காயத்ரி மந்திரம் பிறந்த கதை
வாழ்க்கை ஒளியாக காயத்ரி மந்திரம்
செல்வம் செழிப்பாக காயத்ரி மந்திரம்.
வந்த பிணி வெகுண்டோட காயத்ரி மந்திரம்.
கலையாத கல்வி பெற காயத்ரி மந்திரம்.
கண்ணுக்கு இனிய வாழ்வு பெற காயத்ரி மந்திரம்.
எனும் பொக்கிஷம் பிறந்த கதை அறிவோமே...
முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என அறிந்த முனிவர்கள் ஞானம் பெற வேண்டி காரணமதி எனும் மத்தினால் பாற்கடலை கடை தனிலே எழுந்த
வேதசாரமே..
த்ரயி* எனும் காயத்ரி வடிவமாக காட்சிதர ,பூ உலகம் , மத்திய உலகம் ,
மேல் உலகம் எனும் சக்தி அனைத்தும் சேர்ந்து ஒரு பரம ஜோதி சொரூபமாக* உண்மை நிலையை அறியக் கூடிய பரம சக்தி கொண்ட ஒளியாக* சத்தியத்தைக் காக்கின்ற ஒரு பேரொளியாக* காயத்ரிதேவி பாற்கடலில் தோன்றுகின்றாள்.
முகத்தில் தோன்றும் பிரகாசம்
ஐந்து முகம் கொண்டவளாக
தாமரை பூவில் வீற்றியவளாக
ரத்தின மாலை அணிந்தவளாக
பஞ்சபூதங்களும் தன்வசம் கொண்டு
காட்சி தந்து காயத்ரி மந்திரத்தை அருள்வதற்காக ஆனந்தமாய் எழுகின்றாள்*
காலையிலே குழந்தை வடிவிலே காட்சி தந்து ரிக் வேதத்தை உச்சரித்து மகிழ்கின்றாள்.
மதியம் யஜூர் வேதம்- கன்னியாக காட்சி தந்து உச்சரிக்க ..
மாலையிலே தாயாக காட்சி தந்து சாம வேதம் எடுத்துரைக்க..
இரவிலே அதர்வண வேதம்
முதியவள் ஆக காட்சி தந்து ஜெபிக்க கேட்டு ..
முனிதர்கள் மட்டுமன்றி
முக்கோடி தேவர்களும் மெய்மறந்து நின்றனர்.
நான்கு வேதங்களும் ஓதிய பலனை நான்கு வரி பாடலாக உருவேற்றி
தம் கைகளில் ஜப ஓலையாக ஏந்திவாறு காட்சி தருகின்றாள்.
துர்க்கை *சரஸ்வதி * லக்ஷ்மி* எனும் முப்பெரும் சக்திகளாக திகழ்கின்றாள்*
இந்த கண்கொள்ளா காட்சிதனை கண் முன்னே கொண்டு வர கண்கள்
பனிக்கையிலே -
வெள்ளி கிழமையிலே சக்திகள் அனைத்தும் ஐக்கியமாகும் அந்த சுப நாளில் ஒளி மயமான தீபத்தை ஏற்றி..
வெள்ளி கிழமையிலே சக்திகள் அனைத்தும் ஐக்கியமாகும் அந்த சுப நாளில் ஒளி மயமான தீபத்தை ஏற்றி..
காயத்ரி தேவியின் மந்திரமோ நம் உதட்டினில் மட்டுமன்றி திபவொளியிலே வீடு முழுதும் இனிமையாக நிறைந்து
இருக்க
பக்தி பரவசமோ நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்திடவே வாழ்க்கையில்
பக்தி பரவசமோ நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்திடவே வாழ்க்கையில்
நிறைவை கண்டு தெய்வத்தின் அருள் பெறுவோம்.
மேலும் படிக்கலாம் -தோஷங்கள் நீக்கி வாழ்வில் வளம் பெற கல் உப்பு தீப வழிபாடு 🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக