ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்.
பாடலின் பொருள் விளக்கம்
தவறு எது சரி எது என்பதை ..சரி பார்த்து கொடுக்கக்கூடிய எம்பெருமான் நாராயணனே பறவையாய் வந்து பகாசுரனினின் வாயைப் பிளந்தார். கொடிய குணம் படைத்த ராவணனின் தலையைக் கிள்ளி எறிந்தார்
அப்படிப்பட்ட மகா புருஷனை வேண்டி பாவை நோன்பு இருக்க நாங்கள் அனைவரும் வந்து விட்டோம் உறக்கம் ஏனடி தோழி! எழுந்து எங்களோடு வருவாயாக.. என்று நினைவுபடுத்துகின்றாள் கோதை.
குரு (வியாழன்) மறைந்து சுக்கிரன்(வெள்ளி) உச்சிக்கு வந்த பிறகும் ஏன் இந்த உறக்கம் ! பறவைகள் கீச்சிடும் ஒலிதனையும் நீ கேட்கவில்லையோ! பூப்போன்ற மானின் கண்களை பெற்றவளே.. குளிர்தனில் நீராடும் சுகம்தனை அறியாது இன்னும் உறக்கம் ஏனோ ! உடனே எழுந்து நீராட வருவாய் என்று ஆவலோடு பாவை நோன்பிற்காக தன் தோழியை அழைக்கின்றாள் கோதை.
சோம்பலை விடுத்து கபடு தனத்தை விடுத்து, எங்களுடன் கலப்பதற்கு எழுந்து வருவாயே ! என்று தன் தோழியரை அழைக்கின்றாள்.
ஆண்டாளுக்கு திருப்பாசுரம் சொல்லிக் கொடுத்தது யார் ! சாட்சாத் எம்பெருமான் நாராயணனே. நாராயணனை மனதில் நினைத்து விட்டால் அவன் புகழ் பாட மனதில் தோன்றிவிட்டால் மாதம் மும்மாரி சுரக்கும் மழைபோல ...பாடல்கள் தானாகவே ஊற்றெடுக்கும்.
அப்படித்தான் ஆண்டாளும் எம்பெருமானை கை பிடிப்பதற்காக பாவை நோன்பு மேற்கொள்கின்றாள். திருப்பாசுரம் எனும் அமுதத்தை முன்மொழிகின்றாள்.
அமுதம் என்றால் என்ன! பதினாறு செல்வங்களும் நாம் பெறுதல் என்பது அமுதம் என்று பொருள்படும் . அந்த அமுதமானது….
ஆர்வம் இருந்தால் தான் கிடைக்கும். பக்தி எழுந்தால் தான் கிடைக்கும் .முயற்சி செய்தால் தான் கிடைக்கும். அதிகாலை அழகான காலை பொழுது, அருகினில் இருக்கும் கோவிலில் பாடல்களின் ஒலியின் நாதம் , உடல் நடுங்கும் குளிரின் சுகம் அதனால் ஏற்படும் மன எழுச்சி கண்டு ஆத்மார்த்தமாய் நாராயணனை நினைத்து தினமும் திருப்பாவை பாடி அமுதம்தனை முழுமையாக நாம் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக