புதன், 29 ஜூலை, 2020

பெண்களுக்காக தொடர்-2 பெண்ணின் எதிர்பார்ப்பு




நம்முடைய தமிழ் கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் சற்றும் மாறாமல் அதே சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் தெளிவாக முடிவெடுக்க கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய மிக அழகான ஒரு வழி தேடலே.. 

பெண்களுக்காக தொடர்-2
 
திருமணம் எனும் பந்தத்திற்குள்  உருவாகும் அழகான மலர் தான்
தாம்பத்யம். கணவன் மனைவி அன்னியோன்யம் என்பது தாம்பத்யத்தின் பரிமாணம்.

புதுமணம் தம்பதிகளின் வாழ்க்கையில் கணவன் மனைவி மனநிலையின்  ஆரம்பகட்டம்..

திருமணம்  எனும்  கூட்டுக்குள்  சுற்றிக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள் . அன்பை ஒருவர் மீது ஒருவர் பரிமாறிக்கொண்டு அழகாய் வாழும் சிட்டுக்குருவிகள். ஒன்றும் தெரியாத அனுபவம் பெறாத ஆனந்தம் மட்டுமே வாழ்க்கை என எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்ற சிட்டுக்குருவிகள்.

தாம்பத்திய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமானது

எடுத்தவுடன் தாம்பத்தியத்தின் புனிதம்  அவர்கள் அறிவதில்லை..

விட்டுக்கொடுத்தல் -கோபம் -தாபம் மகிழ்ச்சி எனும் சுவாரஸ்யமான வாழ்வினில் போக போக  படிப்படியாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகு தான் தாம்பத்ய வாழ்வில் புனிதம் இருவருக்கும் புரியும் .

 ஒரு புதுமணப் பெண்ணின் மனநிலையின் உணர்வோட்டம் இதுதான்..

புதுமணம் புரிந்த  ஒரு மனைவி தன் கணவனிடம் பார்க்கின்ற எதிர்பார்ப்பு..

1 -  தன்னிடத்தில் அன்பும் பாசமும் அதிகம் வைத்திருக்கும் நல்ல கணவனாக

2-  மல்லிகைப்பூ அல்வா சகிதமாக மனைவியின் கனிவான பேச்சில்  மயங்கும் கணவனாக

3 -  சமையலுக்கு உதவும் நல்ல தோழனாக 

4 - நம்மிடத்தில் மனம் விட்டு பேசும் விதத்தில் இனிமை கொண்டவனாக

5 - எதிலும் குறை காணாது -அப்படியே இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் பெருமையாக பேசும் உத்தமனாக ..

அமைய வேண்டும் என்பது அவள் கருத்து .உண்மைதானே..எல்லா பெண்களுக்கும் இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும் . இதில்  தவறு என்று யாராவது சொல்ல முடியுமா!

 ஆயிரம் கனவுகள் மனதிலே சுமந்து தன்னுடைய குடும்பத்தை திடீரென்று தியாகம் செய்து -புகுந்த வீட்டிற்கு நிரந்தரமாக  நுழையும் பெண்கள் இப்படி எதிர்பார்ப்பது தவறு ஒன்றும் இல்லை.

ஒரு அழகான செடியில் பூக்கின்ற மலரின் மொட்டு ஆயிரம் கனவுகளை மனதில் சுமந்து கொண்டு பூக்கின்ற போது அந்த மலரின் மனதை அறிவது கணவனின் தலையாய கடமை பொறுப்பு மன்றோ!

அது சரி ஆண்களுக்கும் -மனைவி இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்குமன்றோ! 

 அடுத்த தொடரில் காண்போம்.


Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக