வாழ்வினில் அமைதி கண்டு மகிழ்ச்சி நிலவுவதற்கான செய்யக்கூடிய 10 வழிமுறைகள்..
ஞான படகில் ஏறி பாவக்கடலை முழுமையாக கடந்துவிட முடியும் என்கின்றது பகவத் கீதை .
இளமையில் ஆயிரம் பாவங்கள் செய்கின்ற ஒருவன் - பெற்ற தாயை பெரிது படுத்தாத ஒருவன் -நேசிக்கும் தந்தையின் பொருட்டென மதிக்காத ஒருவன்- கட்டிய மனைவியின் மனதை புரிந்து கொள்ளாத ஒருவன்- முரடன் திருடன் என மூலைமுடுக்கெல்லாம் பேசப்படும் ஒருவன் -என பெயரெடுத்த பாவி ஒருவன்..
ஞானம் பெற்று விட்டால் தன்னுடைய பாவ கடலில் இருந்து முழுமையாக கடந்து விடலாம் என்கிறது பகவத் கீதை
பாவம் செய்ய மனமிலாது - பாவத்தின் நிழல் படிந்த இடத்தில் பிறந்து விட்டோம் என நிம்மதி இழந்து தவித்த அசுரன் ராவணனின் சகோ விபீஷணன் என்பது எல்லோரும் அறிந்ததே ..அவரே ராமனின் பாதம் தனை பக்தியோடு பற்றி மோட்சம் அடைந்த வரலாறும் நாம் அறிந்ததே..
பாவம் விலகி நிம்மதி பெற்று புண்ணியம் பெறுவதற்கான
ஞானம் பெறுவதற்கான 10 வழிமுறைகள்..
1- யாகம் நடத்துக- யாகம் நடத்தும் கோவில்களில் யாகப்பொருட்களை வாங்கிக் கொடுக்க- அவை தம் கைகளை புனிதப்படுத்தும்.
2 - யாம் செய்த தவறுதனை தான் உணர்ந்து கண்ணீர் மல்க தவம் செய்க.
3 - பெற்ற தாய் தந்தை மற்றும் கண் முன்னே காணும் பெரியார் என அனைவருக்கும் மனம் வந்து பணிசெய்க.
4 - வயதிற்கேற்ப விரதம் உபவாசம் இருந்து -வசதிக்கேற்ப பூஜைக்கு செலவு செய்து- புண்ணிய பலன்கள் அனைத்தும் தான் பெருக .
5 - மனவடக்கம் புலனடக்கம் யார் மனதும் புண்படாத பணிவடக்கம் தான் கொண்டு சிந்தித்து செயல்படுக .
6 - கங்கை- காவேரி- யமுனை திரிவேணி என புண்ணிய தீர்த்தத்தில் ஒருமுறை நீராடி -புனிதனாக மாறுக.
7 - பரமாத்மாவின் பாதமே சரணம் என விடாது பற்றி அவன் அருள் பெறு வதற்கு இடைவிடாது முயற்சி செய்க.
8- ஸ்லோகம் பூஜை புண்ணியம் தானம் தர்மம் என -தான் செய்த தவறுக்கு மிகப்பெரிய சௌந்தரியம் தானங்கள் பல செய்து பரிகாரம் தேட வழிவகுக்க.
9 - செய்த தவறு தெரிந்து விட்டால் அந்த தவறை எங்கே என உணர்ந்து அதை முதல் சரி செய்க.
10- அகங்காரம் மமகாரம் அனைத்தும் விலக பெற்று- அன்பு ஒன்றில் பலம் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் ஆற்றலை
நீர் பெருக.
துளசி பயன் அறிந்து மகிழுந்து வாழ்வில் வளம் பெற 🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2019/10/blog-post.html
தம்பதியர் என்றும் ஒற்றுமை நிலவே வாழ்க்கை இனித்திட 🌹🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_30.html
மனிதன் தவறு செய்வது இயல்பு செய்த தவறை நினைத்து வருந்திய தருணத்தில் பாவக் கணக்கில் இருந்து விடுபட முடியும் என்கின்றது பகவத்கீதை.
ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பகவத்கீதை அவசியம் இருத்தலின்..
சிறப்பு குழந்தை முதல் பெரியவர் வரை படிப்பது என்பது -அவரவர் விருப்பமே ஆனாலும் ..
குழந்தை முதல் பெரியவர் வரை பகவத்கீதையை தொட்டு 10 நிமிடங்கள் கைகளை வைத்து கண்களை மூடி பெருமாளை நினைத்து தியானம் செய்க.. குழந்தைகளையும் அதுபோலவே செய்ய சொல்க .
பகவத் கீதை கையில் வைத்திருந்தால் படிக்காமலேயே நல்ல எண்ணங்கள் பெருகும் .உள்ளேயிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உங்கள் மனதில் பதிந்துவிடும் .
நல்லது செய்வீர் .தவறுகள் செய்யாமல் நன்மையை அடைவீர்.
மேற்கூறிய 10 இந்த வழிமுறைகளை பின்பற்றி புனிதமான மனிதனாக மாறி -புவியெல்லாம் புகழ் பெற்று புண்ணிய தர்மங்கள் தான் பெற்று தெய்வத்தின் அருள் பெற்று- நிம்மதி வாழ்க்கை தனை அடைந்து மனித பிறவியின் பயனை அடையலாம்.
படித்து- படித்த பயனை அடைந்து அடைந்த பயனை பகிர்ந்து- 10 பேருக்கு நன்மை செய்யும் வாழ்க்கை என்றும் இனிதன்றோ!
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக