ஞாயிறு, 15 ஜூலை, 2018

பௌர்ணமி சிறப்பு

பௌர்ணமியின் சிறப்பு


இந்த  பூமி -கடல்- காற்று அனைத்தும் தமக்குள் அடக்கமாக  தாமே ஆதிபராசக்தியாக* அன்னையின் அம்சமாக* தாய்மையின் சிகரமாக*இந்த  பிரபஞ்சத்தையே ஆளுகின்ற தாய் அபிராமிக்கு  பிடித்தமான திதி பௌர்ணமி திதி .


அம்பாளுடைய அழகு  போன்று வானில் சந்திரன் பிரகாசிப்பதற்கு ஒரு காரணம் உண்டு



முன்பு  ஒருமுறை 
உலகத்திற்கே ஒலி 
கொடுக்கக் கூடிய 
சந்திரனுக்கு  கர்வம்
  அதிகமாகி

" ஒளி  படைத்த நிலவாக 
வானத்திலே* நான் ஜொலிக்க  என்னொளி 
இல்லையென்றால்
 வையகமே
 இருண்டு விடும் ..'
எனக் கூறி  
சந்திரனோ ஆர்ப்பரிக்க

இதைக்கண்ட எம்பெருமான்  விநாயகருக்கோ
 கோபம் அதிகமாகி ,
சந்திரனை ஒளி இழக்க 
செய்துவிட
அம்பிகையின் உதவியை நாடுகின்றான்சந்திரன்.

 கர்வம் உடையவன் முடிவில் செல்லாக்காசாகி விடுகின்றான்-
 தன்னடக்கம் உடையவனோ முடிவில்
வான்புகழ் நிலைத்து நிற்பான்*
என உணர்ந்த சந்திரன்,"தம்மொளி
 உலகத்திற்கு மட்டும் அன்றி உள்ளத்திற்கும் ஒளி கொடுக்க ஒருபோதும் தவற  மாட்டேன்" எனக் கூற, சந்திரனின் வாக்குதனை அம்பிகையோ முன்மொழிய -தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சந்திரனுக்கு ஒளியை கொடுக்கின்றான் கணபதி.

  'தவறு செய்பவர்களை தணடிப்பவள் காளி *என்றால் ,தவறை உணர்கின்ற சூழ்நிலையை உருவாக்கி ,மன்னித்து அருள்வது  அம்பிகைக்கு உரிய குணம் அன்றோ* அதனால் தான் பௌர்ணமி அன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தி அம்பிகையிடம் நிறைந்திருக்க சக்தி மண்டலத்தில் அம்பிகை அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கின்றாள். அன்றைய தினம் அவளை வணங்கினால் இரு சக்திகளின் பலன் கிடைக்கப் பெற்று- நினைத்தது பூர்த்தியாகும்* என்பது ஐதீகம் .


தெய்வ சிந்தனை நிறைந்து இருக்க, அம்பாளின் பாதம் பணிந்து- ஆனந்த பரவசம் கிடைக்க பெற்று, அவள் அருள் பெறுவோமே*

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



தோஷங்கள்  அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம்🙏🌹👇👇



Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக