குபேரன் குபேரனாக உயர்ந்த கதை
இலங்கை என்று அழைக்கப்படும் இலங்காபுரி அழகே உருவான சோலைகள் நிரம்பிய செழிப்பான மலர் நிறைந்த அழகிய நகர் ..ஆண்ட மன்னன் குபேரன் சிறுத்த சிவந்த உருவம் கொண்டவன் .பட்டுபோன்ற மனம் படைத்தவன் .சொந்த பந்தத்தில் சிக்குண்டவன் .
அசுரகுலத்திலே பிறந்த மாற்றாந்தாயின் மகன் இராவணன்- இலங்காபுரி அழகை தானே ஆட்கொண்டு தானே மன்னனாய் ஆட்சி செய்யும் பேராசை கொண்டு குபேரர் இடம் போரிட வருகின்றான்.
தமையனுனுக்காக விட்டுக் கொடுக்கின்ற குபேரன்
தமையனிடம் போரிட விரும்பாத குபேரனன் இலங்கை நகரையே ராவணனுக்கு விட்டு கொடுக்கின்றான் .
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை -என்பதை மனம் உணர்ந்து கொண்டால்.. விதி பயன் சாதகமாகும். வினைப்பயன்கள் விலகி ஓடும் .இறையருள் நமக்கு கிட்டும்.
என்பதற்கு குபேரன் வரலாறு சான்றாகும்.
குடும்ப நேசம் என சிக்குண்டு ஆனந்தம் கொண்டவர் பலருண்டு. மனசஞ்சலம் அடைந்தவர் சிலர் உண்டு. வாழ்க்கை என்னும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் சகோதரத்துவம் ஓங்கி உயர்ந்து இருக்கும் .விட்டுக் கொடுப்பவர் 'நானா நீயா 'என போட்டி இருக்கும் .விட்டுக் கொடுப்பதில்- கொடுப்பவர் ஆனந்தம் கண்டு மகிழ்ச்சியில் உவந்து ..
பெற்றுக் கொண்டவரோ பெருமிதம் கொண்டு வாழ்வில் இதுபோன்ற சொந்தம் கிடைத்த பாக்கியம் கண்டு.. நெகிழ்ந்தவர் கூட ..
காலப் போக்கில் மாறுதல் கண்டு அதே பந்தபாசம் காணாமல் -மனம் வெறுத்து பாசத்தை உதறித் தள்ளுவது என்பதுகாலத்தின் சுழற்சியே.
அந்த நேரத்தில் விட்டுக் கொடுப்பதில் உவகை கண்டு விட்டால் உங்களுக்கு சாதகமான நேரம் விரைவில் கைகூடும். கனிந்து பழம் ஆகும். இறையருள் கிட்டும். அப்படித்தான் குபேரன் தன் தமையனுக்காக விட்டுக் கொடுக்கிறார்.
கலைநயமிக்க -பசுமை பாய் விரித்த we நிரம்பிய மலர்வனம் நிறைந்த அழகிய- இலங்காபுரியை ராவணனுக்கு விட்டுக்கொடுத்து
நாட்டினை துறந்து காட்டுக்குச் சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருக்கின்றார்.
800 ஆண்டுகள் கடுந்தவம் புரிய அந்த ஜோதியின் ஜ்வாலை கைலாயத்தை அடைய .. தாங்காது சிவபெருமான் உமையோடு காட்சி தந்து அருள் பாவிக்கின்றார் .
சிவபெருமானின் அருளால் குபேர பதவி
தேவர்களுக்கெல்லாம் அழகிய கோட்டையை உருவாக்கும் சிற்பியான விஸ்வகர்மாவிடம் -அழகிய நகரை உருவாக்கித் தருமாறு சிவன் ஆணையிட ..உருவானது அழகாபுரி.
அழகிய அரண்மனை -புகழ்பெற்ற அத்தாணி மண்டபம் -தாமரை மலர் ஏந்திய மீன் ஆசனத்திலே மனைவி சித்திர லேகையோடு அரியணையில் வீற்றிருக்கும் பாக்கியத்தை இறை அருளால் பெறுகின்றார் குபேரன்.
வடதிசைக்கு அதிபதியாகும் யோகத்தை கொடுக்கின்றான் எம்பெருமான் சிவபெருமான். உலகத்தை செல்வங்கள் முழுதும் பெற்று உயர்ந்த பதவியை அடைகின்றான் குபேரர்.
மகாலட்சுமியோ 8 சக்தியையும் நிர்வகிக்கும் பொறுப்பை குபேரனுக்கு கொடுக்கின்றாள்.. அதற்கு உதவியாக இரண்டு கணக்குபிள்ளைகளையும் நியமிக்கின்றாள். அவர்களே சங்கநிதி பதுமநிதி .
மகாலட்சுமியின் சக்திகளையும் நிர்வகிக்கும் குபேரனை வணங்குவோருக்கு அனைத்து செல்வங்களும் பெருகும் . பெருகுக சிந்தை குளிர்க .செல்வம் தழைத்து சிறப்போடு வாழ்க.
மேலும் தெரிந்து கொள்க
லக்ஷ்மி குபேர பூஜை🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_21.html
அனைத்து திருஷ்டியும் விலக கல் உப்பு பரிகாரங்கள்🙏🌹👇👇
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fd
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக