3 - இடைப்பட்ட போக்குவரத்தில் அணுகும் முறைகள்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முதலில் திடமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் .தன் கையே தனக்கு உதவி எனும் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்!
குழந்தைகளுக்கு கராத்தே , ஓட்டப்பந்தயம் , கபடி என்ன தீர்க்கமான மனவலிமை தரக்கூடிய விளையாட்டுக்கள் கண்டிப்பாக கற்றுத் தரப்பட வேண்டும் .
குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் எது!கெடுதலான நோக்கத்தோடு தொடுதல் என்ன ! என்பதை கற்றுத் தருதல் அவசியம்.
போக்குவரத்தில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைதூர தொடர்பின் வழிகாட்டுதல் .வீட்டில் முகவரி செல்போன் அனைத்தும் குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.
பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் . குழந்தைகளுக்கு கல்வியோடு மட்டுமல்லாது, வெளியே செல்லும்போது நடந்து கொள்ளக்கூடிய நடைமுறை விஷயங்களை சொல்லித்தர தனி வகுப்பு எடுக்க வேண்டும்.
நாம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வாகனஓட்டுனர் பற்றி முறையாக தெரிந்துகொண்டு..
அவருடைய நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குழந்தைகளை சேர்ப்பதின் அவசியத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ளவும்.
குழந்தைகள் நம்முடைய வாழ்வின் கண்கள். துளிர்விடும் மலர்கள். சிந்தனைக்கு எட்டாத ,உயிரினும் மேலாக வளர்க்கக்கூடிய குழந்தையின் பாதுகாப்பு என்ன என்பதை பெற்றோர்கள் மிகவும் கவனத்தில் கொள்ளவும்.
வாழ்வின் வழிகாட்டுதல்களை குழந்தைகளுக்கு புரியவைத்து , வளர்த்து சாதனையாளனாக திகழ்வதை பார்த்து மகிழ்வதற்கு கடவுள் அனைத்து அருளும் ஆசியும் புரியட்டும்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக