நம்மை சுற்றி பறந்துகொண்டிருக்கும் தேவதை அஸ்துவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
நாம் சுப வார்த்தைகள் பேசுவது சிறப்பு .
மற்றவரை புண்படுத்தாத வார்த்தைகள் பேசுவது சிறப்பு.
கனிவான வார்த்தைகள் பேசுவது சிறப்பு.
ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் பேசுவது சிறப்பு.
வாழ்த்து கூறும் வார்த்தைகள் பேசுவதும் சிறப்பு .
ஏன் அப்படி பேச வேண்டும்! என்பதைப்பற்றி நாம் கண்டிப்பாக அறிந்து கொள்வது
அவசியம்.
அஸ்து எனும் தேவதை நம் கண்களுக்கு தெரியாது. நம்மைச் சுற்றிக் கொண்டே
இருக்கும். கடவுளின் படைப்புகளில் அஸ்து என்னும் தேவதையின் பங்கு அதிகம். தெய்வ
சுபிட்சத்தை கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதை .தெய்வீக அம்சம் நிறைந்த தேவதை .
நம் கண்களுக்கு தெரியாது.. நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் அற்புத தேவதை..
தெய்வத்தை எப்படி கண்ணுக்கு புலப்படாது- மனதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியுமோ
அது போல அஸ்து எனும் தேவதையை மனதால் மட்டுமே நம்மால் உணர முடியும் .
காகத்தின் குரல் 'காக்கா' என்பது தவிர வேறு மொழி தெரியாது.. சிங்கத்திற்கு
கர்ஜிப்பதை தவிர வேறு மொழி தெரியாது .மாடு 'மே 'என்பதை தவிர வேறு மொழி தெரியாது..
என்பது போல அஸ்து எனும் தேவதைக்கு 'ததாஸ்து' எனும் சொல்லைத் தவிர வேறு எதுவும்
தெரியாது .
ததாஸ்து என்று சொல்லிக்கொண்டே நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். ததாஸ்து
என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள் . நாம் நல்ல வார்த்தைகள்
பேசும்போது- ததாஸ்து என்று தேவதை சொல்லிக்கொண்டே பறந்து போகும் ..நிகழ்வு நல்லதாக
அமையும்.
கொரோனா எனும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமான உணவு முறைகள்🌹🍀🌹👇
நாம் தீய சொற்களை பேசும்பொழுது ததாஸ்து என்று அந்த தேவதை சொல்லிக் கொண்டே
பறந்து போகும்.. நிகழ்வு கெட்டதாக அமைந்துவிடும் என்பதை என்றும் மனதில்
கொள்க.
நாம் கோபத்தில் அல்லது அலுப்பில் ஏதாவது தவறான வார்த்தைகள் பேசினால் கூட அது
நமக்கே சில சமயத்தில் அபத்தமாக அமைந்துவிடும்..
" என் சொல்லை கேட்காது வீணாக தான் போவாய்- காலம் முழுதும் இப்படித்தான்
இருப்பாய்-தொலைந்து போ -கண் முன் நிற்காதே -நல்லாவே இருக்க மாட்டாய்" என
அலுத்துக் கொண்டு பேசுவது -கோபமாக கூறுவதை முடிந்தவரை தவிர்க்கவும்.
"நலமாக வாழ்வாய் -சிறப்பாக வருவாய்- சந்தோஷம் நிறையட்டும் மங்களம் உண்டாகட்டும்
-மனம் போல் வாழ்வாய்- பெருவாழ்வு வாழ்க செல்வம் பெருகட்டும் "எனும் சுப
வார்த்தைகள் அடிக்கடி நாம் சொல்லும்போது -ததாஸ்து ததாஸ்து என சொல்லிக்கொண்டே
அஸ்து தேவதை சுற்றிக்கொண்டே வரும்பொழுது ..
அந்த சொல் கனிந்து விரைவில் நம் குடும்பம் சுபிட்சம் நிலைமைக்கு வரும் என்பதை
முழுமையாக அறிந்து கொள்க.
அகத்திலே புன்னகை புரிந்து- நல்ல மனம் கொண்டு -நல்ல வார்த்தை பேசி- நன்மை
பயக்கும் செயல்புரிந்து -அதிர்ஷ்ட தேவதை அஸ்துவின் அருள் பெற்று- நலமாக வாழ்ந்து
வாழ்விலே வாழ்ந்த பயனை அடையலாம் .
தங்கள் கருத்தை பதிவிடவும்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக