மாணவ செல்வங்கள் படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக மனம் தளர்ந்து போவதை பார்க்கின்றோம். இந்த பதிவை பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் மனம் தெளிவு பெறும்.
என்பது என்னுடைய கனவு -ஒன்று பலவாகி பல நூறாகி நூறு பல மடங்காகி கேட்கும் குழந்தைகள் தெளிவு பெற்றால் அந்த ஆனந்தத்தில் அனைவருக்கும் பங்குண்டு. * ஷேர் பண்ணுங்க
என் பிஞ்சு உள்ளங்களே..
நான் நன்றாக முயற்சி
செய்து படித்தோமே !
மதிப்பெண்ணில் எங்கே தவறு விட்டோம் !என அதையே
நினைத்து வருந்துவதில்
பயனேதும் இல்லையன்றோ!
பெற்றோர் வருத்தத்தில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அந்த நிமிடமே மறந்து -நம்மை
புரிந்து கொள்வதில்
பெற்றோர்களின் அன்புக்கு
ஈடு இணையேது ! என
அறிந்து அடுத்து நடப்பதை நாம் சிந்திக்க ஆரம்பிப்போமா..
என் பிஞ்சு உள்ளங்களே*
தோல்வியை கண்டு
துவண்டு விழுவது தமிழ் குலத்தில் பிறந்த நம்முடைய பண்பாடு என நினைத்து விட்டீரோ!
மனதில் உறுதி வேண்டும் *
வாக்கினிலே இனிமை வேண்டும்*
என பாரதி கண்ட கனவை
ஏற்க- தயங்கி விட்டீரோ!
ஜான்சிராணி வழிவந்த
குலம் நாம் என மறந்துவிட்டீரோ!உங்களுக்காக நாங்கள் இருக்க
கவலை படலாமோ !
கல்வி என்பது அறிவுத்திறன் வளர்வதற்கேயன்றி நம்மை அழிப்பதற்காக அல்ல - என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி
என்பது வாழ்க்கை ஆகாது
என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
அதிக மதிப்பெண் பெற
வேண்டும் என
என் அன்பு குழந்தைகள்
எதிர்பார்ப்பது தவறு கிடையாது .
அந்த எதிர்பார்ப்பில்
வெற்றி- தோல்வி உண்டு
என்பதையும் கொஞ்சம்
ஏற்றுக் கொள்ளுங்கள் .
எதிர்பார்ப்புகள்
இளமைக்கு சொந்தம்
இளமையில் எதிர்பார்ப்பு இல்லையெனில்
வெற்றி -உழைப்பு எனும்
வார்த்தை ஏது ?முயன்று
பாருங்கள் ..முடிவு
இறைவனிடம்* .கவலை
நமக்கு எதற்கு ?வெற்றி
வந்தால் இனிது .தோல்வி
என்பது தோல்வியல்ல ..
வெற்றிக்கு முதல் படியே*
வாழ்வதற்கு பல வழிகள்
வையகத்தில் உள்ளதன்றோ!
மாணவ செல்வங்களே..
இனியாவது,
சிந்திப்பீர் -செயல்படுவீர் உலகம் நம்வசம்* வானத்தையே வில்லாக வளைப்பதற்கு
தயங்காதீர்*
"இவ்வுலகம் இனியது *
வான் இனிது*
காற்று இனிது *
மழை இனிது *
மனிதர்கள் மிகவும்
இனிமையானவர்கள் *
அதைவிட
உயிர்- இனிது* இனிது *
என்று பாரதியார் மிக
அழகாக பாடுகின்றார்.
அப்படிப்பட்ட உயிரின் அற்புதத்தை புரிந்து கொண்டு சமுதாயத்தில் நல்ல குடிமகனாக, எதிர்காலத்தில் உலகமே போற்றக்கூடிய நற்பண்புகள் நிறைந்த புகழ் பெற்ற மனிதனாக ,வாழ்ந்து பெருமை சேர்ப்பது உங்கள் கடமையன்றோ!
எண்ணிய முடிதல்
வேண்டும்* நல்லவே
எண்ணல் வேண்டும்*
திண்ணிய நெஞ்சம்
வேண்டும்* தெளிந்த
நல்லறிவு வேண்டும்*
பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக