எந்த ஒரு சுப காரியங்கள் தொடங்கும் பொழுதும் ..
தெய்வத்தை வணங்கி ஒரு பாரம்பரியமான இனிப்பு செய்து இறைவனுக்கு
படைத்து ஆரம்பித்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பதால் தெய்வத்திற்கு உகந்ததான கோவில் கேசரி செய்முறையை அறிந்து கொள்வோமே..
தேவையான பொருட்கள்
ரவை -1கப்
சர்க்கரை 1 -1/2 கப் (ஒன்றை கப்)
தண்ணீர்- 3 கப்
நெய் - 3/4கப்
முந்திரிப்பருப்பு -6 அல்லது ஏழு கலர் பவுடர்
அலங்கரிக்க- சீவிய
பாதாம் பருப்பு 4
வாணலியில் ரவை *
நெய் * உடைத்த
முந்திரிப் பருப்பு *
அனைத்தையும்
சேர்த்து கிளறி
அடுப்பை மீடியமாக
வைத்து ரவாவை நன்றாக கிளறவும் . ர
ரவா நெய்யிலே நன்றாக வெந்த பிறகு வாசனை வந்ததும் 3 கப் தண்ணீரை
அதில் சேர்த்து கிளறி தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும் -அடுப்பை அணைத்து விட்டு அதன் பிறகு கேசரி பவுடர் * சர்க்கரை * ஏலக்காய் பொடி *
சேர்த்து கிளறி ஒரு தட்டில் ஊற்றி விடவும். மேலே ஒரு டீஸ்பூன் சர்க்கரை* ஒரு டீஸ்பூன் நெய் *ஊற்றி அதன் மேல் சீவிய பாதாம் பருப்பு * தூவினால் கோவில் கேசரி தயார்.
ரவா கேசரியின் சிறப்பு *
தெய்வத்திற்கு மிகவும் உகந்த இனிப்பு *
செய்வது மிக மிக எளிது *(10 நிமிடம் போதும் )
வாயில் போடும் போதே நாவில் கரைந்து மேலும் சாப்பிட ஆவல் பிறக்கும் *
தெய்வத்திற்கு
பிரசாதம் வைத்து *
பிறகு நாம் குடும்பத்தோடு
சேர்ந்து ஆனந்தமாய்
சுவைத்து *தெய்வத்தின்
அருளை பெறுவோமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக