நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க டென்ஷன் இல்லாது இருப்பதற்கு சில
டிப்ஸ்
சொல்லுக்கும் செயலுக்கும் அழகு சேர்ப்போம் ..
இந்த பூமியில் நம்முடைய பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம்.
அந்த வரம்இனிதாகி- நற்பண்புகள் நிறைந்த அர்த்தம் நிறைந்த வாழ்க்கையாக
தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி கண்டு முடிவிலே ..
ஆன்மீகத்தில் லயித்து தெய்வத்தின் பாதம் பணிந்து- நற்கதி அடைய வேண்டும்
என்பதே- இந்த மனித பிறவியின் சாராம்சம் .
ஆனால் வாழ்க்கை என்பது கடும் போராட்டம் சந்திக்கும் சூழ்நிலையில் இன்று நாம்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை- பலவித சூழல்கள் பல வித மனிதர்கள்-
பலவித சந்தோஷமான விஷயங்கள் பலவித கஷ்டமான விஷயங்கள் அனைத்தையும் பார்க்கின்றோம்.
டென்ஷன் டென்ஷன் டென்ஷன்
மனதின் பிரதிபலிப்பு முகம்தான் மறைத்திடுமோ !
' சோகத்தின் விளிம்பு தனை
விடுத்து விடு- மகிழ்ச்சி எனும் வார்த்தைக்கு உறம் இடு' என குரல் பல
ஒலித்தாலும் ..
என் மனம்தான் இவ்வுரையை
ஏற்றிடுமோ!
எனும் சந்தேகத்தை விடுத்து விளக்கத்திற்கு வரலாம்.
முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணங்கள் இருந்தால் கண்டிப்பாக முடியும் .
தனிமையில் ஒரு நிமிடம்
'நான் நானாக இருக்கிறேன்- என் மனம் என்றும் புனிதமானது -என் கருத்தும் என்றும்
புனிதமானதே'
இந்த வரிகளை தனிமையில் பத்து முறை மனப்பூர்வமாக மனமுவந்து சொல்லிப்பாருங்கள் .
நாம் கண்களை திறக்கும் போது நம்முடைய மனதிலும் முகத்திலும் ஒரு
புத்துணர்ச்சியை காணமுடியும் .
எவ்வளவு சலனங்கள் இருப்பினும் அனைத்தும் விலக -இப்படிப்பட்ட புத்துணர்ச்சியான
வார்த்தைகளை சொல்ல பழகுங்கள் .
அபரிதமான சக்தி கொண்ட அந்த சொற்கள் நம்மை காக்கும்-நம்மை
வழி நடத்தும் -நடப்பது அனைத்தும் நன்மையான செயல்களாக அமையும்.
தாய்மை -அன்பு -வாழ்க -வளர்க
எழுக -மகிழ்க என்பதுபோல உங்களுக்கு பிடித்தமான புத்துணர்ச்சி
தருகின்ற இனிய சொற்களை அதிகமாக பயன்படுத்துங்கள்.
அஸ்து எனும் தேவதையின் அருளைப் பெறுவதற்கு🙏🌹🍀🌹🍀 👇👇👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/07/blog-post_30.html
சொந்த வீடு மனை வாழ்வதற்கான வழிமுறைகள் பரிகார ஸ்தலங்கள் பற்றி அறிந்துகொள்ள அமேசான் கேடிபி யில் டவுன்லோட் செய்து பயன்பெறவும்🌹🌹🍀🌹🌹 👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
கவலைகள் எதுவும் தெரியாத நிலை கண்டு -வினைகள் எதுவும் எமை அண்டாது- தீயசக்திகள்
எமை தீண்டாது -தொண்டு செய்து வாழும் மனம் கொண்டு- மலரினும் இனிய குணம் கொண்டு -
பொருளின் மீது பற்று வைக்காத கண்கொண்டு குழந்தை மனமெனும் மலரினும் இனிய குணம்
கொண்டு-வாழ்ந்து பிறந்த பயனை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொள்க.
நல்ல விஷயங்கள் நாம் சொல்ல பிறர் கேட்டுஅதை பகிர்கின்ற மகிழ்கின்ற
மகிழ்வுதனை நாம் அறிந்து வாழ்கின்ற வாழ்க்கை என்றும் புனிதமே.
நன்றி பாலாக்க்ஷிதா
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக