வாழ்க்கை என்பது கடலில் பயணம் செய்யும் படகை போன்றது ..
இளமை எனும் இக்கரையில் இருந்து வாழ்க்கை பயணத்தை தொடங்குகின்ற
நாம் முதுமை எனும் அக்கரைக்கு செல்வதற்குள் .. விதி எனும் காற்றின்
வேகத்திற்கு ஏற்றவாறு இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவித்து சோர்ந்து விடுகின்றோம் .
முதுமை எனும் அக்கறைக்கு சென்று அடைகின்ற பொழுது -உடல் மட்டுமல்லாது மனமும் சேர்ந்து ஓய்வு தேட இளைப்பாறுவதற்கு ஒரு மடி
தேவைப்படுகின்றது.
அப்படிப்பட்ட மனநிலைதான் தசரத மன்னனுக்கு... அவர் தான் தேடுகின்ற
மடியாக ராமன் வருவானோ! என ஏங்கும் அந்த தருணத்தில் ராமபிரானே
அங்கு வருகின்றார் ..
சூரிய குலத்திலே பிறந்த ராமபிரான் உயர்ந்த குணங்கள் அனைத்தும்
கொண்டவனாக* -கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நீலநிறம்
உடையவனாக *
தாமரை மலர் மலர பெற்று பூமிதனில் இறங்கி தரையில் நடந்து வருவதை
போன்று திருமாலின் அவதாரமாகிய ராமபிரான் வருகின்றார்*
விதியின் விளையாடல் என்பது இதுதானோ !
சுயநலம் என்பது கொடிய நோய் போன்றது . வாழ்க்கையை அழிக்கக்கூடியது
உறவுகளை முறிக்க கூடியது.
நம்மிடம் இருக்கும் ஒழுக்கங்களை ஒவ்வொன்றாக பறிக்கக் கூடியது .
கடைசியாக நரகம் எனும் பேரழிவில் தள்ளக்கூடியது. என்பதை உணராது
கைகேகி -தாய்மை எனும் பண்பையே மறந்தவளாய் ராமனை காடாள அனுப்ப
வரம் ஒன்று கேட்க ..
அதைக் கேட்ட தசரதரோ மனமுடைந்து விழுந்தார் படுக்கையிலே ..
"14 வருடங்கள் உமக்கு வனவாசம் என்பது உன் தந்தையின் ஆணை " என கைகேயி கூற மறுவார்த்தை பேசாது தந்தையின் வாக்கை தட்டாது தாயின் காலில் விழுந்து வணங்கிய ராமபிரான் தவக்கோலம் பூண்டு பொறுமையே
வடிவமாக லக்ஷ்மணனையும் அன்பு மனைவி சீதா தேவியும் அழைத்துக்கொண்டு காட்டுக்கு செல்கின்றார்.
இது என்ன கொடுமை! ஆளப்பிறந்தவன் *
அன்பு மகன் * வைரம்* வைடூரியம்* மாணிக்கம் * மரகதம் *என்றெல்லாம்
கொஞ்சி கொஞ்சி வளர்த்த அருமை மகன் * காடாள சென்று விட்டான் என்று
வருந்தி வருந்தி மகனுக்காகவே உயிர் பிரிந்தார் தசரத மன்னர்.
நாடாள்வேன்*
காடாள்வேன்*
இரண்டு நிலைகளிலும் ராமரின் முகம் மலர்ந்தே இருந்தது .
எப்போதும் ராமரின் முகம் தாமரை மலர் போன்று மலர்ந்தே இருக்கும் என்கின்றது கம்ப ராமாயணம்*
நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து * விதி என்பது -நம் வசம் கொண்டு ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நாம் சென்று .. அகமும் முகமும் சமநிலை கொண்டு நேர்வழிப் பாதையில் நடந்து சென்று மதி வசத்தால் விடை கண்டு வெற்றிவாகை சூடுவோமே* தெய்வத்தின் அருளை பெறுவோமே*
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக