
அதிகாலை பொழுதினிலே- மேகத்தின் நடுவினிலே,
தேவர்களோ ரதத்திலே- உலா வந்து கொண்டிருக்க ,
அழகிய சிரிப்பொலி காதினிலே -விழக்கேட்ட
தேவர்களின் கண்களுக்கு,
தென்பட்டது ஒரு குழந்தை
பூமிதனில் _ சிரிக்கின்றான் !சிணுங்குகிறான் ! கைகளை ஆட்டி மகிழ்கின்றான் !
கவசகுண்டலம் அவன் வசமே_ காணும் அழகெல்லாம் அவன் வசமே !ஆனந்தம் அடைந்த தேவர்களோ - ஆசையோடு வாரி அணைப்பதற்கு, கைகளை நீட்டி அழைத்தனரே-
"யாசகம் கேட்க வந்தனரோ" என நினைத்த மழலை அவன் ..
தன் ஆபரணத்தை கழற்றி நீட்டுகின்றான் . 'வருங்காலத்தில் கர்ணன் *நானே 'என விழைகின்றான்.
குழந்தையாக இருக்கும்போதே கர்ணன் கொடை வள்ளலாக திகழ்ந்தவன். அதனால்தான் இன்றும் அவன் புகழ் நிலை பெற்று இருக்கின்றது.
ஒருநாள் கர்ணன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையிலே, அவனுக்குள் இருக்கும் ஆத்மாவாகிய தானமும், தவமும், பொழுதுபோக்குக்காக பேசிக்கொண்டே வருகையிலே , நடந்த உரையாடலை சற்றுப் பார்ப்போமா!
தானம் _"பெரும்புகழை அள்ளி
கொடுப்பவன் நானல்லவோ"
தவம் _"தவமின்றி தானமேது ? அனைத்து புகழும் எனக்கல்லவோ!"
தானம் _"ஒருக்காலும் கிடையாது நெஞ்சம் நெகிழ வாழ்த்து பெற்று ,
பூர்வ ஜென்மபாவத்தை தீர்த்து
வைத்து, மோட்சத்திற்கு அழைத்துச் செல்வது , அனைத்து பெருமையும் உடையவன் யாமே ".
தவம் _" ஓ..நீ சொல்வது சரிதான் - ஆனால் தவமின்றி பொன்னேது! பொருள் ஏது? ஆரோக்கியம் என்பதேது!இது மட்டுமன்றி
குழந்தைச் செல்வம் தான் ஏது? பார்க்கப்போனால் பதினாறு பேறுகளையும், (செல்வங்களையும்) பெற்றுத்தருவது நானே ..நானே.. நானே..
(மூச்சு வாங்குகிறது தவத்திற்கு )
நானே பெரியவன்
இல்லை இல்லை
நானே பெரியவன்
வாக்குவாதம் முடிவிலே,
தம்முடைய வேலைகளை
செய்ய மாட்டேன் -என
பிடிவாதம் முத்தி போக
தானமும் , தவமும்செயலற்று
நின்று விட்டன.
காலையிலே கர்ணனாலே
எழுந்திருக்கவே முடியல ..
நமக்கு இவ்வளவு சோர்வு
எப்படி வந்தது ! என்று
ஆச்சரியமுற்ற கர்ணனோ படுக்கையிலே..
ஒரு நாள் , இரண்டு
மூன்று நாள் ஆச்சு .
.இது ஒன்றும் சரிவராது
என,மனமோ -எழுந்தது.
தவத்தையும் - தானத்தையும் அழைத்தது .ஒரு மனிதனுக்கு
இரண்டு கண்கள் போன்றது
தானம் ,தவம் *
என்பதை அறியாமல் போவீரோ..
'தாம் வாழ்க்கையில்
சீரும் சிறப்புமாய்
நிலை பெற்று வாழ
வேண்டும் 'என்று தவமிருந்து
வரம் பெற்றாலும் , தானத்தின் செயல்பாடுகளில் -சிறப்பு இல்லை என்றால் தவம் செய்து
என்ன பயன்!
தானமும் தவமும் தன் தவறை உணர்ந்தன .அடுத்தது என்னநடந்திருக்கும் !
கர்ணன்
எழுந்து விட்டான்
நம் நினைவுகளையும்
தட்டி எழுப்பி விட்டான்..
கர்ணனுக்கு மட்டுமா
கைகள் சிவக்கும்! நம்முடைய
கைகளும் சிவந்த கைகள்தான் . நம்மால் முடிந்த அளவிற்கு
பிறருக்கு உதவி செய்து
மகிழ்ச்சியைக் கண்டு, வாழ்வின் பயனைஅடைவோமே.
Copyrighs at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக