ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 27
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்;
எதிரிகளை அடக்கி தீமைகளை ஓடுக்கி வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! நின் புகழ் பாடி உன் அருள் பெற வேண்டி நிற்கும் எங்களை காக்க வைக்காது எம்பெருமானே நீ எழுந்திராய் ! என்று மார்கழி மாத குளிரில் பாவை நோன்பிருந்து தன் தோழியர்படை சூழ எழுப்புகின்றாள் கோதை.
'அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது . கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. அணிகலன்கள் மட்டும் போதாது பலவண்ண புத்தாடைகளும் சேர்த்து சீர் கொடுப்பாயாக ' என்று பாடி அழைக்கின்றாள்.
பொருள் இன்றி வாழ முடியுமா! செல்வம் இன்றி வாழ்க்கை சிறப்பு பெறாது ஆதலால் செல்வ செழிப்பும் தாங்கள் பெற வேண்டும் என்று தம்முடைய 27ஆம் பாசுரத்தில் பொருட் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுகிறாள் ஆண்டாள்.
பரந்தாமா! எம்பெருமானே ! நீர் எங்களுக்கு காட்சி தந்து விட்டால் போதும். நாங்கள் விரதத்தை நிறைவு செய்வோம். தோழிகளோடு கூட்டமாய் அளவில்லா மகிழ்ச்சியுடன் நெய் வழிய பால்சோறு உண்போம் என்று பாடி கண்ணனை அழைக்கின்றாள் கோதை.
மார்கழி நோன்பின கிரீடமாய் அமைகின்றது ஆண்டாளின் 27ஆம் பாசுரமான இந்தப் பாடல். இன்றைய கூடாரவல்லி வைபவம் பார்க்க கோடி ஆனந்தம் . பெருமாள் கோவில் ஆண்டாள் தரிசனம் காணக் கிடைக்காத பேரின்பம்.
ஆண்டாள் பாவை நோன்பில் புத்தாடை ஆபரணம் சீர் தந்து நீர் வந்து காட்சி தர .உனக்கு நெய் வழியும் பால் அன்னம் அக்காரவடிசல் என்னும் தேவலோகஅன்னம் நெய்வேத்தியம் படைப்போம் என ஆண்டாள் பெருமானே வேண்டுகின்றாள்.
அவனுடைய வேண்டுதலை ஏற்று பெருமாள் கண்விழித்து எழுகின்றார் அதுவே இன்றைய நாள்.
பாவை நோன்பு முடிந்ததும் நோன்பின் பலன் ஆண்டாள் ரங்கநாதரோடு ஐக்கியமாகிவிட்டாள்.
ஆனால் அவளுடைய கடமையை செய்ய முடியாது போக அதைக் கேள்விப்பட்ட ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாக பிறந்த வீட்டு சீர் அக்காரவடிசல் வெண்ணயோடு சேர்த்து கள்ளழகருக்கு சமர்ப்பித்து ஆண்டாளின் வேண்டுதலை நிறைவு செய்கின்றார். ஆண்டாள் அண்ணா என்று ராமானுஜரின் அழைக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக