26 -4- 2021சித்ரா பௌர்ணமி
சித்திரகுப்தன் வரலாறு
சிவனுக்கு உதித்தான சித்திரகலை தனில் ஆவல் கொண்டு.. எம்பெருமானால் எழுந்ததொரு அழகிய சித்திரம் தங்கப் பலகை மீதினிலே ...
பூரண மதி நிலவு வானத்திலே சித்ரா பவுர்ணமி அன்று ஜொலித்துக்கொண்டிருக்க நல்வேளையில், சிவன் படைத்த ஓவியமான, ஏடும் எழுத்தாணியும் கொண்ட மழலை சித்திரத்தை கண்ட பார்வதிதேவியோ ஆவலும் ஆர்வமும் மேலோங்க ,அம்மையின் ஆசைக்கு இணங்க..
அச்சித்திரமே உயிரோவியமாய் சித்திர குப்தனாக ( சித்திர புத்திரன்) உயிர்த்தெழ , அந்த அழகிய காட்சியை கைலாயத்தில் கண்ட அனைவரும் பரவசத்தோடு குரல் எழுப்பினர்" ஓம் சிவாய நமஹ"
அச்சமயம் இந்திரனும் இந்திராணியும் குழந்தை வரம் வேண்டி, கைலாய நாதரை நோக்கி தவமிருக்க..
காமதேனுவின் மூலமாக ஏடும் எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் -இந்த தம்பதியரிடம் இனிதே அடைந்தான்
மழலையாக.
சித்திரகுப்தன் வளர்ச்சி பருவம் முழுவதும் சிவநாமம் கூறி, சிவபுராணம் பாடி சிவனுக்காக விரதம் இருக்க..
மகிழ்ச்சி கொண்ட எம்பெருமான் சித்ரகுப்தனுக்கு கொடுத்தார் சிறப்பு பணி ஒன்று.
படைக்கும் தொழில் கொண்ட பிரம்மனுக்கும், விதி முடிந்ததும் உயிர்களை தன் வசமாக்கிக் கொள்ளும் யமதர்ம ராஜனுக்கும் இடையிலான ஒரு பாலமாக ஒரு
அரும்பெரும் பணியைப் சித்ரகுப்தனுக்கு கொடுக்கின்றார்.
பாவமும் புண்ணியமும் செய்கின்ற மானிடர்களின் கணக்கு தனை சித்திரமாய் வரையப்பட்டு (குப்தம்) ரகசியங்கள் அனைத்தும் கண்டுபிடித்து
செவ்வனே எழுதும் மாபெரும் பொறுப்பு சித்திரகுப்தன் உடையது.
அப்பணி தனை அன்று முதல் இன்று வரை திறன்பட செய்து வரும் சித்ரகுப்தனை- நாம் வணங்கினால் ஏற்படும் பலன்கள் ...
முழுநிலவை சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை வரைந்து விரதம் இருந்து சர்க்கரை பொங்கல் வைத்து படைப்போர் மோட்சத்தை அடைவார்கள் .
முழு நிலவை கண்டு 10 நிமிடம் சித்ரகுப்தனை மனதால் நினைத்து
" ஓம் சித்ரகுப்தாய நமஹ" என்னும் ஸ்லோகத்தை பதினொறு முறை சொல்லி..
' தான் செய்த பாவங்கள் கடுகளவு குறைத்து ,புண்ணியங்கள் மலையளவு கூட்டிக் கொள்க' என்று வேண்டிக் கொண்டு ,மேற்கொண்டு இந்த வேண்டுதல்களையும் வேண்டிக்கொள்க
'மனதால் மற்றவருக்கு தீங்கு நினையாது ,செய்கின்ற ஒரு ஒரு செயலும் நல்ல செயல்களாக செய்து, தானதர்மங்கள் முடிந்தவரை செய்து, செய்தசெயல்களில் திருப்தி கொண்டு ஆன்மீக வழியில் நான் நடந்து மோட்சம் அடைவேன்.
சித்ரகுப்தா! இதுவரை செய்த பாவக் கணக்குகளை குறைத்துக் கொள்க புண்ணிய பலன்களை கூட்டிக் கொள்க' என வேண்டி ..
சொல் காத்து அதன்படி சொல்லிலும் செயலிலும் நடந்து பல நற்செயல்கள் செய்து சித்திர குப்தனின் ஆசியைப் பெறுவோம்.
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
10 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக