ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

பூஜை அறை சாஸ்திரங்கள் பகுதி -1

பூஜை அறை சாஸ்திரங்கள் பகுதி_ 1




பூஜைஅறை அமைக்கும் போது முக்கியமாக நாம் மனதில்  கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..

1- பூஜை அறை நம்முடைய மனதிற்குப் பிடித்தவாறு அமைய வேண்டும் .
2- தெய்வ அனுகூலம் நிறைந்திருக்க வேண்டும் .
3- நினைத்த காரியங்கள் கைகூட வேண்டும்.
4-  எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் வீட்டில் நிலவ வேண்டும்.
5-  நல்ல நிகழ்வுகள் அதாவது சுப நிகழ்ச்சிகள் எப்போதும் வீட்டில் நடைபெறவேண்டும்.

எனும் தெளிவான எண்ணத்துடன் பூஜை அறை அமைத்தல் என்பது மிகவும் சிறப்பு.

பூஜை அறை அமைக்கும் திசை


கிழக்கு முகம் மங்கலம். மங்கலமாய் காட்சி தரும் சூரிய யோகம் தரும் அருமையான திசை. பூஜை அறை ஈசானிய மூலை (வட கிழக்கு) கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்

ஈசனின் அருள் பாவிக்கும் இடம். குபேரன் செல்வங்களை அள்ளி வழங்கும் இடம். பெருமாள்  மகாலட்சுமியோடு வாசம் செய்ய கூடிய இடம் .மொத்தத்தில் தெய்வங்கள் அனைத்தும் தமக்குப் பிடித்தமான நிலையான ஒரு இடம் தேடி அமர்கின்றன.. என்றால் அதுவே ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.




அந்த இடத்தில் பூஜை அறை அமைந்தால்  தெய்வ அனுகிரகம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

' ஈசனே உன் இருப்பிடம் நான் அறிந்து உமைத்தேடி குடில் அமைத்தேன். அக்குடில்  அன்பின் சிகரமாய், ஆறுபடை வீடு போன்று அன்பு, அறம், செல்வம் ,சிறப்பு ,புகழ் ,மோட்சம் அனைத்தும் தந்து எம் குடும்பத்தை காத்து அருள் வாயே.' என வேண்டி பூஜை அறையை , கிழக்குமுகமாக பார்த்தவாறு அமைத்து வாழ்க. வாழ்வினில் வளம் பெருக .

அந்தக்கால பெரியவர்கள் எழுதிவைத்த சாஸ்திரங்கள் என்றும் பொய்யாவதில்லை.

நல்ல விஷயங்கள் நாம் தேடிச் சென்று அறிந்து ,அதன்படி வாழ்வினில் கடைப்பிடித்தால் நம்முடைய ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள்  விலகி, நம்முடைய விதிப்பயன் சற்றே மாற்றக்கூடிய தெய்வ அனுகூலம் நமக்கு கிட்டும் என்பதை உணர்ந்து
அதன்படி  பூஜை அறையை அமைத்து

அமுதூறும் வாழ்க்கை பெற்று-  அழகிய சுவாசம் பெற்று ,மனம் கனிந்த வாழ்வு பெற்று, சிந்தைக்கினிய  குளிர்ச்சி பெற்று ,வாழ்க வாழ்கவே வாழ்வினில் வளம் பெருகவே.🙏🌹

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

10 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக