பெண்களுக்காக தொடர்-3
திருமணத்திற்கு தயாராகும் ஒரு ஆண்மகனின் எதிர்பார்ப்பு ..
திருமணம் ஆகாத பெண்களும் திருமணம் ஆகி புகுந்த வீட்டில்
வாழ்க்கை பயணத்தில் அடிஎடுத்து வைக்கும் பெண்களும் தெரிந்து
கொள்ளக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய -முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இந்த
பெண்களுக்காக -தொடரில் பார்க்கலாம் .
திருமணத்திற்கு முன்பே வரப்போகும்
கணவனின் மனநிலை பற்றி நாம் அறிய வேண்டும்! எனும் கேள்விக்கு முதலில்
பதில் காண்போம் .
சிந்தை தெளிக.. குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள
வேண்டியது ஒரு பெண்ணின் கடமை .அனைவரையும் அறிந்து குடும்பத்தை நடத்திச் செல்வது
ஒரு பெண்ணென்றோ! அதுவும் வாழ்க்கையில் வாழ்க்கை துணைவனோடு காலம் முழுதும்
மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ்வதற்கு..
திருமணத்திற்கு முன்பே பொதுவாக ஒரு ஆண்மகனின் மனநிலையை புரிந்து கொள்வது மிகவும்
அவசியம்.
திக்குத் தெரியாத காட்டில் சுற்றித் திரியும் பறவை போல் -தண்ணீர் கண்டால் மழலை தாவி ஓடும் ஆர்வம் போல் -மலரினை கண்டு வண்ணத்துப்பூச்சிகள் காணும் மகிழ்ச்சி போல்- மழைத்தூறல் கண்டு மயில் தோகை குதித்து ஆடும் ஆனந்தம் போல்..
26 ,27 வயது வரை ஆண்களின் மனநிலை இப்படித்தான் இருக்கும்.
எளிதில் திருமணம்- குடும்பம் -கடமை கட்டுப்பாடு என்னும் கூட்டுக்குள் விழுந்துவிட விரும்ப மாட்டார்கள் .
27 வயதிற்கு பிறகு ஆண்களின் மனதில் திருமணம் என்ற எண்ணம் எட்டிப்
பார்க்கும்..
நம்முடைய வருங்கால மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் -ஆண்களின் மனநிலை
இப்படித்தான் இருக்கும்..
1 - தனக்கு வரப்போகும் பெண் மிகவும் அழகானவள் என்பதை விட தமக்கு மட்டுமே
அழகாக தெரிய வேண்டும் என விரும்புபவர்கள் .
2- வெளியே கலகலவென பேசும் பெண்களை கண்டு ரசிப்பார்.. ஆனால் தனக்கு வரும்
மனைவி மிகவும் பொறுமையோடும் அமைதியோடும் வரவேண்டும் என நினைக்கும் மகனாகவும்
அமைக்கின்றான்.
3- தமக்கு வந்த மனைவி தம் சொந்த பந்தங்கள் அனைவரையும் அனுசரித்து அரவணைத்து
உபசரிப்பதில் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்று நினைப்பது ஆண்மகனின்
இயல்பு.
என்பதை கருத்தில் கொள்க திருமணம் ஆன பிறகு அதன்படி நடப்பதிலும் கவனம்
கொள்க.
4 - புதிய மனைவியிடம் தன்னுடைய தாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து
பேசும் ஆண்மகனே அதிகம். தாய் செய்கின்ற சமையலிலும் சரி- பூஜை
நமஸ்காரங்களிலும் சரி ..
தன்னுடைய மனைவியும் அந்த சம்பிரதாயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்
மிகவும் தெளிவாக இருப்பான். அதற்கேற்ப நடந்து வாழ்வினில் இனிமை கொள்க.
5 - தாய்வீட்டு பெருமைதனை சொல்ல ஆசை இருந்தாலும்- முழுநேரமும் அதைப்
பற்றியே பேசிக் கொண்டு இருக்காது- கணவனுடைய கருத்துக்களுக்கு மதிப்பு
கொடுங்கள்.
கணவனின் பராமரிப்புகளில் கவனம் செலுத்த பழகிக் கொள்ளுங்கள்.
6 - கணவன் மீது முழு நம்பிக்கை என்னும் விதை விதைத்து குடும்பத்தில்
உங்களை இணைத்துக் கொண்டு அனுசரித்து வாழ்வதற்கு பழகிக் கொள்ளுங்கள்..
அவன் மீது முழுமையாக நம்பிக்கை என்னும் விதை விதைத்தால் அது எதிர்காலத்தில்
ஆலமரம் போல் தழைத்து உங்களுடைய எதிர்காலம் சிறப்பு பெறும் .
நீங்கள் நல்ல ஒரு குடும்ப தலைவியாக அனுபவத்தில் சிறந்த பிறருக்கு வாழ்க்கையின்
புனிதத்துவத்தை எடுத்துக்கூறும் மங்கையாக - வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் .
கணவனிடம் சில தேவையற்ற பேச்சுக்கள் பேசும்போது- அதனால் சிலருடைய
வாழ்க்கையே பறி போகக்கூடிய சூழ்நிலை உருவாகலாம் அதனால் தேவையற்ற பேச்சுக்களை பேச
வேண்டாம்.. தவிர்க்க பாருங்கள்.
இதையெல்லாம் பெண்கள் கருத்தில் கொண்டு திருமண வாழ்வில் சிந்தித்து செயல்பட்டால்
அவர்களுடைய வாழ்க்கை என்றும் சுபமாக இனிதாக அமையும்.
இருக்கை சேர்ந்து தட்டினால் தான் ஓசை எழும்.. இருமனம் சேர்ந்தால் தான்
திருமணம் மணம் பெரும். இரு கைகளும் சேர்ந்தால்தான் வாழ்க்கை இனிமை பெறும்.
சாய்வதற்கு தோள் வேண்டும் என்று நினைக்கும் தோழிகள் அனைவரும்
நிரந்தரமாக கணவனின் தோளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது உறுதி கொள்க.
அடுத்ததாக மிக முக்கியமாக திருமணத்திற்கு முன்பு உங்களை நீங்கள்
தயார் படுத்தி கொண்டால் மட்டுமே வாழ்வினில் எதிர்காலத்தில் ஒரு தெளிவு கொண்டு
தைரியமாக வாழ்க்கையை நடத்த முடியும்... அதற்கான ஒரு வழி தேடல் பற்றி..
நாளை தொடரலாம்
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக