வெள்ளி, 16 ஏப்ரல், 2021

ராமேஸ்வரம் ஜோதிலிங்கம்

 

ராமேஸ்வரம் ஜோதிலிங்கம்



தென்னிந்திய திருத்தலமான ராமேஸ்வரம்  - திருத்தலங்களில் மிகவும் புகழ் வாய்ந்த திருத்தலமாகும்

நம்முடைய எண்ணங்களின் தரம் உயர்வாக இருந்தால் -லட்சியங்களும் உயர்வாக தான் இருக்கும். இலட்சியங்கள் உயர்வாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் .

சோதனைகள் வெற்றிக்கு முதல்படி என்பதும் அறிந்து கொண்டு  இலட்சிய பாதையில் நடந்து செல்வதற்கு தெய்வத்தின் அனுக்கிரகமும் நமக்கு கண்டிப்பாக வேண்டும் .

அவ்வாறு தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவதற்கு நம்மால் முடிந்தவரை  பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு அவனருள் பெறலாம்.

ராமேஸ்வரம் சேது தீர்த்தம்

ஜீவ சக்திகள் ,மூலிகை வாசம், சிவனின் அம்சம் அனைத்தும் மின்காந்த அலைகளாக நம் மனதிலும் உடலிலும் உயிரிலும் புகுந்து .. நம்மிடத்தில் இருக்கும் பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெற்று முழுமையான மங்கலம் நிறைந்த வாழ்வு தனை நாம் பெறக்கூடிய அற்புதமான தென்னிந்திய திருத்தலம் ராமேஸ்வரம்.

ராமேஸ்வரத்தில் சேது தீர்த்தம் பற்றி  அறியாதோர் அறிந்து கொள்க...

ராகு கேது களத்திர  தோஷம் இவை அனைத்தும் விலகி, அல்லது படாத ஆனந்த  வாழ்வு வேண்டும் என்ன வேண்டுவோர் , அனுதினமும் ஈசனை நினைத்து ஒரு முறை ராமேஸ்வரத்திற்கு சென்று சேது தீர்த்தத்தில் நீராடி- பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் வாழ்க்கை வளம் பெறும்.



அந்த பெருமை வாய்ந்த
புனித தலங்களில் தெய்வீக ஸ்தலமான ராமேஸ்வரம் எனும் அழகிய திருத்தலத்தில் நடக்கின்ற மற்றொரு அற்புதமும்  அறிந்து மனம் கனிவோம்.

தமையவன்  இராவணன் தவறு செய்கின்றான்.. என அறிந்து மனம் துவண்ட நல்ல மனம் குணம் படைத்தவன் விபீஷணன். அகத்தில் ஈஸ்வரன் நிறைந்தால் மட்டும் திருப்தி
  காணாது ராமேஸ்வரத்தில் லிங்கம்       ஒன்று.  பிரதிஷ்டை செய்ய     பிிிிிிிி

அந்த லிங்கமோ  ஜோதிலிங்கமாய் அருட்பெரும் ஆனந்தமயமாய் புகழ்பெற்று  இன்றும் விளங்க...

அதில்  எழுகின்ற அதிசய காட்சியை கண்களால் கண்டு மனம் மகிழ்வோம்.

மனதில் உள்ள தீமைகள் அனைத்தும் தீபமாய்  கரைந்து, நற்குணங்கள் ஆட்கொள்ள வேண்டும்- என உணர்த்தும் கற்பூர ஆரத்தி .  ராமேஸ்வரத்திலே  ஜோதிலிங்கத்தின் பின்புறத்தில் காட்டும் பொழுது ...

எங்கும் யாமே, எதிலும் யாமே சுற்றிலும் யாமே ,சுழல்வதும் யாமே  என ஈசனின் குரல் ஒலிக்கும் விதமாக பின்பக்கத்தில் காட்டப்படும் ஜோதி ஆனது , முன்புறமும் இளம் சிவப்பு நிறத்தில் ஒளி பிழம்பாய்  காட்சிதர..

அந்த தீபத்தை பார்க்க வேண்டும். இருகரம் கூப்ப வேண்டும் .கண்கள் பனிக்க வேண்டும். ஜோதியில் கரைய வேண்டும் .ஓம் நமசிவாய எனும் திருநாமம் ஓதவேண்டும் ஆன்மீக கடலில் மூழ்க வேண்டும்..அந்த ஆனந்த தருணம் வாழ்வில் நாம் கண்டால் இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ !

சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டும் யோகம் பெற தெய்வீக 10வழிபாட்டு முறைகள் 🙏🌹👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇

https://youtu.be/0p5op0-Zjwk

Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக