பசுமை தவழும் சோழ நாட்டிலே சீர்காழி என்னும் ஊரிலே
திருவாதிரை நட்சத்திரத்திலே பகவதி அம்மையின் -மணி வயிற்றிலே உதித்தவர்தான் ஆளுடைய பிள்ளையார்
என்னும் திருஞான சம்பந்தர்*
மூன்று வயது நிரம்பிய மழலையவன் -பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய தந்தை முகம் காணாது கண்களிலே நீர் ததும்ப பவளவாய் அழும் ஓசை குரல் கேட்டு ஓடிவந்த எம்பெருமானின் உமையவளோ! சிவனின் ஆணைப்படி வெள்ளிக் கிண்ணததிலே தாய்ப்பால்தனிலே ஞான அமிர்தம் குழைத்து ஊட்டிவிட- அறிவுச் செல்வத்தை அன்றுமுதல் பெற்றவன்தான் திருஞான சம்பந்தர்*
நீராடி முடித்த தந்தை சிவபாதர் மகன் அருகே வந்தார் ." யார் கொடுத்த பாலை நீ உண்டாய்
என கோபமாக 'கோல் 'கொண்டு கேட்க- வந்தது உமையவளோடு ஈசனே என கூறி புகழ்ந்து பாடல் ஒன்று பாடுகின்றார் ..
'தோடுடைய செவியன் விடை ஏறி' பாடலை கணீரென்று அந்த மூன்று வயது பாலகன் பாடுகின்றான்*
அறிவும் ஞானமும் சிவன்கொடுத்தது *
சொல்லும் குரலும்
சிவன் கொடுத்தது *
பெயரும் புகழும்
சிவன் கொடுத்தது *
அதை அறிந்த பாலகனோ பாட்டும் பக்தியும் மிகுதியாக வேதநெறி தழைத்தோங்க அர்த்தநாரீஸ்வரர் சிவனின் பாதம் பணிந்து புனிதவாய் மலர்ந்தழ பெருமானை போற்றி பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடி சிறுவயதிலேயே தெய்வத்திற்காக திருத் தொண்டு புரிந்தார் திருஞான சம்பந்தர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக