நாளில் கண்ணாடி வளையல்கள் அணிந்து கொண்டால் கை கண்ட பலன் கிடைக்கும்.

சிறப்பு -5 ஆடிப்பூரம் அன்று நாகசதுர்த்தி என்பதால் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.நாக புற்றுகள் உள்ள இடத்தில் இரண்டு அகல் தீபம் விளக்கேற்றவும்.

அம்மனை வேண்டி கை வளையல்கள் அணிந்து கொள்ளுங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்.

கண்ணாடி வளையல்கள் பெண்கள் எப்போதும் கைகளில் அணிந்திருந்தால்
அந்த வீட்டில் என்றும் மகிழ்ச்சி நிலவும். 

சொந்தமாய் வீடு மனை அமையச் திருச்செந்தூர் வழிபாடு🙏🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/02/blog-post_99.html

சொந்தமாய் வீடு மனை 🌹🍀அமைவதற்கான 10வழிபாட்டு முறைகள்
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



கண்ணாடி வளையல்கள் நமக்கு கூறும் தத்துவம் தனை ஆடிப்பூரம் இன்று அறிந்து கொள்க..

 கண்ணாடி உடைந்தால் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது . அதுபோன்று வாழ்க்கையும் என்பதை உணர்க.. பார்த்து பார்த்து பொறுமையாக லாவகமாக குடும்பத்தை வழிநடத்த
வேண்டும் -தவறினால் அந்தக் குடும்பம் உடைந்த கண்ணாடி போன்றதே- என்பதையும் அறிக.

படிக்க -படித்த பின் நுகர்க- நுகர்ந்த பின் சிந்திக்க- சிந்தித்த பின் சித்தம் தெளிக- தெளிந்த பின் நடக்கும் செயல் அனைத்தும் இனிதே .



ஆடி பூரம் அன்று அம்பாள் ஊஞ்சல் உற்சவம்'  கண்முன்னே காண கண் கோடி வேண்டும் ' கண்களை மூடிக்கொண்டு அரை நிமிடம் ஆனந்த கோலம் தானே நாம் காணலாம்.

வீடு குடி போகும் பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டியவை 🌹🙏🍀👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post.html


 அலை அலையாய் வண்ண வண்ண மாலைகள் தொங்குதம்மா தாலேலோ! உளமெல்லாம் கண்ணால் காண காண அளவிலா மகிழ்ச்சி ததும்புதம்மா தாலேலோ!
பச்சை பட்டுடுத்தி பவளவாய் மலர்ந்த மதுரமாய் சிரிக்கின்றாள் தாலேலோ!
 மூக்குபல்லாக்கு ஜொலிஜொலிக்க  முத்து பவளம் வைர‌நகை மின்னுககையில் அதைக்கண்ட நம் மனமும் மலர்ந்திடவே தாலேலோ!
மல்லிகை மலர் மாலை கழுத்தினிலே  அலங்கரிக்க மங்களமாய் ஆடுகின்றாள் தாலேலோ!
 பழத்தட்டோ  பலவிதமாய் கண்ணாடி வளையல் மஞ்சள் குங்குமம் தாலி சரடு தனி அழகை நாம் காண என்ன தவம் செய்தேனோ தாலேலோ!

இனிய தெய்வீக கருத்துக்களை அனைவரும் அறிய பகிர்ந்து கொள்வது வாழ்வினில் என்றும் இனி தன்றோ!

தங்கள் கருத்துகளை பதிவு செய்க

Copy rights rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக