பிரதோஷ வழிபாடு
பிரதோஷம் அன்று சிவபெருமான் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதற்கான விளக்கத்தைக் காண்போம்..
உலகத்தை படைத்து அருள்பவன் இறைவன் ஆகின்றான்
உலகமக்களை காப்பாற்றி அருள்பவனும் அவனே.
கடவுளின் திருவருட் துணையின்றி ஒருஅணுவும் அசையாது. கடவுளின் திருவருள் துணை இன்றி நமக்கு வேறு கதியில்லை வாழ்க்கையில்லை .
இறைவனின் மனம் குளிர்வதற்கு எத்தனையோ முறைகளில் பூஜைகள் செய்கின்றோம்.
அப்படிப்பட்ட பூஜை வழிபாடுகளில் மிகவும் சிறந்த ஒரு வழிபாடு தான் பிரதோஷ வழிபாடு
அமாவாசை
பவுர்ணமி இரண்டிலுமேஅடுத்து வரும் பதின்மூன்றாம்நாள் திரியோதசி திதி அன்று தான் பிரதோஷம் என்கின்றோம் மாலை 5 .45 மணியிலிருந்து 6.30மணிக்குள் பிரதோஷ காலம்
சூரிய அஸ்தமனத்தின் தொடக்கம்- பிரதோஷம் காலத்தின் ஆரம்பம் .
பகலின் முடிவு-
சந்தியா காலத்தில் தொடக்கம்.
சிருஷ்டி முடிவு பெற்று- தன்
ஸ்வ ரூபத்தில் அடங்கி கொள்ளும் நேரம். மனதும் ஈஸ்வரனுடன் ஒடுங்க -அதுவே நல்ல காலம் .
அந்த நித்திய பிரளய நேரத்தில்- நாம் அனைவரும் வணங்கி வழிபடும் அந்த நேரத்திலே, சிவபெருமான் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
கயிலாயத்தில் பிரதோஷம் வேளையிலே நடக்கும் அற்புதமான காட்சி இது!
சரஸ்வதி தேவியோ தமது மலர் கைகளால் வீணையை மீட்டிகொண்டிருக்க *
இந்திரனோ மிக அழகாக புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருக்க ..
பிரம்மனின் விரல்களோ தப்பாமல் தாளம் தட்டிக் கொண்டிருக்க..
அதுமட்டுமல்லாது- திருமாலின்
திருக்கரங்கள் மேளம் கொட்ட
லக்ஷ்மி தேவி தன் இன்னிசையால் கானமழை பொழிகின்றாள்..
சிவபெருமானோ நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவசக்தி சொரூபமாக காட்சி தந்து நடனமாட..
பிரதோஷ வேளையிலே -அந்த அற்புதமான நிகழ்வு கைலாயத்தில் நடந்து கொண்டிருக்க-
நாமோ அந்த புண்ணிய வேளையிலே சிவாலயங்களில் சிவனை தரிசனம் கண்ட தருணத்திலே -
சிவபெருமானது சக்தியானது நம்மை ஆட்கொண்டு, பாவங்கள் அனைத்தும் கரைந்து பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் கிடைக்கப்பெற்று
அவன் அருளை பெறுகின்றோம்.
பிறப்பு -இறப்பு ஆகிய கடலிலே அழுந்துகின்ற எம்மை-
அக்கடலில் அழுந்தா வண்ணம்..
கருணைகையால் கையில் எடுத்து -என் அறிவில் தன் சொரூபத்தை காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே!
நான் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் குறை ஏதுமில்லாத- நிறை கொண்ட வாழ்க்கையாக ,மகிழ்ச்சி கொண்ட வாழ்க்கையாக வாழ்வதற்கு அருள் செய்வாயே எம்பெருமானே!
என்று இறைவனை வேண்டுகின்ற ஒரு அற்புதமான வழிபாடுதான் பிரதோஷ வழிபாடு
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக