வெள்ளி, 24 டிசம்பர், 2021

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் கலைகள் என்னென்ன!

 

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கலைகள்   ஐந்து



வீட்டுக் கலை
விருப்ப கலை
விளையாட்டு கலை
பள்ளிக் கலை
பங்கேற்பு கலை

குழந்தைகளுக்கு இந்த ஐந்து கலைகளும் கண்டிப்பாக கற்றுத்தரப்பட வேண்டும் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக வளர்வதற்கு பெற்றோர்கள் கொடுக்கக்கூடிய அடித்தளம் இது.

1 - வீட்டு கலைகள் என்றால் என்ன!


பெற்றோர்கள் பெரியவர்கள் இடத்தில் பணிவாய் நடத்தல்
மற்றவர்களுக்கு தானாக உதவி செய்தல்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் முறை
மீன் தொட்டிகள் வளர்த்தல்  , வீட்டுப் பிராணிகள் வளர்ப்பதற்கு கற்றுக் கொடுத்தல். வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தல்.

அனைத்தும் மிக சிறப்பான ‌வீட்டு கலைகள் . இவை குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க  ...அன்பு ,பண்பு ,பாசம் மரியாதை அனைத்து குணநலன்களும் பெறுவர்.

2 - விளையாட்டு கலை

குழந்தைகளுக்கு விளையாட்டு கலையின் முக்கியத்துவத்தை புரிய வைத்தல் அவசியம்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெறுவதற்கும் எதிர்காலத்தில் மனோதைரியம் கொண்டு அனைத்து சாதனை செய்வதற்கும் விளையாட்டுகலை  முக்கிய பங்கு வகிக்கின்றது .

ஓட்டப்பந்தயம் , கபடி , கராத்தே வாலிபால், டென்னிஸ் , செஸ்... போன்ற விளையாட்டு கலைகளில்.. குழந்தைகளுக்கு ஈடுபாடு உள்ள கலைகளில்  அவர்களை புகுத்தி எதிர்கால குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழி செய்வோம்.

3 - விருப்பக் கலை



 இசை என்பது நம்முடைய உயிரின்  ஒரு அங்கமாக திகழ வேண்டும். ஸ்ட்ரெஸ் என்று சொல்லக்கூடிய மன அழுத்தம் நம்மை பாதிக்காமல் காப்பதற்கு ஒரு உயிர் நாடி எது  என்றால் அது இசை . அந்த இசை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத் தரப்பட வேண்டும்.

நம்முடைய குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப  பரதம் பாட்டு இசை வயலின் பியானோ... போன்ற ஏதாவது ஒரு துறையில் குழந்தைகளின் மனம் லயித்து கற்றுக் கொடுத்தல் அவசியம். 

மன அழுத்தம் விலகி மகிழ்ச்சியோடு அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்கு விருப்ப கலை என்பது மிகவும் முக்கியம்.

4 - பள்ளிக்கலை

பள்ளிக்கலை  என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய மிகப்பெரிய தளம் .அதில் கல்வி கலையில்  குழந்தைகள் வெற்றி பெற்றால் பெற்றோருக்கும் கிடைத்த மாபெரும்  வெற்றி 

படிப்பின் அவசியத்தை உணர  வைத்தல் படிப்பறிவு ஊட்டும்  வழி முறைகளை கையாளுதல் பெற்றோரின் பங்கு மிக முக்கியம்

5 - பங்கேற்புக்கலை 

பங்கேற்புக்கலை என்பது பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற  குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். மனோபயம் விலகி தைரியம் தன்னம்பிக்கை நம்மால் முடியும் என்ற ஒரு உற்சாகம் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு இந்தப் பங்கேற்புகலை மிகவும் அவசியம்

அறுசுவை உணவு விருந்துக்கு அழகு என்பது போல் ஐஞ்சுவை கலைகள் குழந்தைகளுக்கு அழகு .

வீட்டு கலை, பங்கேற்பு கலைகளுக்கு எந்தவித பயிற்சியும் தேவையில்லை. பெற்றோர்களே நல்ல பயிற்சியாளர்கள்.

கல்விக்கலை என்பது  பணி சூழ்நிலை நேரமின்மை  காரணம் என்பதால்  பெற்றோரின் விருப்பத்திற்கு உரியது  நல்ல தரமான டியூஷன் வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள்  அனுப்புவது சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

 விருப்பக் கலை விளையாட்டுகலைகளுக்கு பயிற்சியாளர்கள் அவசியம் .அருகே நல்ல பயிற்சியாளர் நடத்தும் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கலாம். ஆன்லைன் வகுப்புகள் என நிறைய இருக்கின்றது .நன்றாக விசாரித்து குழந்தைகளை சேர்ப்பது நன்மைக்கு வழிவகுக்கும் .

அனைத்து கலைகளும் பெற்றவன் ஆசான். பிள்ளைகள் அனைத்து கலைகளும் பெற வேண்டும்‌ நல்ல ஆசானாக திகழ வேண்டும்‌ நல்ல பண்பாளன் சாதனையாளன் கலைத் திறன் படைத்தவன் எனும் பெயர் பெற்றவனாக பிள்ளைகள் வளர்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து வழி செய்யுங்கள்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக