குபேர எந்திர கோலம் படத்தில் இருப்பதைப் போல கட்டம் குங்குமத்தால் வரைந்து- ஸ்ரீ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி பச்சரிசி மாவால் எண்கள் எழுதி எண்களுக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து- உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்து- இந்த பூஜையை வழிபட வேண்டும் .
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி
ஓம் தீப லட்சுமியை போற்றி
ஓம் திருமகளே போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் கிருக லட்சுமியே போற்றி
ஓம் நாராயணி லட்சுமியே போற்றி
ஓம் நாயகி லக்ஷ்மியே போற்றி
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி என சொல்லியவாறு உதிரிபூக்களால் -குபேர எந்திரத்தின் மேலே அர்ச்சனை மலர்களை தூவி வீட்டில் செல்வ கடாட்சம் பெருக வேண்டும் -என்று மனதார வேண்டி பூஜை செய்வது மிக மிக சிறந்தது.
குபேரனை வேண்டி தீபாரதனை காட்டி பூஜையை சிறப்பாக முடித்தபின் அடுத்த நாள் குபேர எந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாக வைத்து விட்டு ஈரத்துணி கொண்டு எந்திரம் வரையப்பட்ட பலகையை நன்றாக துடைத்துவிட்டு அந்த நாணயங்களை சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போடுவது சிறப்பு.
Voice note
குபேர வழிபாட்டின் போது பூஜையில் வைக்கப்படும் நவதானியங்கள்..
1- நெல் அல்லது அரிசி
2 -துவரை
3--உளுந்து
4 -பச்சைப் பயறு
5 - மொச்சை
6 - கோதுமை
7 - கொண்டைக்கடலை
8- எள்
9 - கொள்ளு
Voice note
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக