அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பு எனும் வார்த்தைக்கு ஓராயிரம் அர்த்தங்கள் .
ஆனந்தம், பூரிப்பு ,சிரிப்பு ,அமைதி, சாந்தம், சமரசம் ,சாதனை ,வெற்றி அப்பப்பா எத்தனை வார்த்தைகள் அடக்கம்.
" அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!"
கோபம் உள்ள இடத்தில் சாந்தம் கிடைக்காது. அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுங்கள்.
அன்புக்கு பாகுபாடு கிடையாது மொழி பேதம் கிடையாது .உயிரினங்களில் ஏற்றத் தாழ்வும் கிடையாது. அனைத்து உயிரினத்திலும் அன்பு காட்டுவது என்பது அன்புக்குரிய மிகப்பெரிய மேன்மை ..
எப்படி அன்பு காட்டலாம் ? என்பதற்கான விடை இதோ...
ஒரு பூனை நம் வீட்டு வாசலில் வருகின்றது ...ஓடிச்சென்று சிறிது பால் இருந்தால் வையுங்கள்.
உங்கள் அருகாமையில் ஒரு நாய் வருகின்றது ...பிஸ்கட் போடுங்கள்.
நதிக்கரைக்கு செல்கின்றீர்கள்... சிறிது பொரி வாங்கி செல்லுங்கள் மீன்களின் பசி தீரும் .
பக்கத்தில் மாடு இருக்கின்றதா.. மீதமுள்ளதை வீணாக்காது மாட்டுக்கு இடுங்கள். மனம் நிறையட்டும்.
கோவிலுக்கு செல்கிறீர்...கையேந்தி நிற்பவர்களுக்கு ஒரு பழம் கொடுங்கள். தெய்வத்தின் ஆசி கிட்டும்.
இதை மட்டும் செய்யுங்கள் அன்பை தேடி நீங்கள் போக வேண்டாம்.. உங்களை தேடி அன்பு வரும .தெய்வீக மணத்தின் வாசத்தை உணர்வீர்கள்.
அடுத்து நான் முன்பு சொன்ன ஆனந்தம், பூரிப்பு, சிரிப்பு,, அமைதி, சாந்தம், சாதனை ,சமரசம் ,வெற்றி அனைத்தும் வரும். வாழ்வு கண்ட மகிழ்ச்சி கிடைக்கும்.
இதற்கு அதிக செலவும் இல்லை சிரமப்படுவதற்குமில்லை.
அன்போடு சேர்ந்த மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு மேலும் அழகான சில குறிப்புகள் ...
நமக்கு அழகு எது!
பால் போன்ற முகம் அழகு
கபடமில்லாத சிரிப்பழகு
கடிந்து கொள்ளாத உதடு அழகு
தீது பேசா நா அழகு
துன்பம் வந்தாலும் சுருங்காத நெற்றி அழகு
நெற்றியில் குங்குமப் பொட்டு அழகு
தான தர்மங்கள் அழகு அதனால் சிவக்கின்ற கைகள் அழகு
சோதனை சந்தித்தாலும் சாயாது நிமிர்தல் அழகு
பொய் பொறாமை கலவாமை இலா மாசற்ற மனம் அழகு
அந்த மனதில் இறைவனை நினைத்தால் அதைவிட அழகு.
இவை அனைத்தும் புரிந்து கொண்டு
அன்பு என்பதற்கு அர்த்தம் புரிந்தால் எழுதிய மகிழ்ச்சிக்கு நிறைவு காண்பேன்.
குடும்பம் என்னும் நந்தவனத்தில் part -1 கணவன் மனைவி இடையே உள்ள அன்பு பரஸ்பரம் ஒற்றுமை அதிகமாக🌹🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக