அன்பு எனும் அகம் கொண்டு
பொறுமை எனும் குணம் கொண்டு
துணிவு எனும் துணைகொண்டு சோதனை வந்தாலும் எதிர் கொண்டு
லட்சிய பாதையில் நடந்து சென்று வாழ்க்கையில் சிறப்புற -வாழ்வதற்கு நமக்கு சொந்தமாய் ஒரு வீடு அமைய வேண்டும்.
அதற்கான ஒரு அருமையான வழிபாடு குலதெய்வத்திறன் காலடியில் வைத்து எடுக்கும் செங்கல் வழிபாடு.
நம்முடைய வீடு கட்டும் பணிக்கு பிரதானமாக அமைவது செங்கல்
சக்தி வாய்ந்த அந்த செங்கல்லை கொண்டு தெய்வத்திற்கு வழிபடும் முறை..
அமாவாசை மறுநாள் பிரதமைக்கு அடுத்து - திரிதியை அன்று..
1அல்லது 3 புதிய செங்கல் வாங்கி -
வீட்டின் அருகே உள்ள காளி கோவிலுக்கு செல்லவும் . செங்கல் மஞ்சளை நிறைவாக பூசி குங்குமம் வைத்து..
வீடுகட்டும் யோகத்தை கொடுப்பவள் சக்தி நிறைந்தவள் காளியம்மன் அவள் பாதத்திலே அந்த செங்கலை வைத்து தருமாறு ..அய்யருக்கு தட்சணை கொடுத்து..
அர்ச்சனை செய்து 'தான் ஒரு சொந்தமாக மனை வாங்கி -வீடு கட்ட வேண்டும்' என மனதார வேண்டி கொள்ளவும் .
அல்லது- நம்முடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தின்
பாதத்தில் வைத்து வீட்டினிலே கொண்டுவந்து விளக்கேற்ற ..
வீடுகட்டும் யோகம் பரிபூரணமாக நிறைவேறும்.
அம்மன் பாதத்தில் இருந்து பெறப்பட்ட செங்கல்லை -வீட்டில் துளசி செடி இருந்தால் அதன் அருகே தென்மேற்கு வடகிழக்கு பகுதியில் வைத்து -அதன் பக்கத்தில் மஞ்சள் குங்குமம் வைத்த அந்த செங்கலை வைத்து இரண்டு அகல் தீபம் ஏற்றி தொடர்ந்து 48 நாள் வழிபட வீடு கட்டும் யோகம் விரைவில் நிறைவேறும் .
துளசி செடி இல்லாதவர்கள் தன்னுடைய பூஜை அறையில் மஞ்சள் குங்குமம் வைத்த செங்கல்லை - துளசி வைத்து இரண்டு அகல் தீபம் ஏற்றி அதே 48 நாட்கள் வழிபடலாம்.
இதனால் பூமிகாரகன் செவ்வாயின் ஆதிக்கம் வலுப்பெற்று உடனே நம்முடைய மனதிற்கு இனிதான காரியம் விரைவில் நிறைவேறும்.
சொந்தமாக மனை அமைந்து வீடு கட்டும் போது நாம் படைத்த அந்த செங்கல்லை முதல் கல்லாக வீட்டில் வைப்பது சிறப்பு.
நம் வாழ்விலே சிந்தை தெளிந்து சீர்பெற்று வாழ்ந்து - சொந்தமாக வீடு அமைந்து சிறப்பு பெற்று வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவோம்.
Copy rights at balakshitha
பொறுமை எனும் குணம் கொண்டு
துணிவு எனும் துணைகொண்டு சோதனை வந்தாலும் எதிர் கொண்டு
லட்சிய பாதையில் நடந்து சென்று வாழ்க்கையில் சிறப்புற -வாழ்வதற்கு நமக்கு சொந்தமாய் ஒரு வீடு அமைய வேண்டும்.
அதற்கான ஒரு அருமையான வழிபாடு குலதெய்வத்திறன் காலடியில் வைத்து எடுக்கும் செங்கல் வழிபாடு.
நம்முடைய வீடு கட்டும் பணிக்கு பிரதானமாக அமைவது செங்கல்
சக்தி வாய்ந்த அந்த செங்கல்லை கொண்டு தெய்வத்திற்கு வழிபடும் முறை..
அமாவாசை மறுநாள் பிரதமைக்கு அடுத்து - திரிதியை அன்று..
1அல்லது 3 புதிய செங்கல் வாங்கி -
வீட்டின் அருகே உள்ள காளி கோவிலுக்கு செல்லவும் . செங்கல் மஞ்சளை நிறைவாக பூசி குங்குமம் வைத்து..
வீடுகட்டும் யோகத்தை கொடுப்பவள் சக்தி நிறைந்தவள் காளியம்மன் அவள் பாதத்திலே அந்த செங்கலை வைத்து தருமாறு ..அய்யருக்கு தட்சணை கொடுத்து..
அர்ச்சனை செய்து 'தான் ஒரு சொந்தமாக மனை வாங்கி -வீடு கட்ட வேண்டும்' என மனதார வேண்டி கொள்ளவும் .
அல்லது- நம்முடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தின்
பாதத்தில் வைத்து வீட்டினிலே கொண்டுவந்து விளக்கேற்ற ..
வீடுகட்டும் யோகம் பரிபூரணமாக நிறைவேறும்.
அம்மன் பாதத்தில் இருந்து பெறப்பட்ட செங்கல்லை -வீட்டில் துளசி செடி இருந்தால் அதன் அருகே தென்மேற்கு வடகிழக்கு பகுதியில் வைத்து -அதன் பக்கத்தில் மஞ்சள் குங்குமம் வைத்த அந்த செங்கலை வைத்து இரண்டு அகல் தீபம் ஏற்றி தொடர்ந்து 48 நாள் வழிபட வீடு கட்டும் யோகம் விரைவில் நிறைவேறும் .
துளசி செடி இல்லாதவர்கள் தன்னுடைய பூஜை அறையில் மஞ்சள் குங்குமம் வைத்த செங்கல்லை - துளசி வைத்து இரண்டு அகல் தீபம் ஏற்றி அதே 48 நாட்கள் வழிபடலாம்.
இதனால் பூமிகாரகன் செவ்வாயின் ஆதிக்கம் வலுப்பெற்று உடனே நம்முடைய மனதிற்கு இனிதான காரியம் விரைவில் நிறைவேறும்.
சொந்தமாக மனை அமைந்து வீடு கட்டும் போது நாம் படைத்த அந்த செங்கல்லை முதல் கல்லாக வீட்டில் வைப்பது சிறப்பு.
நம் வாழ்விலே சிந்தை தெளிந்து சீர்பெற்று வாழ்ந்து - சொந்தமாக வீடு அமைந்து சிறப்பு பெற்று வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவோம்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக