ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கிருத்திகை விரதம்


கிருத்திகை விரதம் முறைப்படி விரதம் இருக்கும் முறை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் -மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்- கருவாய் உயிராய் கதியாய் விதியாய்- குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

மயில் மீது அமர்ந்த 
கோலத்தில் முருகன் காட்சி தருகின்றான். மலையின் 
மீது நின்ற கோலத்தில்

 கந்தன் காட்சி தருகின்றான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் காட்சி தருகின்றான்.

யாமிருக்க பயமேன் என்று சிரித்தவாறு கதிர்வேலன் காட்சி தருகின்றான். 

தாமரை மலரில் குழந்தை 
வடிவத்திலே கார்த்திகேயன் 
காட்சி தருகின்றான். 
இப்படிப்பட்ட அற்புத 
காட்சிகள் மட்டுமா
  தருகின்றான்! 

முருகனின் ஆடலிலும்  தனி அழகுண்டு என்று  குமரகுருதாசர்  மிக  அழகாக வர்ணிக்கிறார் ..

அழகிய அரைஞான் 
ஆட -மார்பினில் உள்ள 
பூணூல் ஆட- மணம் 
நிரம்பிய கடம்ப மாலை 
ஆட -இடையாட- தோள் 
வளையாட- விளங்கும் 
குழை ஆட -பன்னிரு 
கைகளும் ஆட -தாமரை 
மலர் போன்ற பன்னிரு 
விழிகளோடு நெற்றிக்கண் 
ஆறும் சேர்ந்தாட- மலர்ந்த 
அழகிய வாய்இதழ் 
ஆட- வேலாட- மயிலாட-
நான்கு வேதங்களும் ஆட -அதைக்கண்டு நம்மையும்
 ஆட வைக்கும் முருகனின் 
அழகுக்கு ஈடு இணை ஏது!


முருகப்பெருமானின்
முகமோ ஆறு *
அழகிலே கனிந்த முகம் ஒன்று*
 அன்பிலே சிவந்த முகம் ஒன்று* செல்வச்செழிப்பிலே கவர்ந்த 
முகம் ஒன்று *
அறிவிலே சிறந்த  முகம் ஒன்று* ஆற்றலின் மகிமைபெற்ற முகம் ஒன்று *
கருணையில் வந்த முகம் ஒன்று *
என ஆறுமுகன் ஆனந்த 
கோலத்தில் காட்சி 
தருகின்றான்*

எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு  எம் முருகப்பெருமானுக்கு உண்டு 

 முருகனை நினைத்து கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை மாதம் வீதி எங்கும் விழாக்கோலமாக மேற்றி வழிபடுவது மிக மிக தனி சிறப்பன்றோ..

ஐந்துமுக தீபம்

ஆறுமுகனை வரவேற்று 
 படைக்கின்ற கிருத்திகை
நட்சத்திரத்திலே தீபத்தின்
மகிமைதனை அறிவோம்...    

சூரியன் *சந்திரன் *அக்கினி * என ஒன்று சேர்ந்து மூவரின் பிரதிபலிப்பில்
ஏற்றுகின்ற தீபத்திற்கு மிகப்பெரிய சக்தி உண்டு * தாம் மட்டுமன்றி தம்மை சுற்றி இருக்கும்  அனைவருக்கும் ஒளியை கொடுப்பதுதான் தீபத்தின் சிறப்பு *

ஐந்து முக தீபம் ஏற்றுவது  மூலமாக வாழ்க்கையில்  உள்ள இருள் விலகி தீபமான ஒளிமிகுந்த வாழ்க்கையை முருகப்பெருமான்  நமக்கெல்லாம் 
அளிக்கின்றான்* என்பதே  தீபத்தின் சிறப்பு.



கார்த்திகை அன்று..

அதிகாலை நீராடி *
அகமும் புறமும்
பக்தி மயமாகி *
ஐந்து முக
விளக்கை ஏற்றி *
ஏற்றிய சுடர் தனிலே
மனம் ஒன்றாகி  *திருநீறு
பூசிய நெற்றி நிறைவாகி *
முருகா முருகா சரணம் *
உன் பாதமே சரணம் என 
வேண்டுகின்ற வேண்டுதலுக்கு 
குரல் கேட்டு ஓடிவந்து 
அருள்கின்ற அனுதினமுமே
கார்த்திகை விரதம்.

கந்த சஷ்டி கவசம் வரலாறு வழிமுறைகளும் 🌹🍀🌹🙏👇👇

https://balakshitha.blogspot.com/2020/05/blog-post.html



கந்தர் சஷ்டி விரதம் இருக்கும்

 முறை🌹🍀🌹🙏👇👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_30.html


திருநூறு* என சொல்லப்படும் விபூதியின் சிறப்பு ‌..
வி*   பூ*   தி* வினைகள் அனைத்தும் விலகி அனைத்து நன்மைகளும் பெறுவதற்கு நெற்றிதனில்) பூசுகின்ற திகட்டாத இன்பம் தரக்கூடிய திருநீறே *

பசும் சாணியின் சாம்பலால் தயார் செய்த வெண்மை நிறம் கொண்ட கோமாதாவின் அருள்கொண்ட விபூதியை நெற்றி நிறைய பூசிக்கொண்டு 'என்றும் இந்த ஒரு சாண் உடம்பு முடிவிலே சாம்பல் என அறிந்து நாம் வாழ்கின்ற வாழ்க்கையை நல்லமுறையில் வாழவேண்டும் -எனும்                  மணம்கொண்டு நற்கருத்தை உணர்த்துகின்ற முருகப்பெருமானை கார்த்திகை விரதத்தை  மேற்கொண்டு அன்றைய  தினம் நினைத்து வேண்டி புண்ணியத்தை அடைவோமே.

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


சொந்தமாக வீடு கட்ட முருகனின் அற்புதமான இரண்டு பரிகாரங்கள் 🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4


 மேலும் படிக்கலாம்...

சிறப்பான வாழ்க்கை பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html



Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக