வியாழன், 21 ஜூன், 2018

கர்ணா- சிவந்தது கைகளோ !

 
அதிகாலை பொழுதினிலே- மேகத்தின் நடுவினிலே,
தேவர்களோ ரதத்திலே- உலா வந்து கொண்டிருக்க ,
அழகிய சிரிப்பொலி காதினிலே -விழக்கேட்ட
தேவர்களின் கண்களுக்கு, 

தென்பட்டது ஒரு குழந்தை
 பூமிதனில் _ சிரிக்கின்றான் !சிணுங்குகிறான் ! கைகளை ஆட்டி மகிழ்கின்றான் !

  கவசகுண்டலம் அவன் வசமே_ காணும் அழகெல்லாம் அவன் வசமே !ஆனந்தம் அடைந்த தேவர்களோ - ஆசையோடு வாரி அணைப்பதற்கு, கைகளை நீட்டி அழைத்தனரே- 

"யாசகம் கேட்க வந்தனரோ"  என நினைத்த மழலை அவன் ..

தன் ஆபரணத்தை கழற்றி நீட்டுகின்றான் .    'வருங்காலத்தில் கர்ணன் *நானே 'என விழைகின்றான். 


  குழந்தையாக இருக்கும்போதே கர்ணன்  கொடை வள்ளலாக திகழ்ந்தவன். அதனால்தான் இன்றும் அவன் புகழ் நிலை பெற்று இருக்கின்றது.

 ஒருநாள் கர்ணன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையிலே, அவனுக்குள் இருக்கும் ஆத்மாவாகிய தானமும், தவமும், பொழுதுபோக்குக்காக பேசிக்கொண்டே வருகையிலே , நடந்த உரையாடலை சற்றுப் பார்ப்போமா!

தானம் _"பெரும்புகழை அள்ளி
கொடுப்பவன் நானல்லவோ"

   தவம் _"தவமின்றி தானமேது ? அனைத்து புகழும் எனக்கல்லவோ!"

 தானம்  _"ஒருக்காலும் கிடையாது நெஞ்சம் நெகிழ வாழ்த்து பெற்று  , 
பூர்வ  ஜென்மபாவத்தை  தீர்த்து 
வைத்து, மோட்சத்திற்கு அழைத்துச் செல்வது , அனைத்து பெருமையும் உடையவன் யாமே ".   
  
    தவம்  _" ஓ..நீ சொல்வது சரிதான் - ஆனால்  தவமின்றி பொன்னேது!  பொருள் ஏது? ஆரோக்கியம் என்பதேது!இது மட்டுமன்றி
 குழந்தைச் செல்வம் தான்  ஏது? பார்க்கப்போனால் பதினாறு பேறுகளையும், (செல்வங்களையும்) பெற்றுத்தருவது நானே ..நானே.. நானே..
  (மூச்சு வாங்குகிறது தவத்திற்கு )

நானே பெரியவன் 
இல்லை இல்லை 
நானே பெரியவன் 
வாக்குவாதம் முடிவிலே,
 தம்முடைய வேலைகளை 
செய்ய மாட்டேன் -என
 பிடிவாதம் முத்தி போக 
தானமும் , தவமும்செயலற்று
 நின்று விட்டன. 


காலையிலே கர்ணனாலே 
எழுந்திருக்கவே முடியல ..
நமக்கு இவ்வளவு சோர்வு 
எப்படி வந்தது ! என்று 
ஆச்சரியமுற்ற கர்ணனோ படுக்கையிலே..

 ஒரு  நாள் , இரண்டு 
மூன்று நாள் ஆச்சு .
.இது ஒன்றும் சரிவராது
 என,மனமோ -எழுந்தது.

 தவத்தையும் - தானத்தையும் அழைத்தது .ஒரு மனிதனுக்கு 
இரண்டு கண்கள் போன்றது 
தானம் ,தவம்  *  
என்பதை அறியாமல் போவீரோ..
 'தாம் வாழ்க்கையில் 
சீரும் சிறப்புமாய் 
நிலை பெற்று வாழ 
வேண்டும் 'என்று தவமிருந்து 
வரம் பெற்றாலும் , தானத்தின்  செயல்பாடுகளில் -சிறப்பு இல்லை என்றால் தவம் செய்து  
என்ன பயன்!

 தானமும் தவமும் தன் தவறை உணர்ந்தன .அடுத்தது என்னநடந்திருக்கும் !

கர்ணன் 
எழுந்து விட்டான்  
நம் நினைவுகளையும் 
தட்டி எழுப்பி விட்டான்..

 கர்ணனுக்கு மட்டுமா  
கைகள் சிவக்கும்! நம்முடைய
 கைகளும்  சிவந்த கைகள்தான் . நம்மால் முடிந்த அளவிற்கு 
பிறருக்கு உதவி செய்து 
மகிழ்ச்சியைக் கண்டு, வாழ்வின் பயனைஅடைவோமே.


Copyrighs at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக