திங்கள், 24 பிப்ரவரி, 2020

மாசி மகம் வரலாற்று சிறப்பு

மாசி மகம் என்று அழைக்கப்படும் தீர்த்தவாரி திருவிழா



மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகம் ஆள்வார்கள் என்பது பழமொழி .இந்த மாசி மாதத்தில் மகத்தன்று
தீர்த்தவாரிக்கு சென்று  ..

அனைத்து தெய்வங்களை ஒருசேர தரிசித்தால்- வாழ்க்கையில் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்பது திண்ணம்.

'இப்பூவுலகை உண்டு உமிழ்ந்த பவளத்தான், தேவா்களுக்கும் அசுரா்களுக்கும் பாற்கடலில் இருந்து தோன்றிய அமுதத்தைப் பகிா்ந்தளித்த சீராளன், .

அடியவா்களின் உள்ளத்தில் முளைத்தெழுந்த தீங்கரும்பு, யானையின் தந்தத்தை ஒடித்து மருதமரத்தைச் சாய்த்த பொன் குன்று மழைமேகம் போன்ற நிறத்தான், துன்பம் களைகின்ற கற்பகம்'


திருமங்கை ஆழ்வார்


திருமங்கை ஆழ்வார் பெருமாளை புகழ்ந்து பாடிய ஸ்தலமாக 
திருக்கடல் மல்லை போற்றப்படுகிறது.  மாமல்லபுரத்தில் அருளும் அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஸ்தலத்தில் நடந்த அற்புத வரலாறே மாசி மக தீர்த்தவாரி திருவிழாவாக இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

அந்த தெய்வீக வரலாறு நாம் கேட்டு, அதில் பக்தி அரும்பாகி ஆழ்மனம் உருகி மலராகி அம்மலர்தனை பெருமாளுக்கு சாற்றி , அவன் பாதம் தன்னிரு கைகளினால் பற்றி, கண்களிலே நீர் வழிந்தோடி உருகும் உள்ளம்தனை அனைவரும் பெறுக. ஐயனின் அருள் பெற்று ஆனந்தம் கொள்க.

வாருங்கள் வரலாற்றினை காண்போம்..

மாதவன் மார்பிலே மலர்ந்தவளாய் காட்சி தரும் அன்னையவள் மகாலக்ஷ்மி‌ வீற்றிருக்கும் அழகுமலர்...

செல்வச்செழிப்பை வாரி வழங்கக்கூடிய செம்மலர்..

பூலோகத்தில் இனிதே வாழ்ந்திட வரம் தரும் விருட்சக மலர்.

வெள்ளிதோறும் தெய்வ சன்னதியில் அர்ச்சனைக்கு கொடுத்தால்
அனைத்து காரியங்களும் ஜெயமாகும் அமுதமலர்..

கணபதியாகிய யானை கஜேந்திரன் உயிரை காப்பாற்றிய தங்க மலர் ..

என்ற புகழை எல்லாம் பெற்ற தாமரை மலர்தனை பள்ளிகொண்ட பெருமாளின் பாதத்திலே வைப்பதற்கு புண்டரீக மகரிஷி ஆவல் கொள்கின்றார் .

பாற்கடலில் பள்ளி கொண்ட எம் பெருமான் பாதத்தை பற்ற வேண்டுமெனில் ஆன்மீகம் இடம் பெறும் கடலை கடக்க வேண்டும் எவ்வாறு கடப்பது! யோசித்த மகரிஷி ஆன்மீகத்தில் மூழ்கி கடல் நீரை வாரி இறைத்து பாற்கடலை அடைவதற்கு முயற்சி செய்கிறார்.

ஆனால் பெருமாள் விடுவாரா! சோதனை தொடர்கிறது.

சூரக் காற்றிலே துவண்டு சாயும் கொடிதனை விடாது இறுகப்பற்றி வெற்றி காணும் வேரினை போல்.. சோதனை சூழ்ந்தினும் தளராது பாற்கடலை அடைவதற்கு முழு முயற்சியோடு மகரிஷி கடல் நீரை வாரி இறைத்திடும் அற்புத காட்சியை காண்கின்றார் வெங்கட பெருமான்.

அச்சமயம் மகரிஷிக்கு உதவி செய்ய தள்ளாடி வருகின்றார் ஒரு முதியவர். தன்னலம் பாராது, உதவி செய்ய வந்த முதியவருக்கு 'உணவு கொடுத்தால் கோடி புண்ணியம் தமை வந்து சேரட்டும்' என அறிந்த மகரிஷி அவசரமாய் அம் முதியவரின் பசி தீர்க்க ...
உணவு வாங்க சென்று பின் வந்து பார்த்தவரோ புல்லரித்துப் போனார் அக்கணமே! காரணம் அறிந்தால் அனைவரும் புல்லரித்து போவோம் இக்கணமே!

பக்தியில் மெய்யுறுகி பக்தரின் குறைதீர்க்க களைப்போடு பசித்த முகத்தோடு வந்தவர் வேறு யாரும் அல்ல!

பேராமுதனவன், கோபியரின் மன்னனவன், மங்கல இசைக்கு நாதனவன், ஆழ்ந்து நினைத்தால் ஆனந்தமாய் காட்சி தந்து, இன் முகத்தவனாய் அருள் புரியும் நாராயண பெருமாளே மகரிஷிக்கு முன் காட்சி தந்தார் முதியவர் கோலத்திலே..

முதியவராய் வந்தவர் அருட்கடலான பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் என அறிந்த புண்டரீக மகரிஷி மெய் சிலிர்த்து, கண்களில் கண்ணீர் பெருக... ஓடி சென்று பெருமாளின் பாதத்தை பற்றி தாம் கொய்த தாமரை மலர்தனை ஆதவன் காலடியில் வைத்து , நிறைந்த மனம் பெற்று பூர்வ ஜென்ம பயனை அடைகின்றார்.

அந்த சிறப்பான தினம் தான் மாசி மகம் என்று அழைக்கப்படும் தீர்த்தவாரி திருவிழா.

மாசி மாதத்தில் வரக்கூடிய இந்த திருவிழாவில் அத்தனை தெய்வங்களும் ஒரு சேர சங்கமித்து காட்சி தரும் அற்புத தரிசனத்தை கண்டு .. புண்டரீகமகரிஷி ஒரு தாமரை மலர் வைத்து பெருமாளின் அருள்தனை பூரணமாக பெற்றது போல்... நாமும் நம் பிறவிப் பயன் தீர தெய்வதரிசனம் கண்டு , நம் கையில் கிடைத்த மலர்தனை தெய்வத்திற்கு சாற்றி ஆனந்தம் கொண்டால்…

இனிதான வாழ்வினை அவன் கொடுப்பான். அவ்வாழ்வினை நாம் பெற்று நல்வழிப் பாதையில் நடந்து சென்று பிறந்த பயனின் வாழ்வினை நிறைவு செய்தால் வாழ்க்கை என்றும் இனிதன்றோ!

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇


Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக