காயத்ரி மந்திரம்
வாரத்தில் நாட்கள் பல வந்தாலும் தெய்வீகமான நாள் என- நம் மனதில் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமையன்றோ!
மற்ற நாளில் சிறிது சோர்வாக இருந்தாலும் - புத்துணர்ச்சி மனதில் எழ- மனமும் வீடும் தூய்மைப்படுத்தி தெய்வத்தை வேண்டுகின்ற ஒரு அற்புத நாள் வெள்ளிகிழமையன்றோ..
வீட்டிலே குழப்பத்திற்கான காரணம் பலவாயின் அனைத்தும் விலக ஆண்டவனை தேடுகின்ற நாள் வெள்ளிக்கிழமை அன்றோ!
என அனைவரும் அறிந்தாலும் வழிபடும் முறையின் மகத்துவத்தை தெரிந்து
கொண்டால் பலன் பெறுவதும் மிக எளிது அன்றோ !
காயத்ரிமந்திரம் * வீட்டில் ஒலித்தால் போதும் .வாழ்கின்றவாழ்க்கை முழுதும்
காரியம் ஜெயமாகும் .
ஓம் பூர் புவஸ்வஹ
தத்ஸ விதூர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன ப்ரசோதயாத்*
கங்கைக்கு நிகரான
தீர்த்தம் இல்லை *
விஷ்ணு பகவானை
விட சிறந்த
தெய்வமில்லை *
காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை*
இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை.
வெள்ளிக்கிழமை தோறும் காயத்ரி மந்திரத்தை வீட்டில் விளக்கேற்றி -ஒன்பது
முறை அல்லது 18 முறை -27 முறை என 9-9ஆக உயர்த்தி 99 முறை நூத்தி எட்டு முறை வரை நம்மால் முடியும் வரை ஜபிக்கலாம் .
தினமும் காலையில் காயத்ரி மந்திரமான ஸ்லோகத்தை பத்து நிமிடமாவது காதில் கேட்குமாறு பதிவொலியில் வீட்டிலே ஒலித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள்..
சிறப்பு-1*
ஸ்லோகத்தின் சக்தியானது வீடு எங்கும் நிறைந்து வீட்டிலே தேவையில்லாத தீயசக்திகள் -தோஷம் அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெறும் *
சிறப்பு - 2*
ரிக் -யஜூர் - சாம -அதர்வண வேதங்களின் அதிர்வலைகள் ஒன்று கூடி -
குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெற்று படிப்பில் மிக சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள் *
சிறப்பு - 3*
வறுமை நீங்கி செல்வம் நிறைந்து வாழ்க்கை வளம் பெறும் *
சிறப்பு - 4*
பிணி அகலும் *
சிறப்பு - 5*
குழப்பம் அனைத்தும் விலகி தெளிவு பெற்று வாழ்வதற்கான வழி முறைகளின் விடை கிடைக்கும் *
என அறிந்த பின்னே ஏன் இந்த தாமதம் !
அனைவரின் வீட்டிலும்
காயத்ரி மந்திரம் ஸ்லோகம் *
காலை வேளையிலே
காதுக்கு இனிமையாக ஒலிக்கட்டுமே.
அன்பு*எனும்
அகம் கொண்டு
பொறுமை* எனும்
குணம் கொண்டு
துணிவு *எனும்
துணை கொண்டு
சோதனை வந்தாலும்
எதிர் கொண்டு ..
லட்சியப் பாதையில்
நடந்து சென்று ...
வாழ்க்கையின்
பயனை அடைவதற்கு
காயத்ரி மந்திரத்தை
உச்சரித்து மனித பிறவியின் சிறப்பை அடைவோமே*
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக