சுயநலமா பொதுநலமா மோட்சம் பெற வழி என்ன! வாழ்வினில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கான ஒரு வழித் தேடல்
வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு பணிவு என்பது மிகவும் அவசியம்
என்பதை புரிந்துகொள்க..
பெற்றோர்களிடத்தில் மதிப்பளித்து அரவணைத்து கொண்டு செயல் ஆற்றுபவன் -அவன்
வாழ்வில் உயர்ந்த ஸ்தானத்தை அடைகின்றான் என்கிறது பகவத்கீதை.
மனிதனின் வாழ்க்கையில் ஆயிரம் இன்னல்கள். சமாளிக்கிறான் இன்பம் துன்பம் என
சக்கரம் போன்ற சுழல்கின்றது வாழ்க்கை.
ஒரு முக்கியமாய் ஆற்றக்கூடிய செயலை செய்யாது தவறை விடுகின்றான். முதுமையில்
அதை நினைத்து வருத்தப்படுகிறான்.
கவலைப்படுகிறான். துயரப்படுகின்றான். பலனேது..
இளமையில் தவற விட்டோம் என முதுமையில் வருந்துவதில் பலனேது..
இளமையில் சிந்திக்க .. எதிர்காலத்தை எண்ணி சிந்திக்க.. இன்று வாழ்ந்து விட்டோம்
என்று இருமார்ந்து விடாதீர்..
நாளை என்று சேமித்து வையுங்கள்..
முதுமையில் நிம்மதியாக வாழ்வதற்கு இன்று சேமித்து வையுங்கள் .
ஒரு முதியவர் மனம் வருந்தி எழுதுகின்ற பதிவு இது..
மனதின் வலி- மானிடனே உன் மனதில் வழியும் குருதியின் வலிக்கு மருந்து
தேடுக தேடுகவின்- வலிக்கு காரணம் யார் எனவோ! யாருக்கும் தெரியாதென்
என்மனதன்றி யார் அறிவார் !
வாழ்க வையகம் -வாழ்க வையகம் எனும் போற்றும் மனமிருந்தும் விதியின் வலிமை
என் தலைவிதியில் எழுதி வைத்த பிரம்மனுக்கு தெரியுமோ! என் வலி என்னவென்று..
கண்ணுக்குப் புலப்படுவாயோ பிரம்ம தேவா.. கண்டுவிட்டால் கேள்விகள் நான்
கேட்க- திக்குமுக்காடுவது நீதான் என தெரிந்து கொண்டுதான் மறைந்து விட்டாயோ!
சரியென ஏற்றுக் கொண்டேன் விதிப்பயனை இன்று மதி வசத்தால் அமைதி கொள்ள
விழைகின்றேன் விடை தேடுகின்றேன்..
ஆன்மீகம் எனும் அமுதூறும் கடலில்தனிலே... ஆழ்ந்துறங்கும் மனதினையே ஆட்கொண்ட
பெருமானே! அடுத்த பிறவிதனை அடியேன் வாழ் முழுதும் நின் முகம் தவிர மறுமுகம்
வேண்டேன்.. எனும் நீங்காவரம் கொடுப்பாயே.
வாழ்ந்து முடித்த ஒவ்வொரு பெற்றோரின் உள்ளோட்டமான உணர்வுகள் இதுதான்.
இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்ற அவர்களுடைய அனுபவம் இனிது பல
இருக்கலாம் .
நம்முடைய வாழ்க்கையின் பயணத்தில் அவர்களுடைய முன்னேற்றஅனுபவத்தின் சிறப்பு தனை
உள்வாங்குங்கள்- நம் வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு அவர்களுடைய அனுபவம்
ஊன்றுகோலாக திகழும்.
பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் .பெரியவர்களை அலட்சியப்படுத்தாதீர்.
அவர்களுடைய அனுபவங்களை கேளுங்கள். நம்முடைய வயதும் நிரந்தரம் இல்லை என்பதை
உணருங்கள்.
வாழையடி வாழையாக நம் குடும்பம் பெரியவர்களுக்கு வணங்கும் பண்பான தலைமுறை என
வித்திடுங்கள்.
அதுவே தழைத்து பெரிய ஆலமரம் ஆகி அனைவருக்கும் வழிகாட்டும் நிழலாக
அமையட்டும்.
பெற்ற தாய் தந்தையரை போற்றுபவர் எவனோ -அவனே வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானத்தை
அடைகின்றான் என்பதை மனதில் நினைவு கொள்ளுங்கள்.
போனது போகட்டும்.. இனிமேல் நடக்கும் நிலை மாறட்டும் ..பெற்றவர்களை அரவணைத்து கடமை
தவறாது வாழ்க்கையில் அமைதி கண்டு வாழ்ந்த பயனை அடையுங்கள்.
நாம் வாழ்வோம் .நம் பண்பாடுகளை மலர வைப்போம் .வாழ்வினில் வளம் காண்போம். வாழ்ந்த
பயனை நிறைவு செய்வோம்.
பொதுநலம் புண்ணியத்திற்கு அடித்தளம்..
ஸ்ரீராமானுஜர்
தள்ளாடும் வயதிலும் தானே முன்னின்று கைங்கரியம் பெருமானுக்கு செய்வேன்- என அடம்பிடித்து ஆத்மார்த்தமாய் சேய்து மோட்சம் பெற வேண்டிய ராமானுஜரை..
கண்டு மகிழ்ந்த எம்பெருமான் வேங்கடவன்' அனைவருக்கும் சொல்லி விட்டால் உமக்கு பயன்படாது இம்மந்திரம் - ஆதலால் நீர் மட்டும் இம்மந்திரம் உச்சரித்து- மோட்சத்தில் எம்மோடு வந்து சேர்க்கவே' என காதில் ஓதிட..
'தமக்கு மோட்சம் கிடைக்காவிட்டாலும் மக்களுக்கு இம்மந்திரம் சேர்தலில் நான் அடைந்த மகிழ்ச்சி ஒன்றே போதும்.. மக்களுடைய நலமே யாம் பெற்ற மோட்சம் 'என்றுரைத்த ராமானுஜரோ ..
'யாம் பெற்ற இன்பம் தனை இவ்வையகமே பெருக' என மகிழ்ச்சி மேதிடவே -மேனி எல்லாம் புலகாங்கிதம் கொண்டு .. தள்ளாடி தள்ளாடி சென்று கோபுர உச்சியிலே இரு கைகளாலும் உயர்த்தி மக்களை அழைத்து ..
'அனைவரும் புண்ணியம் பெருகவே மந்திரத்தை கேட்டு மோட்சம் பெருகவே' என சொல்லி 'ஓம் நமோ நாராயணாய நமஹ -ஓம் நமோ வேங்கடேசாய நம' எனும் நாமம் தனை உலகுக்கு அளித்த பெருமான் ராமானுஜர்..
உள்ளம் போல் அனைவரும் பெற்று விட்டால் இந்த பூமி தனில் நோய் தொற்று எனும் தொற்று தான் நம்மை அண்டிடுமோ. மறைந்திருக்கும் தொற்று தான் நெருங்கிடுமோ இச்சூழ்நிலைதான் வந்திருக்குமோ எனும் சந்தேகம் எழுகின்றது .
இனிவரும் நாட்கள் நம் மனதை விரிவுபடுத்தி சிந்தையை தெளிவுபடுத்தி பொது நலத்திற்கு வித்திட்ட வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்த பயனை அடைவோம்.
ஒரு நிமிடம் உள்ளுணர்க..
தன்னலம் இன்றி வாழ்வது என்பது கடினமே.. நம் வீடு-நம் குழந்தை- நம் சொந்தங்கள் எனும் பாச பிணைப்பில் சிக்குண்டோம் .. இருந்தாலும் சில மனித நேயம் நம்மில் நமககுள் நம் உணர்வுகள் நம் உயிருக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் நோய்த் தொற்றால் சொந்த பந்தங்களை நெருங்கக்கூட அச்சுண்ட இந்த சூழலில்..
மக்களுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் -மருத்துவமனைகள் காவல் துறைகள்- அனைவரையும் நினைத்து பார்க்கையில்
கையெடுத்து வணங்கக்கூடிய புனிதம் பெற்றவர்கள் . மலை போன்று உயர்ந்து நிற்பவர்கள். பல கோடிப் புண்ணியம் பெற்றவர்கள். பிள்ளைகள் மனம் உவக்க பெற்றவர்கள் . சிந்தை முழுதும் நிறைவு பெற்றவர்கள்.
தன்னலமின்றி பொதுநலம் கொண்ட அவர்களை நாம் அடிக்கடி நினைத்து பார்த்துநெகிழ்ந்து -அவர்களுக்காக ஒரு நிமிடம் தெய்வத்திடம் நலமாக இருக்க வேண்டி வேண்டிக்கொண்டு பெருமிதம் கொண்டு வாழ்தலில் புனிதம் கொள்வோம்.
Copy rights at balakshitha
.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக