வாழ்வில் உயர்வு தரும் கண்ணாடியின் மகிமை
நம்முடைய மனம்தான் கண்ணாடியின் பிரதிபலிப்பு .தினம்தோறும் கண்ணாடியில் முகம்
பார்க்கையில் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை அனுகூலமாக பார்க்கலாம்.
அதற்கான வழிமுறைகளை விரிவாக காண்போம்.
மலர்கள் மலர்ந்து தெய்வத்திற்கு மாலையாகி மலர்ந்த பயனை அடைவது போன்று
போன்று நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் நல்ல முறையில் வாழ்ந்து வாழ்க்கை
பயனை அடைய வேண்டும்.
ஆனால் பலருடைய வாழ்க்கையில் பலவிதமான துன்பங்கள் அவர்களுடைய நினைவலைகளோ..
குழந்தையாக இருந்துவிட்டால் வாழ்வினில் பிரச்சனை என்பது ஏது! அனைவரின் ஆதங்கம்
இதுதான்..
குழந்தையின் மனம் போன்று இன்றைய சூழலில் இருந்தாலும்.. மிகப்பெரிய ஆபத்தும்
உண்டு.
நாம் நினைக்கின்றோம் குழந்தையாக இறந்துவிட்டால்.. ஆனால் குழந்தையின்
நிலைமையை கொஞ்சம் சிந்திப்போம் ..பின்னோக்கி செல்வோம் . குழந்தைகளுக்கு பிரச்சினை
இல்லை என்று யார் சொன்னது!
பல பிரச்சினைகள் குழந்தைகளுக்கும் உண்டு .
1-இனம் புரியாத பயம்.
2 - நம் அம்மா எங்கே காணோம்!
3 - எங்கே விழுந்துவிட போகின்றோம் என்று பயந்துகொண்டே ஆனால் ஆசையோடு
ஓடுகின்ற குழந்தை..
4 - பல வலிகள் இருப்பின் சொல்ல தெரியாது திக்குமுக்காடும் குழந்தை..
5- படிப்பதில் சிரமம் அதிகம் இருக்கும் கட்டாயம் படித்து தான் ஆகவேண்டும்
என்று கவலை ..
6- உண்மையை பேசி மாட்டிக்கொண்டு அடிவாங்கும் குழந்தை ..
என எவ்வளவோ பிரச்சனைகள்.. அப்பப்பா! இதை பார்க்கும்போது பெரியவர்களாகிய நாமே
பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சிந்திக்கலாம்.. வெற்றி பெற மிக சிறப்பான அதற்கான வழி தேடல்கள் இதோ..
நாம் பெரியவர்கள் .சிந்திக்கும் திறன் ஆற்றல் உள்ளவர்கள் -உறுதியான மனம்
படைத்தவர்கள் -உள்ளத்தின் பண்பு மிக்கவர்கள்- தேயாத தங்கம் போன்ற உயர்ந்த குணம்
கொண்டவர்கள்.
அந்த குணங்கள் வெளியில் தெரியாமல் நம்மை பற்றி மற்றவர்கள் புறம் பேசுவது என்பது
நம்முடைய ஜாதக பலன்கள் அடிப்படையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் .
அதனால் சில சமயங்களில் நாம் மனமுடைந்து துன்பத்திற்கு ஆளாகின்றோம்.அந்த
மாற்றங்களை மாற்றக்கூடிய சக்தி நம்முடைய மனதை பிரதிபலிக்கக்கூடிய முகம்
பார்க்கும் கண்ணாடி உண்டு.
தினம்தோறும் காலையில் தூங்கி எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்க்க அந்த
சக்தியானது- நம்முடைய மனதில் உள்ள நல்ல எண்ணங்களை மற்றவர்களுக்கு
வெளிக்காட்டுவதில் தெரியப்படுத்துவதில் புரிந்துகொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
துன்பத்தையும் துயரத்தையும் சரி செய்யும் ஆற்றல் உங்களுக்கு உண்டு..
காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடியில் நம் முகத்தை காணும்பொழுது
மனதில் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் மறைந்து விடும். நினைக்கும்
எண்ணங்கள் அனைத்தும் நல்லவிதமாக மாற்றும் சக்தி நிலைக்கண்ணாடிக்கு உண்டு .
அதனால் தான் தெய்வீக சக்தி வீட்டில் நிறைந்திருக்க வேண்டி -பல வீடுகளில்
தெருவாசலில் உள்ளே நுழையும் போது நேராக நிலைக்கண்ணாடியில் வைத்திருப்பதை நாம்
பார்த்திருப்போம் .
மகாலட்சுமி வீட்டிற்குள் வருகை புரிவாள். வாசம் செய்வாள். நிறைந்திருப்பாள்.
என்பது கண்ணாடியில் மகத்துவம் என்பதை தெரிந்தே - அந்த காலத்திலிருந்து
பெரியவர்கள் இந்த முறையை பின்பற்றி வந்தார்கள் .இன்றும் நடைமுறையில் இருந்து
கொண்டிருக்கின்றது.
காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான முறை
காண்போம்..
நம்மால் முடியும் -நான் பண்பு தவறாதவன் -தெய்வ பக்தி கொண்டவன் -பொய் சொல்லாதவன்
உறுதி கொண்ட நெஞ்சினன். கருணை கொண்ட மனதினன்- அன்பு கொண்டவன்- எனும் வாக்கினை
மனதிலே கொண்டு..
தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உங்கள் முகத்தை காணுங்கள். உங்கள்
முகத்தில் சலனம் இருந்தால் -பயம் இருந்தால் துக்கம் இருந்தால் துயரம் இருந்தால்
உங்களுடைய மனம் பிரதிபலிப்பு உங்கள் முகத்தில் காட்டும் .
அப்போது கீழ்காணும் வார்த்தைகளை தவறாது சொல்லுங்கள் .
இன்றைய பொழுது அனைத்தும் நல்லதாக நடக்கும்- நினைத்த காரியங்கள் நடக்கும்.
என்னுடைய முயற்சிகள் அனைத்தும் கைகூடும்.
லட்சியத்தை நிறைவேற்றும் நாள் இதோ.. என் அருகில் வந்துவிட்டது- என நினையுங்கள்.
கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பவும் அதையே மூன்று முறை சொல்லுங்கள்.
3முறை மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்.

அடுத்து உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரியும் .அந்த முகத்தில் உங்களுடைய
கனவு நிறைவேறும் மலர்ச்சி தெரியும். ஒளியின் ஒளியால் நீங்கள் உவகை
பெறுவீர்கள்.
விரைவில் திருமணம் கைகூட சங்கடகர சதுர்த்தி விரதம் 🌹🙏🌹🙏🌹👇👇👇👇
பயிற்சி செய்யுங்கள் தினமும் இந்த பயிற்சியை செய்யுங்கள்.
உங்களுக்குள் நல்ல மாற்றத்தை காண்பீர்கள் உங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி
கிடைத்து எதிர்காலத்தில் வெளிச்சத்தை வெற்றியை நிச்சயம் காண்பீர்கள்.
நம்முடைய வாழ்க்கை நம் கையில் என்பதை உணர்த்து தினம்தோறும் காலை எழுந்ததும்
முதலில் கண்ணாடியில் முகம் பார்த்து உவகை கொண்டு -ஆனந்தத்தை உள்ளுணர்ந்து
வாழ்க்கையில் உயர்வடைந்து லட்சியத்தில் வெற்றி பெற்று வாழ்க்கை பயனை அடையுங்கள்.
சொந்தமாக வீடு மனை அமைவதற்கு பத்து விதமான வழிபாட்டு பரிகாரமுறைகள் 🌹
அமேசான்்Kindleapp download செய்து படித்து பயன் பெறுக 🌹🍀🌹👇👇
மேலும் படிக்கலாம் ..
மனக்குழப்பங்கள்- கண்திருஷ்டி அனைத்தும் விலக கல் உப்பு பரிகாரம்
🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇👇👇👇👇
கொரோனா எனும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமான உணவு முறைகள்🌹🍀🌹👇
நன்றி பாலாக்க்ஷிதா 🙏
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக