ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருட்கள்
தமிழ் மாதத்தில் ஆடி மாதம் அம்மனுக்குரிய சிறப்பு மாதம். இந்த மாதம் முழுவதும் அம்பாளுக்குரிய அருள் பெரும் ஸ்லோகங்கள், அவளுக்கு பிடித்தமான காரியங்கள், அவளுக்குப் பிடித்தமான நைவேத்தியங்கள் ,அவளுக்குப் பிடித்தமான பொருட்கள் -என வைத்து வழிபட்டால் நாம் வாழ்தலுக்குரிய அர்த்தத்தை உயர்வு தனை வாழ்வின் சிறப்புதனை அவள் கொடுப்பாள்.
அவளுக்கு பிடித்தமான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்...
1-வேப்பிலை
வேப்பிலை வாசத்தில் மனமகிழ்வாள். ஆதலால் முடிந்தவரை வீட்டில் வேப்பிலை மாவிலை தோரணங்கள் நாள் கிழமைகளில் கட்டுங்கள். மனம் மலர்வாள்.
2- கேழ்வரகு கூழ்
அம்மனுக்கு மிக மிக பிடித்தமானது கேழ்வரகு கம்மங்கூழ். ஆடிமாதத்தில் படைத்தால் மனம் குளிர்வாள்.
முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும். பாவங்கள் விலகும். துன்பங்கள் பனிப்போல் மறையும் . இனி வரும் அனைத்தும் சுகமாகும்.
3 - தேங்காய்
தெய்வீகத்திற்கு முதன்மையான பொருளான தேங்காய் அர்ச்சனைக்கு அம்பாள் மனம் மயங்குவாள்.
ஆடி மாதத்தில் இருமுறையாவது
தேங்காய் வெற்றிலை பாக்கு பழத்தோடு சேர்த்து அர்ச்சனை கொடுங்கள்.அவளுடைய அருளை பெறுங்கள் .
4- இளநீர்
இளநீர் அபிஷேம் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானது. அம்மன் கோவில்களில் நாட் கிழமைகளில் வாங்கி இளநீர் கொடுங்கள் . கேட்ட வரங்களை அருள்வாள்.
5- பச்சரிசி பொங்கல்
பச்சரிசி பொங்கல் படையலில் மனம் மலர்வாள்.நாட்கிழமைகளில்
(செவ்வாய், வெள்ளி கிழமைகள்) பால் போன்று மனம் கொண்ட பச்சரிசிதனை வெல்லம் பாகுதனில் முந்திரி ,திராட்சை ,நெய்யிட்டு மணக்க மணக்க நெய்வேத்தியம் வையுங்கள். தித்திக்கும் செய்திகளை தினம் தருவாள். ஆடி மாதத்தில் மனத்தூய்மையோடு பக்திப் பெருக்கோடும் பேரிச்சம் பழம் கற்கண்டு, வாழைப்பழம் வைத்தாலே போதும் .
ஆடி மாதம் முக்கியமாக காலை , மாலை நேரங்களில் தினமும் அம்மனுடைய பாடல்கள் வீட்டில் ஒலிக்குமாறு செய்யவும். எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் அனைத்தும் கிடைத்து வாழ்வினில் வெற்றி பெறலாம்.
அம்மன் அவள் அழகு முகம் மலர பெற்று, ஆனந்தத்தில் அகமகிழ்ந்து பக்தர்களான நம்மை காத்தருள்வாள். சிறப்பான வாழ்வுதனை அவள் கொடுப்பாள் .
சிட்டுக்குருவி அங்குமிங்கும் தான் ஓடி தன் குஞ்சுகளுக்கும் அன்போடு இறை தேடி கொண்டு வந்து ஊட்டி மகிழும். அதுபோல நம் தாய்க்கு எது பிடிக்கும் என அறிந்து தேடி கொண்டு வந்து சமர்ப்பித்தல் , மனம் மகிழ்தல், அவள் புகழ் கேட்டல், அவள் புகழ் பாடுதல் கோவில் குளங்களுக்கு செல்லல் என அவளுக்கும் அதிக நேரம் செலவிடுங்கள்.
அதில் மகிழ்ச்சி காண்பீர்கள் உவகை அடைவீர்கள் .உள்ளத்தில் உறங்கிய கவலைகள் நீங்கப் பெற்று புதிய புத்துணர்ச்சி பெறப்பட்டு , அனைத்து அனுகூலமும் வாழ்வில் நாம் பெற்று, அனைத்து செல்வங்களோடும் - வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்ந்து மனிதப் பிறவியின் பிறந்த பயனை அடைகவே.
ஆடி மாதத்தின் சிறப்புகள்🙏🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2021/07/blog-post_15.html
ஆடி மாதத்தில் அம்மனுடைய பூரணமான தெய்வீக சக்தி அனைத்தும் பெறுவதற்கு வேப்பிலை வழிபாடு🙏🙏🌹🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/07/blog-post.html
சுமங்கலி பெண்களாக என்றும் திகழ்வதற்கு புனிதமான மாங்கல்யம் செய்வதற்கான நேரம் மற்றும் செய்யக்கூடிய முறைகள்🙏🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக