புதன், 5 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 22

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 22



அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை  பூப்போசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?சதிங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம் 



பரந்த பூமி தனை ஆட்சி செய்யும் எம்மைப் போல் சிறந்த வீரர்கள் எவர் உண்டு ! என தம்பட்டம் அடித்தவரும் உன் பள்ளிகொண்ட கட்டிலைச் சுற்றி சத்சங்கம் வந்த பக்தர்கள் போல் காட்சிதர  கண்ணா ஏன் இன்னும் எழுந்திராய்! என  கண்ணனை எழுப்புகிறாள் கோதை.


கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போல, தாமரைப்பூ மெதுவாக மலர்வது போல, உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழித்து எழுந்திராய்


அழகிய சந்திரனும், பிரகாசமான சூரியனும் உதித்தது போல, உன்னிரு  கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே! எங்கள் பாடல் உன் காதில் விழவில்லையோ! 


எம்பெருமானே! பாவை நோன்பிருந்து விரதம் மேற்கொண்டு உமை காண்பதற்காக வந்திருக்கும் எங்களை காண எழுந்திராய் ! என்று ஆண்டாள் தன் திருப்பாவையில் பாசுரம் பாடி அழைக்கின்றாள்‌ ஆண்டாள்.


 எம்பெருமான் நாராயணன் கண்ணனை நினைத்து வழிபட்டால் நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் கருகும் சாம்பலாகும் கரைந்து ஓடிவிடும் என்று இந்த பாசுரத்தில் சற்று அழுத்தமாகவே முன்மொழிகின்றாள்  கோதை.




 நம்முடைய வாழ்க்கையில் நல்லதும் வரலாம் - கெட்டதும் வரலாம், வரவும் வரலாம்- இழப்பும் வரலாம் தெய்வம் துணை இருக்கலாம் சோதித்துப் பார்க்கலாம் தளராதே .மனம் தளராதே. துயரங்கள் மனதை ஆட்கொள்ளும் சூழ்நிலை வரலாம் . தளர்வு வரலாம் ..சற்று ஓய்வெடு. ஓய்வெடுக்கும்  நேரத்தில் கண்ணீர் சிந்தும் நிலைமை வரலாம் .அதனால் தவறில்லை . அழுதால் தான் மனம் லேசாகும் . தெளிவு கிடைக்கும்.  புரிதல் கிடைக்கும்.  அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழி பிறக்கும்.

 வாழ்வை புரிந்து கொள் .மனதில் தெளிவுபடுத்து .கண்ணீரை துடைத்து விடு .வாழும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் அதற்கு எம்பெருமான் துணை வேண்டும்.  முன்ஜென்ம கர்ம வினைகள் சாபங்கள் அனைத்தும் கருகி சாம்பலாக.. அதற்கு கண்ணனை வழிபடுங்கள் என்கின்றது திருப்பாவை


 மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடல்பாடி, எம்பெருமான் வெங்கடாஜலபதியின் நாமத்தை ஜபித்து  முடியாவிட்டால் இசையில் கேட்டு  நம்முடைய பாவங்களை கரைத்து புண்ணிய பலன்களை நிறைய ஏற்று இந்த பூமியில் பிறந்ததற்கான மனிதப் பிறவியின் வாழ்ந்த பயனை  நிறைவு செய்வோம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக