ஒரு தாயின் வரவேற்பு *
எதிரியின் வசம் -மீண்டு
வந்து விட்டான் என் மகன் *
வீர மகனே -நீ அல்லவோ தமிழ்மகன் *பலகோடி நெஞ்சங்களில் -நிறைந்து
விட்டாய் அபிநந்தா !
பிறந்த பயனை இன்று அடைந்துவிட்டாய் அபிநந்தா*
வந்தே மாதரம் *
மந்திரம் என்றும்
நெஞ்சிலே சுமந்து
இந்திய மண்ணின்
மைந்தனாக பிறந்து 'பாரதம் ' காக்க உயிரையும் கொடுப்பேன் -என உரைத்த என் மகன் விதியையும் வென்று வந்து விட்டான் இன்று..
வீரத்திலே சிங்கமாய் *
விவேகத்தில் ஞானியாய் கடமையிலே கண்ணாய்*
காலத்தை வென்றவனாய்* தேசத்தின் திருமகனாய் புகழ் பெற்ற என் மகன் வந்துவிட்டான் இன்று.. தாய்மனம் கலங்கையிலே அதை மறைத்து
உன் மனைவி முகம் வாடாது -தன் மகனை அரவணைத்து "அப்பாவின் வீரத்தை அறிவாயோ -என் மகனே !
அவர் போல்நீயும் அன்றோ
தேசத்தின் திருமகனே*
என நிருபிப்பாய் நாளை"
என கூறி புன்னகை
உதிர்த்தாளே
அவளல்லவா
தமிழ் மகள்*
எமன் கூட
உன் நிழலை
நெருங்கிட
தயங்கையிலே
60 மணி நேரம்
உமை காணாது
உணவின்றி உறக்கமின்றி
உலகமே உனக்காக தவித்த நிலைகண்டு பெற்ற மனம் நிறைந்ததய்யா
புவியெலாம் உன் புகழ்
என்றும் காலமெல்லாம் பேசுமய்யா..
எதிரி வசம் நின்றும்
கூட புன்முறுவல்
பூத்த வீர திருமகனே *
இந்திய தமிழ்மகனே*
வாழ்க வாழ்க
பல்லாண்டு பல நூறு
ஆண்டு குடும்பத்தோடு வாழியவே *
என மனமெல்லாம்
மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகின்றேன்*
Copyrighs at Balakshitha
Inspiring and proud poem to salute Sir abhibandhan. Great Balakshitha mam!
பதிலளிநீக்கு