புதன், 22 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் 8 8

 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் - 8



கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடி பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்...


எனும்  பேரானந்தத்தை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச் சிலையாய்் காட்சி அளிப்பவளே ! கிழக்கு வெளுத்து விட்டது. எருமைகளோ புல்லைத் தேடி  மேய்ச்சலுக்காக புறப்பட்டு  மைதானங்களில்  நிற்பததனை அறிவாயோ! என பொழுது புலர்ந்ததை  அறிவுறுத்தி பாவை நோன்பு இருக்க  தோழியரை அழைக்கின்றாள் கோதை.

எல்லாப் பெண்களும் நீராட காத்திருக்க  .... உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைத்தும் ஏன் இந்த தாமதம் தோழியரே துரிதமாய் நீராட வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றாள் கோதை

  குதிரை வடிவில் வந்த அரக்கன் கேசியின் வாயை பிளந்தவன் அன்றோ நம் கேசவன், அது மட்டுமா!  கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர்  உள்ளிட்ட மல்லவர்களையும் வென்றவன் அன்றோ  தேவாதி தேவன் கிருஷ்ணனை நாம் மனமுருகி  வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். ..

பெண்ணே! எழுந்திரு நேரமாகி விட்டது  நீராட வாருங்கள் என்று தம்முடைய அழகான திருப்பாவை பாசுரத்தில் எடுத்துரைத்து பாவையரை  பாவை நோன்பு இருக்க வரவேற்கின்றாள்  கோதை.

திருப்பாவை படிப்பதால் ஏற்படும் நன்மை என்ன!



அதிகாலை தூக்ககலக்கம் எழுந்திருக்க இயலாது சுகம் காண்பவர்  மத்தியில் 'எழுந்து தான் ஆகவேண்டும்.. இறைவனடி பற்றி தான் ஆக வேண்டும் நம் வாழ்வில் வெற்றி பெற்று நினைத்ததை சாதித்து தான் ஆக வேண்டும் 'என்ற குறிக்கோள் கொண்டு இந்த மார்கழி மாதத்தில் எழல் , திருப்பாவை படிப்பவர்கள்  மாபெரும் வெற்றியை பெற்று சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பதையே,  ஆ ஆ  என்று ஆராய்ந்து அருள் புரிவேன்.  உண்மையான பக்திக்கு என்றும் அடிபணிவேன் ,  என நாராயணனின் பறைசாற்றை ஆண்டாள் திருப்பாவையில் முன்வைக்கின்றாள்.

பரந்தாமனின் மார்பில் தவழ்கின்ற மகாலட்சுமி நெஞ்சத்தை அலங்கரிக்கும் மாங்கல்யத்தின்  பாக்கியத்தை மங்கையர்கள் அனைவரும் பெற்று சிறப்புற்று வாழ   பெண்கள் அதிகாலை நீராடி ஆண்டாள் நாச்சியார்  திருப்பாவை பாசுரம் பாடி பெருமாளை வழிபடுவது சிறப்பு.

மார்கழி மாதம் என்பது பீடை மாதமா!

பீடை மாதம் என்று சொன்னவர் யார் எவரோ! பரந்தாமன்  நானே சொல்கின்றேன் பகவத் கீதையில்  'மாதத்தில் நான் மார்கழியாய் திகழ்கின்றேன் 'என்று மார்கழியின் சிறப்பை பற்றி முன் மொழிந்தார் கிருஷ்ணன் அன்று...

அப்படிப்பட்ட மார்கழி மாதத்தின் சிறப்பு தனை நாம் உணர்ந்து , அதிகாலை துயிலெழுந்து, கங்கை நீராடி ,  குளிர்ந்த தென்றலில் உடல் சிலிர்க்க பெற்று, தூய ஆக்சிஜன் நாம் பெற்று, பூக் கோலம் பொலிவு பெற்று , மங்கள விளக்கு ஒளி பெற்று, சந்தனக் கீற்று குங்குமப்பொட்டின் தவழும் புன்னகை மலரப்பெற்று ஊதுபத்தி நறுமணத்தின்  வாசம் பெற்று , மனைதனில் வடம் பார்த்து அமர்ந்து..

திருப்பாவை பாசுரம் படித்து ஆண்டாள் நாச்சியாரின் அருமை தோழியாய்  பாடி மகிழ்ந்து நெகிழ்ந்து உருகி,   மார்கழி மாத நோன்பின் பயனை முழுமையாக நாம் பெற்று , பள்ளிகொண்ட திருமால்  ஸ்ரீ அரங்கநாதனின் அருள் பெற்று அனைவரும் வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்வில் புண்ணிய பலன்கள் பெற்று மகிழ்ந்து  நிறைவு காண்கவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக