வியாழன், 16 ஜூலை, 2020

திருச்செந்தூரில் முருகப்பெருமான் நகை அலங்காரம்

திருச்செந்தூரில் முருகன்  அபிஷேக கோலமும் நகை அலங்காரம் திருக்கல்யாணம்


தெய்வீக அருளுரை எழுதுவது ஆனந்தம் என்றால் படிப்பது பேரானந்தம் அன்றோ! இன்பத்தை இவ்வையகத்தில் அனைவரும் பெறுக..


தித்திக்கும் தேன் தமிழ் படிக்க படிக்க இனிதன்றோ! அத் தமிழில் முருகனின் உரை தனையே கண்டு களிப்போம்..

கண்ணாடிக்கும் முருகனுக்கும் ஒரு கணக்கு உண்டு- படிப்பதற்கு முன்பாக முகம் பார்க்கும் கண்ணாடியின் சிறப்பை பார்ப்போம்


தலைவாசலிலில்  உள்ளே வருபவர் தெரியும் வண்ணம் ஆளுயர கண்ணாடி வைப்பது சிறப்பு. தலைவாசல் வழியாக உள் நுழையும் மகாலட்சுமி எதிர்பார்வையில் கண்ணாடியில் தன் முகம் தெரிவது கண்டு மகிழ்ந்து தங்கி தெய்வீக வாசம் புரிவாள்.

 அதிகாலை துயில் எழுந்து முதல் பார்வை- முகம் பார்க்கும் கண்ணாடியாக இருப்பது சிறப்பு என்பதையும்  அறிந்து கொள்க.


 அதனால் ஏற்படும்  நன்மைகள்
சிறப்பு -1 காலை எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்த்தல் சிறப்பு நம் அகத்தின் எண்ணங்கள் முகத்தில் பார்க்கையிலே -நாம் எப்படி நம்மை மாற்றிக் கொண்டால் அகமும் முகமும் அழகு பெறும் எனும் தெளிவு கிடைக்கும்.

 சிறப்பு -2 எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகள் பெருகும்.

 சிறப்பு- 3 கண்ணாடியின் பிரதிபலிப்பு சக்தி- பிரபஞ்ச சக்தியாக  நம் உடலில் ஊடுருவி புத்துணர்ச்சி கிடைக்கும்.

 சிறப்பு- 4 நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.

சிறப்பு - 5  தெய்வ அருள் கிடைக்கப்பெற்று வாழ்வினில் செல்வ வளம் பெருகும்.


தினமும் கண்ணாடியில் முகம் பார்ப்பது பெரிதன்று- அகம் பார்ப்பது தான் பெரிதென்றோ! என்று நமக்கு உணர்த்துகின்ற ஒரு அற்புத நாளே..
முருகப்பெருமானின்  சூரசம்ஹாரம்.

முடிந்த மறுநாள் முருகனின் திருக்கல்யாண திருவிழா நடக்கும்  இடம் திருச்செந்தூர்.

வாழ்வினில் சுபிட்சம் தரும் அருகம்புல் வழிபாடு🌹🍀🌹🙏🙏🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/blog-post_11.html

இல்லறத்தில் இனிமை காண இனிய சில வழிமுறைகள் 👩‍🦰🌹👩‍🦰🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_30.html

ஜடா மகுட கோலத்தில் எங்கும் காணமுடியாத நகையலங்கார கோலத்தில் காட்சி தரும் இடம் திருச்செந்தூர்.

130 அடி உயர கோபுரத்தை பார்த்து அக்கணம் வாழ்ந்த பயனை அடைந்த மகிழ்ச்சி அடையும் 

இடம்தான்  திருச்செந்தூர்.


கடல்நீரிலே கந்தா சரணம் சரணம் என முருகனோடு மனமொன்றி மூழ்கி நெகிழ்ந்து உருகும் வரம் கிடைத்த இடமன்றோ திருச்செந்தூர்.



 அந்த தெய்வீக இடமான திருச்செந்தூரில்..

அகத்தின் அழகு முகத்திலே மலர்ந்தனாய் -ஆறுமுகம் ஒருசேர தங்க முகம் ஜொலித்தனாய்- தாமரை பூத்த இதழ் சிரித்தாட சிங்கார வேலவனாய்- சிந்தையெலாம் குளிர்ச்சி தரும் சந்தனம் மேனி கொண்டவனாய்- ஆழமான பார்வையிலே அனைவரையும் கவர்ந்தவனாய்- காட்சி தரும் கார்த்திகேயன் திருக்கல்யாண கோலம் நடக்கும் அற்புதமான தலமும் திருச்செந்தூரே..

சொந்தமாய் வீடு அமைவதற்கு
திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு 🍀🌹🌹🌹🌹🌹👇👇👇




திருக்கல்யாணம் நடக்கும் அன்றைய தினத்திலே அதிகாலையில் ஆனந்தமாய் தமக்கு நடக்கும்  அபிஷேக காட்சி தனை கண்ணாடியில்  தானே கண்டுகளிக்கின்றான்  அழகன் அவன்.

அடுத்து முருகப்பெருமானின் நகை அலங்காரம் நடைபெற்று திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறும் அந்த காட்சி இதனை க கண்குளிர கண்டு களிப்போர் வாழ்வினில் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பை அடைவார்கள்.



தினமும் ஒரு பத்து நிமிடம் தெய்வத்தை நினைத்து அகத்தில் விளக்கேற்றி அற்புத தெய்வீக காட்சிகளை நம் கண்முன்னே நிறுத்தி தெய்வத்தை வணங்க தேனினும் இனிய வாழ்வுதனை நாம் பெறலாம்.



வெளியே போக முடியாத சூழலில் வீட்டிலேயே எதிரே ஆளுயர கண்ணாடிதனில் முருகப்பெருமானின் அபிஷேகம் கோலம்- நகை அலங்காரம் திருக்கல்யாணம்  அனைத்தும் அகக் கண்ணால் கண்டு, வாழ்க்கையில் அனைத்து சிறப்புகளையும் பெற்று வளம் பெறுக.


இனிவரும் காலம் எல்லாம் கவலைகள் அனைத்தும் பறந்தோடும். புண்ணிய பலன்கள் நம்மோடு உறவாடும். பூஜா பலன்கள் அனைத்தும் ஒருசேர உவகையில் மனம் மகிழ்ந்தாட - வாழ்வினிலே வசந்தம் கரைபுரண்டோட -முருகனின் அருளை பெறுவோம்.. வாழ்வினில் வளம் அனைத்தும் காண்போம்.

முருகனை வணங்குவதற்கு முன்பாக வணங்கக்கூடிய காவல் தெய்வம்🙏🌹👇👇👇👇

சொந்தமாக வீடு மனை வாங்க வேண்டும் என்று எண்ணம் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும் .அந்த எண்ணம் முழுமையாக பூர்த்தியாக 'சொந்தமாக வீடு கட்ட வேண்டிய தெய்வீக வழிபாடுகள்' எனும் புத்தகம் அமேசானின் கிண்டில் app ல் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து படித்து அதன்படி வழிபட்டு வாழ்வினில் சிறப்பு பெறவும்🙏🙏🌹🍀🌹👇👇👇👇👇




Copyy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக