வாழ்வில் வெற்றி பெற பௌர்ணமி வழிபாடு
சித்ராபவுர்ணமி அன்று அம்மன் கோவிலுக்கு தவறாது சென்று அபிஷேக ஆராதனை முன் கண்டு பின் மதி நிறைந்த நிலவு தனை நாம் கண்டு வணங்கினால் அம்மனின் பரிபூரண அருளை நாம் பெறலாம்.
அதுமட்டுமல்லாது பிறந்த பயனை நிறைவு செய்ய இவ்வழியும் பின் செல்க..
திடீரென்று மிகவும் அமைதியான தென்றல் காற்று போல நீரோட்டம் மாறும். சில சமயம் சாதாரண புயல் காற்று போன்று அலைகள் துள்ளல் போடும்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எனும் குறிக்கோளுடன் வாழ்வதற்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் சொந்தம் உறவு சுற்றம் தெரிந்தவர் பலருக்கு வேண்டுமானாலும் இந்த சூழ்நிலை வரலாம் .
சுயநலத்தோடு இருக்காதீர்கள். நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் செயலாக்கங்கள் அனைத்தும் பொதுநலம் அமைந்ததாகவும் இருக்கட்டும்.
நல்ல வழிகாட்டியாக இருங்கள்
வரும்போது அவர்களுக்கு பக்கபலமாக அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள். அர்ஜுனனுக்கு நல்ல வழிகாட்டியாக கிருஷ்ணன் அமைந்தது போல -நீங்கள் மற்றவருக்கு நல்ல வழிகாட்டியாக அமைவதற்கு தெளிவு கொள்ளுங்கள்
திருக்குறள் திருவாசகம் ராமாயணம் மகாபாரதம் போன்ற நல்ல நூல்கள் காப்பியங்கள் காவியங்கள் ஒரு வழிகாட்டியாக அமையும்.அதுபோல நாமும் மற்றவருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.
உலக விஷயங்களை அறிந்து கொள்ள மற்றவர்களுக்கு நல்ல ஆலோசகர்களாக இருக்க -உங்கள் பார்வை சிறப்பாக ..
பல நூல்களை படியுங்கள் .பலருடைய அனுபவத்தை கேளுங்கள். உலகில் நடக்கும் நடவு களை தெரிந்துகொள்ளுங்கள்.
குட்டி போட்ட பூனை போல குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது என்பது போல இருக்காது -உங்களுள் நீங்கள் தெளிவு கொள்ளுங்கள்.
துணிவு கொள்ளுங்கள் நினைத்ததை சாதிக்க நேரம் காலம் தேவை இல்லை. தெய்வத்தை முழுமையாக நம்புங்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
உங்கள் மனதில் தெளிவாக ஒரு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த வருடம் இந்த நாளில் இந்த நேரத்தில் நம்முடைய இலட்சிய பாதையில் அடி எடுத்து வைக்கின்றோம். அடுத்த வருடம் இந்த நாளில் இதே நேரத்தில் நாம் புகழ் ஏணியின் உச்சிக்கு சென்று வெற்றிக்கொடியை நாட்டுவோம்.
நாம் இந்த மண்ணில் பிறந்தது வாழ்வதற்காக .. இந்த வாழ்க்கை நாம் வாழ்ந்த வாழ்க்கையின் புனிதத்தை உணர்வதாக இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
நம்முடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து உலகிற்கு அறிமுகமாக வேண்டும் அல்லது நம்முடைய வீட்டிற்கு ஒரு ஒளியாக திகழ வேண்டும் என்பதில் உறுதி கொள்வோம் .
எத்தனை சோதனைகள் வந்தாலும் சோர்ந்து விடாது _நிமிர்ந்து நில்லுங்கள்
நம்முடைய நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் திறமைகள் வெளிக்கொணர்ந்து நாம் செய்யப்போகும் அனைத்து செயலாக்கத்திற்கும்- சித்ரா பவுர்ணமியான இன்றைய தினம் வணங்குவது முதல் தொடக்கமாக இருக்கட்டும் .
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
10 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக