வியாழன், 2 ஜனவரி, 2020

வைகுண்ட ஏகாதசி விரத முறை

வைகுண்ட ஏகாதசி விரத முறை


நம்முடைய உடலும் மனமும் தூய்மையாக்கி-

நல் வழி பாதையிலே நம்மை கொண்டு சென்று..

வாழ்க்கையின்  முடிவிலே நமக்கு மோட்சத்தை கொடுக்கக் கூடிய அருமையான விரதமே வைகுண்ட ஏகாதசி விரதம்.

வைகுண்ட ஏகாதசி


சிறப்பு -1 மார்கழி மாதத்தின்  சுக்லபட்சம் என்று சொல்லக்கூடிய வளர்பிறை திதியில் பதினோராவது நாளான அன்று வரக்கூடிய ஏகாதசியே  வைகுண்ட ஏகாதசி .

சிறப்பு - 2 வைகுண்டத்தில் பள்ளிகொண்ட பெருமாள் -

தமக்கு பிடித்தமான மார்கழி மாதத்திலே -பரமபத வாசலான  சொர்க்க வாசலின் வழியாக -

தம்முடைய பக்தர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய விடிகாலை வேளையிலே- அற்புதமாக காட்சி தந்து அருள் பாலிக்கின்றார் என்பதே வைகுண்ட ஏகாதசி சிறப்பு.

சிறப்பு -3  சூரியன் வானத்தில் ஒளி கொடுப்பதைப் போன்று ..

ஏகாதசி அன்று
வைகுண்ட பெருமாள் நம்முடைய அகக்கண்களை  திறப்பதற்கு ஒளியை கொடுப்பதற்காக -

வருடத்தில்  ஒருநாள்பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

சிறப்பு -4 அன்றைய  சிறப்பான தினத்திலே பெருமாளின் தரிசனத்தில் ஒளியை பெற்றுக் கொண்டு -நம்முடைய அகத்திலே நிறைந்து இருக்கும் நல்ல எண்ணங்களின் பிரதிபலிப்பின் நிறைவு கண்டு-  மற்றவர்களுக்கும் ஒளி கொடுப்பேன் என்பதில் உறுதிகொள்க.

சிறப்பு-5  அன்றைய சிறப்பான தினத்திலே  அதிகமாகப் பேசாது  -மனதிலே பெருமாளின் நாமத்தை ஒலித்துக் கொண்டே இருந்தோம் ..என்றால் வாழ்க்கையின் முடிவில் நமக்கும் பெருமாளின் இடமாகிய  மோட்சத்தில்
இடம் உண்டு என்பது திண்ணம்.


எல்லா விரதத்தையும்  விட மிக சிறந்த  வாழ்க்கையில் எல்லாவித நன்மைகளையும்- சிறப்புகளையும் கொடுக்கக்கூடிய இந்த ஏகாதசியன்று மூன்றுவிதமான விரதமுறைகளை பின்பற்றலாம் ..

விரதத்தின் வழிமுறை-1


சிறப்பான வைகுண்ட ஏகாதசி அன்று துளசி கொண்ட குளிர்ந்த நீர் கொண்ட  தீர்த்தத்தை மட்டும் நாள்  முழுதும் எடுத்துக்கொண்டு..

 பெருமாளின் திருநாமங்கள் உச்சரிப்பது..

விரதத்தின் வழிமுறை -2
 ஏகாதசியின் முதல் நாளன்று ஒருபொழுது உண்டு ..

மறுநாள்  உப்பு சேர்க்காது - கேசரி இனிப்பு கொண்டு பெருமாளுக்கு படைத்து  சாப்பிடலாம்.

அவல் தேங்காய் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.. முக்கியமாக உப்பு சேர்த்தல் கூடாது.

 இரவில் பால் பழம் என எடுத்துக்கொண்டு - இரவு முழுதும் கண்விழித்து பெருமாளை நினைத்து
 வழிபட்டு ..

மறுநாள் துவாதசி அன்று - 21 காய்கறி கொண்டு சமைத்து பெருமாளுக்கு படைத்து உண்டு பாரணை செய்வது அதாவது விரதத்தை முடிப்பது சிறப்பு.

விரதத்தின் வழிமுறை -3

புலால் உணவு விடுத்து-

அளவுக்கு அதிகமாக உண்ணாது - மிதமான உணவு எடுத்துக் கொண்டு.. பெருமாளை நினைத்து வழிபடும் விரதம் .

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் வயதிற்கும் ஏற்றவாறும்  -சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இதில் எந்தவிதமானவிரதத்தையும் மேற்கொள்ளலாம்.

இந்த மூன்று விதமான விரத முறைகளும் தெய்வத்திற்கு மிக உகந்தவை .


இதிலே அனைவரும் மிக உறுதியாக இருக்க வேண்டிய விஷயம்..

1- இந்த மூன்று நாட்களும் கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு .

கங்காஸ்நானம் என்பது-

விடிகாலை  ஸ்நானம் செய்யும் பொழுது

ஒரு குவளை ஜலம் எடுத்து ..

மோதிரவிரலால் 'ஓம்' என்று எழுதி..

 அந்த நீரை கங்கை நீராக மனதிலே நினைத்து தலையில் ஸ்னானம் செய்வது சிறப்பு.

பலன் -நினைத்த  காரியம் ஜெயமாகும்

2- ‌ பெருமாளின் நாமத்தையே இந்த மூன்று நாட்களும் உச்சரித்தல் சிறப்பு. உடலும் மனமும் தூய்மையாக அவன் புகழ் பாடி விரதம் மேற்கொண்டால் பெருமாளின் அருளும் நல்ல வாழ்க்கையும் -வாழ்வினிலே சிறப்பும்  விரதத்திற்கான முழு பலனும் நிச்சயம் நமக்கு கிடைக்கும் .

3- ‌ முடிந்தவர்கள் மூன்று நாட்களும் பெருமாளை தரிசனம் காண்பது சிறப்பு.

ஏகாதசிக்கு  முதல் நாள் மோகினி அவதாரத்தில் பெருமாள் மிக அழகாக காட்சி தருவான்.

ஏகாதசி அன்று பெருமாள் தாயாரோடு அற்புத அழகோடு  காட்சி தருவான்.


துவாதசி  அன்று ஊஞ்சலிலே   பள்ளிகொண்ட பெருமாள் ஆக காண்பதற்கு கண் கோடி அழகு - என பெருமாளின் தரிசனம் நம்முடைய தீவினைகள் அகன்று புண்ணியங்கள் பல கோடி தரும் .


மார்கழி மாத பாவை நோன்பு ஆண்டாள் பாடிய திருப்பாவை 'மாதத்திலே மார்கழியாக நானே திகழ்கின்றேன்' எனும் கிருஷ்ணனின் கீதை உபதேசம் என சிறப்புமிக்க இந்த மார்கழி மாதத்திலே..

தினமும்ஒரு பாசுரம் பாடுபவர் உண்டு
30 பாசுரங்களும் சேர்த்து தினம் பாடுவோரும் உண்டு .

அனைவருக்கும் கிடைக்ககூடிய புண்ணியங்கள் அனைத்தும் இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒரே நாளில் 30 பாசுரங்கள் பாடும்  அனைவருக்கும் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்போருக்கு ஏற்படும் சிறப்புகள்..

சிறப்பு 1  திருமணம் ஆகாதோர்க்கு உடனே திருமணம் கைகூடும்.

சிறப்பு- 2  இதுவரை தவறு செய்திருந்தாலும் இந்த விரதத்தை மேற்கொண்டு ..

இனி உண்மையாக வாழ்வேன் என  சாஷ்டாங்கமாக பெருமாளின் பாதத்தில் விழுந்து வணங்குவோக்கு  புதிய திருப்பத்தைக் கொடுப்பார் எம்பெருமான் நாராயணன் .

சிறப்பு -3  வைகுண்ட
ஏகாதசியில் விரதம் இருப்போருக்கு நோய்நொடிகள் பிணி தீர்ந்து ஆரோக்கியம் முழுமை பெறும்.

சிறப்பு -  4  உறவுகள் இன்றி வருந்துவோர்க்கு அனைத்து உறவுகளும் ஒன்றுபட்டு ஒற்றுமை மேம்படும்.

சிறப்பு - 5 ‌ மகாலட்சுமியின் அனுகிரகம் பெற்று செல்வ சம்பத்து உண்டாகும் .

கைலாயத்தில் சிவனேசன் வைகுண்டத்தில் ஸ்ரீரங்கநாதன் ...

மார்கழிமாதத்தில் திருவெம்பாவை திருப்பாவை என அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் நினைத்து பெருமாளை மனம் உருகி வழிபடுவோருக்கு என்றென்றும் மனம் மகிழ்ச்சியை கொடுப்பான் எம்பெருமான் நாராயணன்.

 வருடத்தில் ஒரு மாதம் -சிறப்புமிக்க நல் மாதம் -தெய்வத்திற்கு உகந்த மாதம் -பாவை நோன்பு விரத மாதம் கன்னியருக்கு கனிந்த மாதம்- என

சிறப்புமிக்க இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு பெருமாளின் அருளை பெற்று வாழ்க்கையில் பல கோடி புண்ணியங்கள் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

பெருமாளே நின்பாதம்
சரணம் சரணம் சரணம்.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக