திங்கள், 3 ஜனவரி, 2022

மற்றவர்களிடம் பேச தயக்கமாக உள்ளதா!

 பண்டிகை விழாக்கள் பிறந்த நாள் என ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை! மன அழுத்தம் சொல்லமுடியாத வேதனை, மனச்சோர்வு ,உடல் இயலாமை, கூச்சம் தெளிவு இன்மை போன்ற பல காரணம் உங்களுக்கு இருக்கலாம்.  ‌ இருந்தாலும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற  தெளிவோடு நான் எழுதும் பதிவு இது...


மனதினில் என்ன சோகம் ! வாழ்க்கையின் வலிமை தானே மறந்தாயா!  உள்ளிருக்கும் உணர்வுகளை உனக்கு பிடித்த மானவர்களிடம் பகிர்ந்து கொள்.

 தினமும் கண்ணாடியில் உன் முகம் பார்.  உனக்கு என்ன குறை ! சாதிக்கப் பிறந்தவள்  நீ .உனக்கு பிடித்தமான துறையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்க... ஏன் இந்த சங்கடம்! ஏன் இந்தக் கூச்சம்! யாருக்கு பயம் ..உன் மனதோடு அடிக்கடி பேசிப் பழகு .


தினமும் சூரிய நமஸ்காரம் செய்.  நீ சூரியனாக இரு. மேகக்கூட்டங்கள் அடிக்கடி உன்னை மறக்கலாம். துன்பங்கள் அடிக்கடி உன்னிடத்தில் வந்து போகலாம் .மேகக்கூட்டங்கள் உன்னை மறைப்பது போன்று துன்பங்கள் அடிக்கடி உன் வாழ்க்கையில் விளையாடலாம். ஆனால் அது நிரந்தரம் இல்லை மேகக்கூட்டம் மறைவது போல் கலைவது போல்,  எதை நோக்கியோ ஓடிக்கொண்டே இருப்பது போல் உன்னுடைய துன்பங்களும் மறைந்துவிடும் . கலைந்துவிடும் .கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும் என்பதை நினைவில் கொள் .


நீ சூரியனைப் போன்று என்று பிரகாசிக்க கூடியவள்(ன்)  உன்னுடைய திறமை உலகத்திற்கு எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி உன்னிடத்தில் இருக்க வேறு இடத்தில் தேட முயற்சிக்காதே. 




எனக்கு இசை மிகவும் பிடிக்கும் கிருஷ்ணருடைய படங்கள் பார்த்தால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். அதுபோல் தங்களுக்கு பிடித்தமான சில நல்ல விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் தினமும் அரை மணி நேரம் உங்களுக்கு பிடித்தமான படம் பார்ப்பது இசை கேட்பது உங்கள் மனதை உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள்.



பண்டிகை விழாக்களில் நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்!  ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரிகர்சல் எடுத்துக்கொள்ளுங்கள் . அங்கு நீங்கள் நடக்க வேண்டிய முறைகளைப் பற்றி ஒரு வரையறை படுத்துங்கள் .


 அன்று நீங்கள் அனைவரிடத்திலும் அப்பாற்பட்டு தனியாக தெரிய வேண்டும் . உற்சாகம் உங்கள் ஆழ் மனதில் எழுச்சி பெறவேண்டும் மகிழ்ச்சி உங்கள் துள்ளலில் இருக்க வேண்டும். அமைதி கலந்த அழகு என்பது அனைவருக்கும் வந்து விடாது . அப்படித்தான் இருக்க வேண்டும். அதையும் சற்று நினைவு கொள்ளுங்கள்..


 இவையெல்லாம் நினைத்து  எப்படி பேசவேண்டும்,  எப்படி பழக வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு பத்து நிமிடம் கண்ணாடியின் முன் நின்று உன் வடிவத்தை   உன் மனதை திறந்து மகிழ்ச்சியோடு உன்னையே நீ காண்.  


ஒரு வாரம் இப்படி செய்து பார்.. விசேஷங்களில் நீ மகிழ்ச்சியோடு இருப்பாய் ‌ஆனந்தத்தில் நிறைவு காண்பாய் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.



இந்த பதிவு விசேஷங்களில் நடந்து கொள்வதில் மட்டுமல்ல ... இளைய சமுதாயத்தில் இருந்து முதிய சமுதாயம் வரை அனைவரும் உணர்ந்து மகிழ்ச்சியோடு இருப்பதற்கு இந்த பதிவானது உங்களுக்கு கை கொடுக்கும் . 

 உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பதிவு  இருந்தால் எழுதிய எழுத்துக்கள் மகிழ்ச்சி காண்பேன் ‌

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக