திங்கள், 7 ஏப்ரல், 2025

பிள்ளைகளுக்கான பொது அறிவு அதிகரிக்க வேண்டுமா!

 

5 முதல் 10 வயது பிள்ளைகளுக்கான பொது அறிவு அதிகரிக்க வேண்டுமா! 




பெற்றோர்களுக்கான வழிகாட்டி 

அன்புள்ள பெற்றோர்களுக்கு வணக்கம் . உங்கள் பிள்ளைகளுக்கு படிப்புடன் கூடிய பொது அறிவை வளர்ப்பதற்கு பெற்றோராகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன! உங்கள் குழந்தைகள் அவர்களை பற்றிய விவரங்களை அவர்களே சொல்வதற்கு கற்றுக் கொடுங்கள். 



  1. தன்னைப் பற்றி அறிவது:

    • பெயர்

    • வயது

    • தந்தையின் பெயர்

    • தாயின் பெயர்

    • வீட்டின் முகவரி

    • பள்ளியின் பெயர் & வகுப்பு

    • பெற்றோர் தொடர்பு எண்

ஒன்று முதல் பத்து வயது வரை உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு 

உங்கள் பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்

நாம் அனைவரும் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகவே கல்வியை கற்றுக் கொள்கிறோம். ஆனால் கல்வியுடன் பொது அறிவும் (General Knowledge) மிக முக்கியம்! அதற்கான முதல் அடிப்படை குழந்தைகளுக்கு தங்களைப் பற்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

எதை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்?

  1. தன்னை அறிமுகப்படுத்தும் திறன்

    • என் பெயர் என்ன?

    • எனது தந்தை, தாய் பெயர்

    • நான் எந்த பள்ளியில், எந்த வகுப்பில் படிக்கிறேன்?

    • எனது வயது, பிறந்த தேதி

இரண்டாவதாக  தயங்காமல் மற்றவர்களிடத்தில் தைரியமாக பேசுவதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் தயார் படுத்துங்கள்


    •  எனக்கு  பிடித்த விஷயம், பிடித்த உணவு, பிடித்த விளையாட்டு

 என்ன என்பதையும் உங்கள் பிள்ளைகள் சொல்லும்பொழுது பிள்ளைகளின் அறிவுத்திறன் மேம்படுகிறது.




  1. எந்த சூழலில் உங்கள் பிள்ளைகள்  பேச தெரிந்து கொள்ள வேண்டும்?

    • குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களிடம்

    • பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் முன்பு

  2. அதுபோல்

    • பொதுவாக நிகழ்ச்சிகளில்,  மற்றும் போட்டிகளில்   கலந்து கொள்வதற்கும்  இந்த கோடை விடுமுறை காலத்தில் உங்கள் பிள்ளைகளை தயார் படுத்தலாம்.





  1. எழுதிக் பழகுவதன் முக்கியத்துவம்

    • குழந்தைகள் தங்களை பற்றிய விவரங்களை எழுத வைப்பது முக்கியம்.

    • இது அவர்களின் மதிப்பீடு எழுதும் திறனை வளர்க்க உதவும்.

    • பள்ளி தேர்வுகளிலும், பேச்சுத்திறன் போட்டிகளிலும் இது உதவியாக இருக்கும்.


இந்தக் கோடை விடுமுறை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் ஒரு பாலமாக அமைய வேண்டும் உங்கள் பிள்ளைகளை வழி நடத்துவதற்கான நேரமாக நினைவில் கொண்டு மிகுந்த பயனுடன் செலவிடுங்கள்.


அதற்காகப் பெற்றோராக நாம் செய்ய வேண்டியது என்ன ?

 தினமும்ஒரு மணி நேரமாவது உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.
புத்தகங்களைப் படிக்க வையுங்கள்.
 குறுகிய வாக்கியங்களில், தெளிவாக பேசுவதற்கான உச்சரிப்பை கற்றுக்கொடுங்கள். கையெழுத்து பயிற்சி தினமும்  எழுத வைப்பது அடுத்தவகுப்பில் அவர்கள் திறன்பட எழுதுவதற்கு   எளிதாக கைகொடுக்கும்.


நன்றி .

பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக