சனி, 25 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் - 11

 திருப்பாவை பாசுரம் பாடல் -  11


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபு ற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்...

கன்றுகளோடு அளவளாவும் பசுக்களின் மடிதனில்   பால் கறப்பவனாகவும், பகைத்தவர்களை வரவேற்று  எதிர்த்து நின்று போரிடும் திறன் படைத்தவனும்,  மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!

 புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.

அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! இது நியாயமா!  அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது!


/>

நேற்று நடந்தது இன்று நடக்குமா ! இன்றைய மபொழுது நாளை வருமா!  சென்ற நேரம் தான்  திரும்பவும் கிடைக்குமா! நடக்காது... 

 நேரம் பொன்னானது மார்கழி மாதமோ!  ஒரு ஒரு தருணமும் பொன்னானது என்பதை நினைவு கூறுகின்றாள் கோதை.

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். 

ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும்... என்பதை நமக்கு புரிய வைக்க  திருப்பாவையில் ஸ்வரம் சேர்க்கின்றாள் கோதை.



 பரமனை கண்டால் நமக்கு மகிழ்ச்சியும் நம்மை கண்டால் பரமனுக்கு மகிழ்ச்சியும் கிடைத்தால் புண்ணியம் . மார்கழி மாதம் திருப்பாவை பாடுவோர்க்கு இந்த புண்ணிய பலன் கிடைக்கும். 

ஓசோன் காற்று விண்ணில் இருந்து தெய்வீக சக்தியை ஈர்த்து  நம்மிடத்தில் சேர்க்கும்‌ சுவாசம்தனை நாம் பெற சிறப்பான தனுர் மாதம் மார்கழி மாதம்.

 இந்த தெய்வீக மாதத்தில் ,  மகிழ்வான தருணங்கள் என்றும் வரட்டும் .  மகிழ்வற்ற  தருணங்கள் உடனே விலகட்டும் , என பெருமாளை வேண்டி   திருப்பாவை தினம் படிப்போம்.

மார்கழி மாத மேலும் அழகூட்ட,  சிறப்பு பெற அரசம் வேம்பு மரத்தடி பிள்ளையார் இடத்தில் அதிகாலை சென்று  மஞ்சள் திரி தீபம்(சுபிட்சம் பெருகும்)  விளக்கேற்றி திருப்பாவை பாட... நினைத்த காரியம் அனைத்தும் சுபமாக, வாழ்க்கை இனிதாக, செல்வ செழிப்பாக வாழ்க்கை மலர்ந்து மகிழ்ச்சியை காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக