வெள்ளி, 20 ஜூலை, 2018

# என் பிஞ்சு உள்ளங்களே..


மாணவ செல்வங்கள் படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக மனம்   தளர்ந்து போவதை  பார்க்கின்றோம். இந்த பதிவை  பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் மனம் தெளிவு பெறும்.

 என்பது என்னுடைய கனவு -ஒன்று பலவாகி பல நூறாகி  நூறு பல மடங்காகி கேட்கும் குழந்தைகள் தெளிவு பெற்றால் அந்த ஆனந்தத்தில் அனைவருக்கும் பங்குண்டு. * ஷேர் பண்ணுங்க

 

என் பிஞ்சு உள்ளங்களே..
நான் நன்றாக முயற்சி 
செய்து படித்தோமே !
மதிப்பெண்ணில் எங்கே தவறு விட்டோம் !என அதையே 
நினைத்து வருந்துவதில்
பயனேதும் இல்லையன்றோ!
 பெற்றோர் வருத்தத்தில் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அந்த நிமிடமே மறந்து -நம்மை 
புரிந்து கொள்வதில் 
பெற்றோர்களின் அன்புக்கு 
ஈடு இணையேது ! என 
அறிந்து அடுத்து நடப்பதை நாம் சிந்திக்க ஆரம்பிப்போமா..

என் பிஞ்சு உள்ளங்களே*

  தோல்வியை கண்டு 
துவண்டு விழுவது தமிழ் குலத்தில் பிறந்த நம்முடைய பண்பாடு என நினைத்து விட்டீரோ! 

மனதில் உறுதி வேண்டும் *
வாக்கினிலே இனிமை வேண்டும்* 
என பாரதி கண்ட கனவை 
ஏற்க- தயங்கி விட்டீரோ! 
ஜான்சிராணி வழிவந்த 
குலம் நாம் என மறந்துவிட்டீரோ!உங்களுக்காக நாங்கள் இருக்க 
கவலை படலாமோ !
கல்வி என்பது அறிவுத்திறன் வளர்வதற்கேயன்றி  நம்மை அழிப்பதற்காக அல்ல - என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி 

என்பது வாழ்க்கை ஆகாது 
என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
அதிக மதிப்பெண் பெற 
வேண்டும் என  
 என் அன்பு குழந்தைகள் 
எதிர்பார்ப்பது தவறு கிடையாது .
அந்த எதிர்பார்ப்பில் 
வெற்றி- தோல்வி உண்டு 
என்பதையும்  கொஞ்சம் 
ஏற்றுக் கொள்ளுங்கள் .

எதிர்பார்ப்புகள் 
இளமைக்கு  சொந்தம் 
இளமையில் எதிர்பார்ப்பு இல்லையெனில் 
வெற்றி -உழைப்பு எனும் 
வார்த்தை ஏது ?முயன்று 
பாருங்கள் ..முடிவு 
இறைவனிடம்* .கவலை 
நமக்கு எதற்கு ?வெற்றி 
வந்தால் இனிது .தோல்வி 
என்பது தோல்வியல்ல .. 
வெற்றிக்கு முதல் படியே* 
வாழ்வதற்கு பல வழிகள் 
வையகத்தில் உள்ளதன்றோ!

 மாணவ செல்வங்களே..
 இனியாவது,  
சிந்திப்பீர் -செயல்படுவீர் உலகம்   நம்வசம்* வானத்தையே வில்லாக வளைப்பதற்கு
 தயங்காதீர்*

"இவ்வுலகம்  இனியது *
வான் இனிது*
 காற்று  இனிது *
மழை இனிது *
மனிதர்கள் மிகவும்
இனிமையானவர்கள் *
அதைவிட
 உயிர்- இனிது* இனிது *
என்று பாரதியார் மிக 
அழகாக பாடுகின்றார். 

அப்படிப்பட்ட உயிரின் அற்புதத்தை புரிந்து கொண்டு  சமுதாயத்தில் நல்ல குடிமகனாக, எதிர்காலத்தில் உலகமே போற்றக்கூடிய நற்பண்புகள் நிறைந்த புகழ் பெற்ற மனிதனாக ,வாழ்ந்து பெருமை  சேர்ப்பது  உங்கள்  கடமையன்றோ!

 எண்ணிய முடிதல் 
வேண்டும்* நல்லவே 
எண்ணல் வேண்டும்*
 திண்ணிய நெஞ்சம் 
வேண்டும்* தெளிந்த 
நல்லறிவு வேண்டும்*

பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம்.

 Copy rights at  Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக