வியாழன், 1 நவம்பர், 2018

இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ! Part-1

16 செல்வங்களில்
 மிக இனிமையான செல்வம்
 இளமை செல்வம்*

 வாழ்க்கையிலே 18 வயதை 
கடக்கும் காலம்- இளமை காலம்* ஒவ்வொருவரின் 
வாழ்க்கையிலும் வரும்
 ஒரு வசந்த காலம்*

 வண்ணத்து பூச்சிகளோ
  மனசுல சிறகடித்து பறக்கின்ற
 ஒரு பருவ காலம்*
 ஆயிரம் கனவுகளை சுமந்து 
வலம் வருகின்ற 
மகிழ்ச்சியான காலம்*

' இளம் கன்று பயமறியாது'
 என அறியும் மலர்காலம் *
இந்த இளமைகாலம்*

இந்த காலத்துல
 நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு ..

இனிது இனிது வாழ்க்கை 
இனி தன்றோ part- 2🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/06/part-2.html

இளமை காலத்தில்
 புதுமண தம்பதிகள் இல் வாழ்க்கை வாழ்வதற்கு ஐந்து நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

1-பெரியவங்கள 
மதித்து நடக்கணும் 

2-தெய்வத்தை போற்றி 
வணங்கணும் 

3-விருந்தினர்கள் வந்தால் இன்முகத்தோடு 
வரவேற்கணும்

4- சுற்றத்தாருக்கு 
உதவும் குணம் 
கண்டிப்பா வேணும் 

5-தம்மையும் கொஞ்சம் 
கவனிச்சுக்க வேணும் 

இந்த பண்பாடுகளை 
தெரிந்து நடந்து கொண்டா  இல்வாழ்க்கை இனிதாக 
இளமை காலம் சிறப்பாக 
இருக்கும்*

என்றும் இளமையோடு
 நீடூழி வாழ வேண்டும் ,
என நினைத்து 
அதிகமானுக்கு 
 தான் உண்ணாமல் 
அற்புதமான 
நெல்லிக்கனியை
கொடுத்த 
அவ்வைப்பாட்டி 
போல நமக்காக பாராமல் சுயநலம் இல்லாது எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமிருந்தால் 
என்றைக்கும் 
இளமையோடு வாழலாம்*

என்றும் இளமையோடு
 இருக்க *
இதையும் கொஞ்சம்
 சேர்த்துக்கலாம்..

இயற்கை உணவுகள்* நமக்காக 
எடுத்துக் கொள்வோம் 
அளவாக 
யோகா பயிற்சி* 
ஒரு ஒரு தினமாக
 பேணி காப்போம்
 நம் உடல் வாகை*

மஞ்சள் பூசி *முகம் அழகாக 
பட்டாடை உடுத்தி
 பண்பாக
பொறுமையின் இலக்கணம்* 
நாமாக- இளமை  போற்றிட 
வாழ்வோம் சிறப்பாக*

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை- பண்பும் பயனும் அது 

எனும் வள்ளுவர் சொன்ன
சொல்லை  மறந்து போகாதீங்க.. 

இளமை காலத்தில் இவ்வளவு
 கத்துக்க வேண்டியது இருக்கான்னு மலைத்தும்  போகாதீங்க.

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக