வெற்றிலை இனிப்பு தீர்த்தம்
வீட்டில் எப்போதும் வெற்றிலை இருந்து கொண்டிருந்தால் அந்த வீடு சுபிட்சமாக இருக்கும்- சித்தர்களுடைய மூலிகை மருத்துவம் எனும் புத்தகத்தை படித்துப் பார்த்தால் நமக்கு பல ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் அதில் இருப்பது தெரியும்.
வெற்றிலை என்பது வெற்றியை கொடுக்கக் கூடிய இலை.
வாழ்க்கையில் ஒரு பெரிய சக்சஸ் கொடுக்கும்.
வீடு எப்போதும் சுபிட்சமாக இருப்பதற்கு -நாட் கிழமைகளில் விசேஷ நாட்களில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து படைப்போம் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலத்தில் வெற்றிலையை தான் முதலில் வைக்கின்றோம் .
இதற்கான காரணம் எந்த செயல் செய்தாலும் அந்த செயல் வெற்றியோடு முடிய வேண்டும் என்பதற்காக -வெற்றிலை எனும் மங்கல மூலிகை இலையை வைக்கின்றோம் .
அதேபோல ஆரத்தி சுற்றுவதற்கு வெற்றிலை பயன்படுத்துகின்றோம்.
அந்த வெற்றிலையை அப்படியே வாடவிடாமல் அதை இனிப்பு தீர்த்தமாக செய்து உள்ளுக்கு கொடுக்கலாம் .
அந்த வெற்றிலை வாடும்படி விட்டால் அது குடும்பத்திற்கு நல்லது கிடையாது.
முதல் விஷயம் படைத்த பொருள் குப்பைக்கு போகக்கூடாது இரண்டாவது வெற்றிலை என்பது தெய்வீக மூலிகை என்பதால் -அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் தெய்வத்தின் பலன் நமக்கு கிடைக்கும்.
அதை ஒரு இனிப்பு தீர்த்தமாக நாம் உள்ளுக்கு குடிக்கும்போது நம்முடைய தோஷங்கள் -துயரங்கள்- உடல் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம் .
இனிப்பு தீர்த்தமாக எப்படி தயாரிக்கலாம்.. இரண்டு வெற்றிலை ஏலக்காய் ஒன்று- கிராம்பு இரண்டு இரண்டு கிளாஸ் தண்ணீர்
பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெற்றிலையை கிள்ளி போடவேண்டும். ஏலக்காய் கிராம்பு நன்றாக இடித்து பொடி செய்து அதையும் இந்த தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடலாம்.
தண்ணீர் கொதித்து ஒரு டம்ளர் ஆனதும் எடுத்து ஆற வைக்கலாம்.
இரண்டு டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும் ..நன்றாக கலந்துவிட வேண்டும் .இப்போது வெற்றிலை இனிப்பு தீர்த்தம் தயாராகி விட்டது.
வீட்டில் இருக்கும் அனைவரும் குடிக்கலாம். தெய்வீக மூலிகை வெற்றிலை இனிப்பு தீர்த்தம் வாரந்தோறும் செய்து உள்ளுக்குக் குடிக்கலாம். தெய்வ கடாட்சம் சுபிட்சம் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து இருக்கும் .
மங்கல வாழ்வு தரும்
இளநீர் அபிஷேகம்🌹🍀🙏👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_24.html
மனம் பசுமையாக -பார்க்கின்ற காட்சி பசுமையாக- பவள வாய் சொல் பசுமையாக- நினைக்கின்ற நினைவுகள் பசுமையாக- வெற்றிலையின் மனம் போல் என்றும் பசுமை நிறைந்திடவே ..
இனியாவது வெற்றிலையை வாடவிடாமல் அதை தீர்த்தமாக அருந்தி வாழ்க்கையில் சிறப்புகள் பல பெற்று வாழ்க்கையில் பலனை அடையலாம்.
நம் முன்னோர் சொன்ன சொல் முற்றிலும் ஏற்று -அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு பாரம்பரியமாய்..
மங்கள காரியம் சிறப்பு பெற முதன்மை பெற்ற- வெற்றிலை பாக்குப் பழம் தாம்பூலம் ..
கொடுப்பதும் பெறுவதும் சிறப்பு
விரைவில் திருமணம் கைகூட வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசான் டவுன்லோட் செய்து படித்து பயன் பெறலாம்🌹🍀🌹🙏👇👇👇👇👇
https://amzn.in/ibYVUJD
கொரோனா எனும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமான உணவு முறைகள்🌹🍀🌹👇
வாழ்த்து பெரும் பொழுதும் தாம்பூலம் பெறுக.. வாழ்த்து கொடுக்கும்பொழுதும் மற்றவருக்கு தாம்பூலம் தந்து- மங்கள வாழ்வு
பெற்று சிறப்பு பெறுக.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக