சூரிய நமஸ்கார ஆன்மீக பூஜை வழிபாடு சிறப்பு..
சூரிய பலம் அடையபெற்றோர் வாழ்க்கையில் சாதனை படைப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள் .அந்த பலத்தை நாம் பெறுவதற்கு சூரிய நமஸ்கார பூஜை செய்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
ஆடி போய் ஆவணி வந்தால் அனைத்தும் நடப்பதெல்லாம் நன்மைக்கே ..என்பது பெரியவர்கள் வாக்கு .
அதற்கு முக்கியமான காரணம் ஆவணி மாதத்தில்தான் தன்னுடைய சொந்த வீட்டில் சூரிய பகவான் அமர்ந்து ஆட்சி செய்யக்கூடிய நேரம்
என்பதால் அனைத்து ராசியை உடையவர்களும் இந்த சூரிய நமஸ்கார பூஜையை செய்து வாழ்க்கையில் அனுகூலம் பெறலாம்.
சூரிய நமஸ்கார பூஜை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து முடிந்துவிட்டால் - நாம் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றியை தரும்.
நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும்- என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும் .
அந்த எண்ணங்கள் விருப்பங்கள் எல்லா ராசிக்காரர்களுக்கும் நிறைவேறக்கூடிய அருமையான மாதம் இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை.
நாம் நினைத்ததை நடத்தக்கூடிய ஆர்வம் வரக் கூடிய அருமையான மாதம் இந்த ஆவணி மாதத்தில் சூரிய நமஸ்காரம் வழிபாடு.
நம்முடைய நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் - திறமைகள் வெளிக்கொணர்ந்து அனைத்து செயலாக்கத்திற்கும் - இந்த சூரிய நமஸ்கார பூஜை கண்டிப்பாக நல்லதொரு தொடக்கமாக இருக்கும்.
ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பூஜையில் தொடங்கலாம்.. அல்லது ஒவ்வொரு மாதங்களில் வரும் அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரக் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த சூரிய நமஸ்காரம் பூஜையை செய்யலாம்.
சூரியன் என்றால் நல்ல பிரகாசம் கொடுக்கக்கூடிய ஒரு நவக்கிரகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் விசேஷமானது..
எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் மனதளவில் வருத்தம் இருக்கலாம். மனதளவில் சோர்ந்து இருக்கலாம் .பணப்பிரச்சனை குடும்பத்தில் மனக்குழப்பம் உடல்நலக்குறைவு- படிப்பில் நாட்டம் இல்லாது இருக்கும் குழந்தைகள் என எந்த கவலை இருந்தாலும்..
இந்த சூரிய நமஸ்கார பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர- கைமேல் பலன் காணலாம் .
சூரிய நமஸ்காரம் பூஜை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்..
யார் வேண்டுமானாலும் இந்த பூஜையில் மேற்கொள்ளலாம்.. ஞாயிற்றுக்கிழமை காலையில் கங்கா ஸ்நானம் செய்த பிறகு -பூஜை அறையில் மலர் வைத்து இரண்டு நெய்தீபம் ஏற்றி வைக்கவேண்டும்.
சூரிய ஓரை காலை 6 -7
சூரியனுக்கு உகந்த நேரம்- சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நல்ல தருணம்.
சூரிய ஒளி உடலில் படுமாறு சூரியனின் பார்வை நம் மீது படுமாறு 10 நிமிடம் நின்று நமஸ்காரம் செய்யலாம் .வெளியே அல்லது நம் வீட்டு மொட்டை மாடியில் கூட இந்த வழிபாடு செய்யலாம் .
சூரியனின் முழுமையான அனுக்கிரகம் நமக்கு கிடைக்க அருமையான ஸ்லோகம்
சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் அச்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
11 முறை அல்லது 27 முறை சொல்ல வேண்டும் .உங்கள் குழந்தைகளையும் சொல்ல வைக்கலாம். சொல்லி முடித்தவுடன் கிழக்கே பார்த்து சூரியனை வணங்கி நமஸ்காரம் செய்யுங்கள். இதுதான் சூரிய நமஸ்கார வழிபாடு .
இந்த சூரிய நமஸ்காரத்தின் போது ஒரு சொம்பில் ஜலம் எடுத்துக்கொண்டு சூரிய தேவனின் பார்வை படும் இடத்தில் ..நாம் சூரிய தேவனை நமஸ்காரம் செய்யும் இடத்தின் அருகில் வைத்து ..
பிறகு அந்த நீரை எடுத்து குடிப்பதால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் . நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகி நாம் வாழ்க்கையில் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த எளிமையான முறையை பின்பற்றுங்கள்.
செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை வழிபாடு 🌹🍀🌹👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_21.html
அதனால் ஏற்படக்கூடிய பலன்கள்..
1- உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கும்
2- குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீரும்
3 - சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
4 - பண வரவு கிடைக்கும்.
6 - கண் பார்வை பளிச்சென்று இருக்கும் .
மூன்றாம் பிறை சந்திர தரிசன வழிபாட்டு பூஜை பலன்களை காண்போம் 🌹🍀🌹
முளைத்து வரும் தானியங்கள் போன்று வாழ்க்கை சிறப்பாகி -முத்து போன்ற நன்மக்களை ஈன்று வாழ்க்கையை இனிதே நடத்தி வாழ்வினில் இனிது காண்கவே.
மேலும் படிக்கலாம் -தோஷங்கள் நீக்கி வாழ்வில் வளம் பெற கல் உப்பு தீப வழிபாடு 🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக