மனக் குழப்பங்கள் பயம், கெட்ட கனவு விலக ஆஞ்சநேயர் வழிபாடு
தேவையில்லாத பயம் மனக்குழப்பம் கெட்ட கனவு அனைத்தும் நீங்க
அனுமனை வணங்குங்கள் .
பயம் என்பது வாழ்க்கையில் மனிதனை நிம்மதி இல்லாது செய்துவிடும். தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபடும்போது, அந்த பயம் விலகி வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கூடுவதற்கான அனுகூலங்கள் கிடைக்கும்.
நம்முடைய பயம் அனைத்தும் விலகும்.
பெருமாள் கோவிலுக்கு 5 வாரம் தொடர்ந்து சென்று வாருங்கள்.
இரண்டு அகல் தீபம் ஏற்றுங்கள்.
நந்தியாவட்டம் மலர் அனுமனுக்கு சாற்றுங்கள.
நந்தியாவட்டை மலர் மிக அபரிதமான சக்தி தெய்வீக உண்டு.
அனைத்து தெய்வங்களுக்கும் மிக உகந்த மலர் நந்தியாவட்டம்.
அனுமனுக்கும் மிகவும் பிடித்தமான மலர். அந்த மலரை சாற்றும்போது நமக்கு வேண்டிய காரியங்களை ஜெயமாக்கி தருவார்.
அனுமன் ஸ்லோகத்தை படியுங்கள்
இந்த வழிபாடு நமக்கு நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும் .
அனைத்து பயமும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் .
வாழ்க்கையில் சோதனைகள் வரும் பொழுது, அதை நினைத்து கவலைப்படாதீர்கள்.
பயம் கொள்ளாதீர்கள்.
தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யுங்கள் .
அதற்கு தெய்வீக வழிபாடு மிகச்சிறந்ததாகும்.
நம்முடைய அனைத்து கவலைகளையும் தீர்த்து வைப்பவர் ஜெய் ஆஞ்சநேயர்.
அதனால் ஆஞ்சநேயரை மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற்று சிறந்த வாழ்க்கை வாழ்கவே.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக