செவ்வாய், 17 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் - 2 பாடலும் பொருள் சிறப்புகளும்



திருப்பாவை  பாசுரம் -   2

வையத்து வாழ்வீர்காள் ! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் - மலரிட்டு நாம் முடியோம் - செய்யாதது  செய்யோம்  தீக்குறளை சென்றா தோம் ! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்






திருப்பாவை பாடலின் உள்ள பொருளின் சிறப்புகள்..


சிறப்பு - 1

மார்கழி மாத -பாவை நோன்பு விரத முறை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என பொற்கொடியாள் ஆண்டாள் மிக அன்போடு தோழியர்க்கு  அழைப்பு விடுக்கின்றாள்..

கண்ணுக்கு இனியன் பரந்தாமனை அடைவதற்கு -உணவிலே மட்டுமன்றி மனதையும் கட்டிப்போட வேண்டும்.

இந்த மார்கழி மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே குளிர்ந்த நீரால் நீராடி மனதாலும் உடலாலும் புனிதமாக வேண்டும்  -என்பதே நோன்புக்கு சிறப்பு என கூறி தோழியரை அழைக்கின்றாள்- நம் கோதை.

 சிறப்பு -2

பசு தரும் பாலின் சுவையோ- பால் தரும் நெய்யின் ‌சுவையோ விரதத்திற்கு பலன் தராது- என நாவின் சுவையை அடக்கி விரதம் இருந்தால் பரமனிடம் இருந்து  பலன் அனைத்தும் நாம் பெறலாம்- என கூறி தோழியரை அழைக்கின்றாள்  நம் கோதை .

சிறப்பு - 3

மனதிற்கு அலங்காரம்  தேவையன்று தீய செயல்களை மனதில் நினைக்காது -தீய சொற்களை பேசாது - தீய காட்சிகளை பார்க்காது பிறரைப் பற்றி தவறாக கோல் சொல்லாது நடத்தலே இயற்கையான நம் மனதிற்கு அழகன்றோ!

அதுபோன்று பரந்தாமனை கண்ணால் காணும் இந்த கண்களுக்கு  மை இடுவது தேவையென்று- கூந்தலிலே மலர் அலங்காரம் தேவையன்று..


புனிதமான உடலாலும்- ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி பரந்தாமன் அடைவதற்கு நோன்பு இருக்க வாரீரோ - எனக்கு அழைப்பு விடுக்கின்றாள்.

 சிறப்பு -4 ‌
ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி தூய  மனதோடு ஏழையர்க்கும் பக்தர்களுக்கும் தர்மம் செய்தலே  நோன்புக்கு மிக மிக சிறப்பு- எனக்கூறி தோழியர்க்கு   தம்மோடு நோன்பிருக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றாள்  நம் கோதை.

 சிறப்பு - 5

நல்ல நெஞ்சம் கொண்டு- நல்ல நினைவு கொண்டு -நல்ல சொற்கள் கொண்டு மார்கழி 30 நாட்களும் விரதம் இருந்தால் பரந்தாமன் நம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிடுவான்.


நம் மனதில் நிறைந்து இருப்பான் நினைக்கும் செயல் அனைத்தும் நிகழ்த்திடுவான். வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுத்திடுவான்  என்பது திண்ணம்.  

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக