புதன், 31 அக்டோபர், 2018

கந்தர் சஷ்டி விரதம்

 


கந்தன்உண்டு- கவலை -இல்லை குகனுண்டு குறையில்லை 
வேல் உண்டு  வினையில்லை மயிலுண்டு  பயம்-இல்லை 


முருகன் என்றால்  அழகு 
அழகு  என்றால் முருகன்

வைகாசி மாதத்திலே
 விசாக நட்சத்திரத்திலே முருகப்பெருமான்
 அவதரிக்கின்றார்..
   
ஒவ்வொரு தெய்வங்களும்
   அந்த தெய்வம் பிறந்ததற்கான 
அவதாரம் எடுத்ததற்கான
ஒருதெய்வ வரலாறு உண்டு .


அதுபோலவே முருகப்பெருமான்
பிறந்ததற்கும் ஒரு தெய்வ வரலாறு
உண்டு..
   

சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களை 
 மிகவும் கொடுமைப்படுத்தி
 வந்தான்..

அவனை அழிப்பதற்காக சிவபெருமான்  தம்முடையசக்தியெலாம்  ஒன்று திரட்டி
நெற்றிக்கண் மூலமாகஒரு குமரனை 
 உருவாக்குகின்றார்..


அந்த குமரனே 
ஆறு குழந்தைகளாக -மாறி
 கார்த்திகை பெண்களிடம்
 அழகாக வளர்கின்றான் 

தாமரை பூவிலே*  பூத்த 
தங்க முகம்* கொண்டவனாக 
பால் மனமும் -பூ மணமும்
 மாறாது - மணம் கொண்டவனாக 
வெள்ளி ரதம் போன்ற பிள்ளை மனம் 
கொண்டவனாக வளர்கின்றான்..

சக்தியின் அருளால் ஆறு உருவமும் 
ஓர் உருவமாக மாற-அழகு முகம்
 கொண்ட கந்தவேலன்* ஆக காட்சி
 தருகின்றான்.

சரவணனாக* சண்முகனாக*திருமுருகனாக*
 சுப்ரமணியனாக*ஆறுமுகனாக*
 கார்த்திகேயனாக *
காட்சியளித்த குமர குருபரன்
கந்தவேலனாக காட்சி தருகிறார்.

உரிய வயதில்  வேலாயுதத்தோடு சூரபத்மனை அழிப்பதற்காக புறப்படுகின்றார்*

ஐப்பசி மாதத்தில் அமாவாசை அடுத்த
 பிரதமை தொடங்கி ஆறு தினங்களும்
 சூரனுடன் போர்  புரிகின்றார்.. 

அவ்வாறு போர் புரியும் அந்த தினங்களே சூரசம்ஹாரம்
 என்று நாம் கொண்டாடுகின்றோம்.

 இந்த ஆறு தினங்களும் கந்தனை நினைத்து விரதமிருந்து 6வது நாள் அனுஷ்டிக்கப்படும் 
 தினம்தான் கந்த சஷ்டியாகும்* 

சங்கரன் பிள்ளைசட்டியிலே மாவறுத்தார்* எனும்  புரிதலை
 அறிந்து கொண்டால்
 புண்ணியம் கிட்டிடுமே..

 சங்கரன்பிள்ளை -சிவனின் மகனன்றோமுருகபெருமான்*
சட்டியிலே -சஷ்டி திதியிலே
 மாவறுத்தார்-

மாமரமாக நின்ற சூரனை 
 சூரசம்ஹாரம் புரிந்தார்.

நம் மனதில் இருக்கும்
 ஆணவம் எனும்
 மாயையை விலக்கி
முருகப்பெருமான்
இன்முகத்தோடு  நம்மை ஆட்கொள்கின்ற தினமே
 கந்தசஷ்டி சூரசம்ஹாரம்*

 நம்முடைய அகங்காரம்
 ஆணவம் அனைத்தையும்
 அழித்து   ஆறு தினங்களும் 
உபவாசம் இருந்து "முருகா * நின் 
புகழ்மாலைகளை 
பாராயணம் செய்தும்
 புராணங்களை கேட்டும்
  விரதம் இருந்து
அனுஷ்டித்த
 எம்முடைய  துன்பங்கள் 
அனைத்தும் நீக்கி
அருள்கூர்ந்து
ஆனந்தம்  அளித்து
காப்பாயே*

முருகா  நின் திருவடி
 சரணம் சரணம் சரணம் என 
நின் பாதம் சரணடைந்தேன் 

ஓம் சரவணபவ*


Copy rights at Balakshitha

5 கருத்துகள்: