ஸ்ரீராமஜெயம் எழுதுவது என்பது உளவியல் சம்பந்தப்பட்டதா!
ஸ்ரீராமஜெயம் எழுதுவதற்கு பின்னால் நிச்சயம் உளவியல் காரணம் உண்டு. நம் கர்மா என்றால் என்ன ! அதை ஏற்று வழி நடத்தும் வழிமுறைதான் என்ன என்று நமக்கு உணர்த்துவதற்கு பெருமாள் அவதாரம் எடுத்தாரே அன்றி நாம் அவரை பிரபலப்படுத்துவதற்காக பரப்பப்பட்டது அல்ல.
சில நொடிகள் ராமன் புகழ் பாடி, பிறகு கருவிற்கு விடை காண்போம் வாருங்கள்...
மகாவிஷ்ணு எவ்வளவோ அவதாரம் எடுத்து இருந்தாலும்பெரிதும்
போற்றப்படுவது ஸ்ரீ ராம அவதாரமே *
மனிதனாக பிறந்து விட்டால்'
எவ்வளவோ சோதனைகள்வந்தாலும் நீதிமுறை தவறாது வாழவேண்டும் 'என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக ,மகாவிஷ்ணு இந்த பூமியில் அவதாரம் எடுக்கின்றார்.
ஸ்ரீ ராம அவதாரம்* என்பது
தெய்வமே மனிதனாக பிறந்து வந்த ஒரு அவதாரம்
உண்மையை உணர்த்துகின்ற ஒர்அவதாரம்
சத்தியத்தைக் காக்கவந்த ஒரு அவதாரம்
மனதை நெகிழ வைக்கும் ஒரு அவதாரம்
நாட்டு மக்களுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த ஒரு அவதாரம் .
இராமாயணத்தில் நாம் பெறப்பட்ட செய்தி என்ன!
விதி பயனை அனுபவிக்க வேண்டும் என்பது மனித பிறவியின் சாராம்சம். இதனை ராம காவியம் நமக்கு போதித்தது.
சராசரி மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களையும் ராமன் அனுபவித்த போதும் அவருடைய முகம் தாமரை போன்ற மலர்ந்தே இருந்தது என்கின்றது கம்பராமாயணம்.
ராமன் என்றால் பொறுமையாய் இரு நிதானத்தை இழக்காதே .
ஜெயம் என்றால் வெற்றி.
ராம நாமத்தை முழு நேரமும் ஜெபித்து கொண்டே இருந்ததால் ஹனுமனுக்கு வெற்றி கிடைத்தது. இந்த இடத்தில் நமக்கு இரு சக்திகள் ஒருசேர கிடைக்கின்றது. எம்பெருமான் நாராயணன் , அவன் பக்தன் ஹனுமன் ஆக இரு சக்திகள் ஒருங்கிணைக்கிறது.
ஸ்ரீ ராம ஜெயம் மனத்தால் ஜபிக்கும் பொழுதும், எழுதும்பொழுதும் நமக்கு மனோதைரியம் கிடைக்கின்றது. நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். நம்முடைய பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேரும் .சகல நன்மைகளும் சுபீட்சங்களும் தங்களின் வாழ்க்கையில் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
உளவியல் என்றால் மனம் சம்பந்தப்பட்டது . ஸ்ரீராமஜெயம் ஜெபிக்கும்போது எண்ணங்கள் ஜெயமாகும். மனம் அமைதி பெறும். இதுதான் உளவியல் உண்மை.
சனிக்கிழமை பெருமாளுக்கும் ஸ்ரீ ஹனுமனையும் மனதால் நினைத்து ராமஜெயம் ஜெபித்து , மன அமைதி பெற்று, வாழ்க்கையில் நினைத்த காரியம் வெற்றி பெற்று , தெய்வத்தின் அனுகூலமான பலன்கள் யாவும் பெற்று , பிறந்த வாழ்வில் நிறைவு காண்போம்
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக