ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஆடிப்பூரம்

 

அம்பாளை மகிழ்விக்கும் ‌ஆடிப்பூரம்



சகல சக்திகளும் கொண்ட அம்பிகைக்கு நாம் மகிழ்வோடு அவளையும் மகிழ்வித்துகொண்டாடும் ஒரு நாள் ஆடி பூரம் .



வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபடும் முறை

அம்பாளுக்கு மிகவும் சிறந்ததாக கருதப்படும் மாதம் ஆடி மாதம்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரத்தில் அம்பிகை பிறந்தாள். ஆண்டாள் பிறந்தாள் .அந்த பிறந்த தினத்தில் அவளை கொண்டாட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம் ...

பாலாபிஷேகத்தில்  அம்பிகையை குளிர்விக்கலாம் அன்றைய தினத்திலே முடிந்த அளவு அரை லிட்டர் பால் வாங்கி கொடுங்கள் . அம்பிகையின் அபிஷேகத்தை கண்குளிர பாருங்கள்.

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை கோவிலுக்கு போக முடியாதவர்கள்  பால் வாங்கி அம்மன் கோவிலில் கொடுத்து விடுங்கள் .

நம்முடைய முதல் காரியம் நாம் கொடுக்கும் பால். அந்த அபிஷேகம் நம்முடைய வாழ்க்கையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சுபிட்சத்தை கொடுக்கும். செல்வ சிறப்பை கொடுக்கும்.

கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனை  மனதார தரிசிக்கலாம்.ஆடிப்பூரத்தன்று காலையில்  கங்கா ஸ்நானம் செய்ததும், பூஜை அறையில் விளக்கேற்றி அகக்கண்ணால் 5 நிமிடம் அம்பாளின் பால் அபிஷேகத்தை கண்டு மகிழுங்கள்.

அகக் கண்ணால் காண முடியுமா! என்று நினைக்காதீர். கண்டிப்பாக காணமுடியும் .அகத்துள்ளே அதாவது மனதுக்குள்ளே கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி  சிவபெருமானை தம் இடம்தேடி வரவழைத்த பூசலார் வாழ்ந்த பூமி இது.

ஆடிப்பூரத்தன்று அம்பாளை மனதார நினைத்து அவளுடைய அபிஷேகத்தை கண்குளிர பாருங்கள் .ஆடிப்பூரத்தில் முக்கியம் சிறப்பம்சம் இந்த பாலாபிஷேகம் .

அடுத்ததாக மிக முக்கியமான சிறப்பு அம்சங்களை  பார்ப்போம். நாம் அம்பாளை ஆடிப்பூரத்தன்று வழிபடக்கூடிய வழிபாடு ..




1- அம்பாளின் உருவ சிலை அல்லது படத்திற்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மலர் வையுங்கள்.

2-  பாலோடு தேன் கற்கண்டு சேர்த்து நெய்வேத்தியம் படையுங்கள்.

3 -  முடிந்தவரை ஒரு டஜன் வளையல் வாங்கி பூஜை அறையில் அம்பாளின் காலடியில் வையுங்கள். கோவிலில் வளையல் மாலை முடிந்தால் அம்மனுக்கு சூடுங்கள்.

3 - அம்பாளின் பாடல்கள் ஒலிக்க வேண்டும் .அம்பாளின் 108 போற்றி திருப்பாவை லலிதா சகஸ்ரநாமம் போன்ற பாடல்கள் படியுங்கள்.

4-  முடிந்தால் கோவிலுக்கு சென்று அங்கே கொடுக்கப்படும் மஞ்சள் குங்குமம் வளையல் வாங்கி வாருங்கள் அல்லது அம்பாளின் பாதத்தில் மலர்களோடு மேலே சொன்ன அத்தனை மங்கலப் பொருட்களையும் வைத்து மனதார வேண்டி வடக்கு நோக்கி அமர்ந்து...

ஸ்லோகம்  படித்து முடித்தபின் மஞ்சள் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொள்ளுங்கள் .தலையில் மலரை வைத்துக்கொள்ளுங்கள் .வளையல் அணிந்து கொள்ளுங்கள் .

அம்பாளை நமஸ்காரம் செய்யுங்கள். அதன்பின் வீட்டிலுள்ள பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குங்கள். அவர்களுடைய கைகளால் மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொள்ளுங்கள்.

மலை  போல வந்த துன்பத்தை பனிபோல் நீக்கி வைப்பவள் அம்பாள். இந்த ஆடிப்பூரத்தில் அவளை மனதார வணங்கி வழிபட்டால்..

 அம்பாளின் முழுமையான அனுகிரகம் நமக்கு கிடைக்கும்  .அடுத்துவரும் சுபமான நிகழ்ச்சிகளும் முன்னேற்றங்களும் நம்முடைய வீட்டில் நிகழும்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிக பிடித்தமான பொருட்களை கொண்டு வழிபடும் முறை 🙏🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/07/blog-post_37.html

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copyrights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக