வெள்ளி, 16 நவம்பர், 2018

சோம வாரமே வருக

குழந்தையாய்  
  இருந்து விட்டால்
 துக்கம் ஏது! துவள்வதேது!
 கலக்கமேது! துயரமேது!
துன்பமில்லா வாழ்வு தனை
 அனுபவிக்க நேரமின்றி.. 

வளர்ந்த பிறகு 
'விதிபயனை 'அனுபவிக்க 
இறைவனோ ஆசிகூற 
'கனவு' பல சுமந்தவாறு 
அனைத்தையுமே சுமப்பதற்கு எதிர்கொண்டு நின்ற
 நம் வாழ்வு தனில் ..

முள்ளும் மலருமாய்
காயும் கனியுமாய்
 புயலும் தென்றலுமாய்
 அழுகையும் சிரிப்புமாய்
 சூழ்ந்த  நம் வாழ்வு தனில்
  தளராத முயற்சி செய்து

நமச்சிவாய* மந்திரத்தை 
இடைவிடாது சொல்வதற்கு 
ஏற்ற நேரமே கார்த்திகை மாதம் திங்கட்கிழமையிலே
சிவனை நினைத்து
 வழிபடும்
சோமவாரம்* 
என புரிந்து விட்டால்..

தீமை அகன்றிடுமே
 அல்லல் நீங்கிடுமே
 செல்வம் ஓங்கிடுமே
நன்மை பெறுகிடுமே*

ஓம் அப்பா போற்றி *
ஓம் அரனே போற்றி*
 ஓம் அரசே போற்றி *
ஓம் அழகே போற்றி *
ஓம் இறைவா போற்றி *
ஓம் ஈசா போற்றி*
 ஓம் உணர்வே போற்றி*
ஓம்  உயிரே போற்றி*
 ஓம் ஒளியே போற்றி *
ஓம் கடம்பா போற்றி *
ஓம் குருவே போற்றி*
 ஓம் சங்கரா போற்றி*
 ஓம் சுந்தரா போற்றி *
 ஓம் திங்களே போற்றி*
 ஓம் நமசிவாயா*
போற்றி*
 போற்றி*

கார்த்திகை மாத
 திங்கள்கிழமைகளில்
 சோமசுந்தரரை நினைத்து
 வழிபடும் விரதம் 
சோமவாரம் அன்று

சந்திர ஓரை *தனிலே
காலை(6-7)  மதியம்(1-2)
இரவு(8-9)
நம்மால் முடிந்த 
நேரத்திலே..

திருவிளக்கு ஏற்றி
 ஆசனத்தில்  வடக்கு திசை
 நோக்கி அமர்ந்து 
விரதமிருந்து வழிபட்டு
ஐந்தெழுத்துமந்திரத்தில்
 அனைத்தும் அடங்கும்
'ஓம் நமசிவாயவே'
 எனும் திருநாமம்

 மனமும் நாவும் ஒன்றிடவே
பக்தி பரவசம் சிந்தையிலே
சிவனின் அருளை 
பெறுவோமே*

ஆதியாய் நடுவுமாகி
 அளவிலாஜோதியுயாய்
 உணர்வுமாகி
 தோன்றிய பொருளுமாகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகி
உயர்ந்து நிற்கும் 
தில்லைப் பெருமானே!
உயிரோடு கலந்து நிற்கும் எம்பெருமானே*

நின் பாதமே சரணம்
 சரணம்  சரணம் * என்றிட்ட
எம்மை மட்டுமின்றி
சுற்றி இருக்கும் 
அனைவரையும்
அருள்கூர்ந்து 
வாழ்த்துவாயே
நடராஜனே*

ஓம் நமசிவாய*

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக