முருகனின் திருக்கல்யாணம்
ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்து மறுதினம் முருகப்பெருமானுக்கு திருமணம் .
இந்திரன் பெற்ற அமுதவல்லியை இனிதே திருமணம் செய்த நாள் இன்று
தெய்வானை எனும் சிறப்புப் மங்கையை கைப்பிடித்த நாள் இன்று
வள்ளியின் மணாளனாய் காட்சிதந்து மங்கள சுபநாள் இன்று
மேளதாள இசையிலே மனம் மயங்க வைத்த நாள் இன்று
கந்தனின் திருப்புகழ் பாடி மகிழ்கின்ற நாள் இன்று
இந்த நாளிலே திருமணம் எனும் பந்தத்தில் இனிதாக வாழ்வதற்கான வாழ்க்கையின் சிறப்பான ஐந்து பக்கங்களை பார்ப்போமே ..
சிறப்பு - 1 கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் மனதாலும் உடலாலும் சேர்கின்ற இறைவன் கொடுத்த திருமணம் எனும் பந்தத்திலே -இடைவிடாது கைபிடித்து முதுமை வரை இன்பமொடு வழிநடத்தும் வாழ்க்கை வாழ்வது என்பது பேரின்பமே.
சிறப்பு -2 கணவனின் மனது இனிக்க மனைவியும் -மனைவியின் முகம் மலர கணவனும் இருவரின் மனது இனிக்க மழலையோடு வழிநடத்தும் செயலில் வாழ்கின்ற வாழ்க்கை என்றும் பேரின்பமே .
சிறப்பு - 3 இன்பமும்-துன்பமும் ஒருசேர அனுபவித்து ஆழ்கடலில் முத்தெடுத்து -எப்பிறவி எடுத்தாலும்
நீ என்னுள் உன்னுள் நானே கலந்திட்ட தம்பதியரை இனிதே வழிநடத்தி வாழ்கின்ற வாழ்க்கை தனில் என்றென்றும் எப்போதும் பேரின்பமே .
சிறப்பு - 4 ஊரு கண்ணு உலக கண்ணு உன் மீது பட்டதென்ன-உமையவள் கைபிடித்து காலமெல்லாம் களிப்புடனே பிள்ளைகள்- வாழ்கின்ற வாழ்வுதனை கண்டு உருகும் நிலை கண்ட பெற்றோர் உற்றோர் வாழ்த்திடவே வாழ்கின்ற வாழ்க்கைதனில் என்றென்றும் எப்பொழுதும் பேரின்பமே .
சிறப்பு -5 வயதுமுதிர்ச்சியிலே - திருமண கோலத்திலே -மலர் மாலைகள் சூழ்ந்திருக்க-நாணமோ மேலோங்க பெற்ற பிள்ளைகள் -பேரன் பேத்திகளுக்கு ஆசிகூறி வாழ்த்துகின்ற மகிழ்ச்சிதனில் இயற்கையும் வியந்து போற்றிடவே வாழ்கின்ற வாழ்வுதனில் என்றென்றும் பேரின்பமே
என்றும்இனிக்க இது போல் வாழ்க்கை அமைந்திடவே -இனிதாய் சிறப்புற வாழ்ந்திடவே -தெய்வ அருள் என்றும் நிறைந்திடவே திருமண பந்தம் அமைந்து வாழ்ந்த பயனை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக