பௌர்ணமியின் சிறப்பு
இந்த பூமி -கடல்- காற்று அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதிபராசக்தியாக* அன்னையின் அம்சமாக* தாய்மையின் சிகரமாக*இந்த பிரபஞ்சத்தையே ஆளுகின்ற தாய் அபிராமிக்கு பிடித்தமான திதி பௌர்ணமி திதி .
அம்பாளுடைய அழகு போன்று வானில் சந்திரன் பிரகாசிப்பதற்கு ஒரு காரணம் உண்டு
உலகத்திற்கே ஒலி
கொடுக்கக் கூடிய
சந்திரனுக்கு கர்வம்
அதிகமாகி
" ஒளி படைத்த நிலவாக
வானத்திலே* நான் ஜொலிக்க என்னொளி
இல்லையென்றால்
வையகமே
இருண்டு விடும் ..'
எனக் கூறி
சந்திரனோ ஆர்ப்பரிக்க
இதைக்கண்ட எம்பெருமான் விநாயகருக்கோ
கோபம் அதிகமாகி ,
சந்திரனை ஒளி இழக்க
செய்துவிட
அம்பிகையின் உதவியை நாடுகின்றான்சந்திரன்.
கர்வம் உடையவன் முடிவில் செல்லாக்காசாகி விடுகின்றான்-
தன்னடக்கம் உடையவனோ முடிவில்
வான்புகழ் நிலைத்து நிற்பான்*
என உணர்ந்த சந்திரன்,"தம்மொளி
உலகத்திற்கு மட்டும் அன்றி உள்ளத்திற்கும் ஒளி கொடுக்க ஒருபோதும் தவற மாட்டேன்" எனக் கூற, சந்திரனின் வாக்குதனை அம்பிகையோ முன்மொழிய -தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சந்திரனுக்கு ஒளியை கொடுக்கின்றான் கணபதி.
'தவறு செய்பவர்களை தணடிப்பவள் காளி *என்றால் ,தவறை உணர்கின்ற சூழ்நிலையை உருவாக்கி ,மன்னித்து அருள்வது அம்பிகைக்கு உரிய குணம் அன்றோ* அதனால் தான் பௌர்ணமி அன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தி அம்பிகையிடம் நிறைந்திருக்க சக்தி மண்டலத்தில் அம்பிகை அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கின்றாள். அன்றைய தினம் அவளை வணங்கினால் இரு சக்திகளின் பலன் கிடைக்கப் பெற்று- நினைத்தது பூர்த்தியாகும்* என்பது ஐதீகம் .
தெய்வ சிந்தனை நிறைந்து இருக்க, அம்பாளின் பாதம் பணிந்து- ஆனந்த பரவசம் கிடைக்க பெற்று, அவள் அருள் பெறுவோமே*
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
தோஷங்கள் அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம்🙏🌹👇👇
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக